Thursday, November 17, 2005

விதியென்பது

ஒரு மதுக்கோப்பையில்
வானத்தை வார்த்து
ஊற்றிவிடுவதுப்போல்

ஒரு அண்டத்தையே
கண்மயிரில்
கட்டியிழுப்பதுபோல்

தன் வலிமையின்
உச்சநிலைக்குள்ளாக
தள்ளப்பட்டு
எச்செயலையும்
நிகழ்த்திக் காட்டிவிட்டு

அமைதியாகவே
இருந்துவிடுகிறது விதி

2 comments:

  1. விதியின் வலிமையில்
    என்றைக்கு ஐயா நம்பிக்கை வைக்க
    ஆரம்பித்தீர்?

    என்ன ஒரு மூடத்தனம்?

    அதுவும் கவிமதியிடமிருந்து?

    ReplyDelete
  2. அன்புடையீர்,

    நாங்கள் ஆழி பதிப்பகத்திலிருந்து தொடர்புகொள்கிறோம். அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை போட்டி தொடர்பாக உங்களுக்கு ஒரு மடல் அனுப்பவேண்டும். தங்கள் மின்னஞ்சல் முகவரியை sujatha.scifi@gmail.com க்கு அனுப்புங்கள். தொடர்புகொள்கிறோம்.

    நன்றி

    ReplyDelete