Sunday, March 04, 2018

மீண்டும் வலைப்பூ உலகத்திற்கு...

ஆயிற்று ஆண்டுகள் சில

கடைசியாக எப்போது என் வலைப்பூவை திறந்தேன் என எனக்கே நினைவில்லாத போது சக தோழழைகளில் சிலர் என் வலைப்பூவுக்கு வந்து வாசித்து சென்றுக்கொண்டிருப்பதை நினைக்கையில் இன்னும் இந்த வலைப்பூ உலகம் செயல்பட்டுக் கொண்டிருப்பது அறிந்து மகிழ்ச்சியே.

மின்னனு எழுத்துலகம் தொடங்கிய போது நாங்கள் இந்த வலைப்பூ வழியே தான் எங்கள் எழுத்துக்களை பதிவேற்றினோம். சுமார் ஒரு அய்ந்து ஆண்டுகள் இதில் பயணித்ததில் நிறைய கற்றுக்கொண்டேன். புத்தகங்கள் கிடைப்பது அரிதாகிவிட்ட அரபுநாடுகளில் வலைதளங்கள் மூலம் நிறைய வாசிப்புகளை தொடர்ந்து கொள்ள இலகுவானது இந்த வலைப்பூக்கள் தான்.

பிரபலங்களின் எழுத்துக்கள் மட்டுமே எழுத்துகள் என ஒரு சார்புடைய மனநிலை இருந்த காலங்களில் புதிய புதிய எழுத்தாளர்களையும் அவர்தம் படைப்புகளையும் உலகறிய செய்ததில் இந்த வலைப்பூக்களுக்கு நிகர் இல்லை.

இப்படி தனிபெரும் படைப்புகலகில் வலைப்பூக்கள் கோலோச்சிக்கொண்டிருந்த வேலையில் இதை தொடர்ந்து வந்த முகநூல் அனைவரது வாசிப்பையும் முடக்கி, வலைப்பூ எழுதும் பழக்கத்தினையும் முடக்கியது என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். என்னதான் முகநூலில் உடனடி “விருப்புகள்” நிரைய கிடைத்தாலும் நாம் எண்ணுகிற வகையிலான நீள் கட்டுரைகள் மற்றும் ஆக்கங்களை முகநூலில் எழுதுவதில்லை. பல முன்னனி எழுத்தாளர்கள்கூட தங்களது வலைதளங்களிலிலோ, வலைப்பூக்களிலோ தங்களது ஆக்கங்களை எழுதி அவற்றின் தொடுப்புகளை முகநூலில் பதிவதையே பார்த்திருக்கிறோம்.

இது ஒருவகையில் முற்றுலும் உண்மை. முகநூல் பக்கத்தில் மிக குறைந்த பத்திகளுக்கு மேல் எழுத இயலாது அப்படியே எழுதினாலும் வாசிக்க மாட்டார்கள். ஏனெனில் வலைப்பூ பிரியர்களுக்கு இருக்கும் வாசித்தல் பொருமை முகநூல் வாசிப்பாளர்களுக்கு இருப்பதில்லை. எப்படிபட்ட ஆக்கமாக இருந்தாலும் முகநூலில் ஒரு சில வரிகளில் மிக சுருக்கமாக சொல்லியே ஆகவேண்டும் என்பது ஒரு கட்டாயமான எழுத்து சுருக்கமே.

தொடர்ந்து முகநூலில் பயணித்து கொஞ்டம் சோர்வு அடைந்தாலும் முகநூலை விட்டு அகளாமல் அதே வேலையில் தேங்கிப்போன எண்ணபதிவுகளை மீண்டும் தொடர்ந்து வலைப்பூவில் எழுதி பதிவேற்றலாம் என்கிற சிந்தனையில் தான் இந்த மீண்டும்  வலைப்பூ உலகத்திற்கு.... என்கிற தொடக்கம்.

இதை ஒரு கடுமையான பத்தியமாகவே கடைப்பிடிக்க என்னுகிறேன். வழக்கப்படி பணி சுமைகளுக்கு நடுவே காலம் தான் என்னை தொடர்ந்து வலைப்பூ எழுத அனுமதி தரவேண்டும்.

எழுதுவேன் என்கிற நம்பிக்கையில் எப்போதும் போல உங்களோடு பயணிக்கிறேன்.

நன்றி.


2 comments:

  1. கண்டிப்பாக இப்போதே செய்துவிடுகிறேன்.
    நன்றிகள்.

    ReplyDelete