கவிஞர் சுகிர்தராணி-நம் நவீன தமிழ் இலக்கிய உலகில் சில அதிர்வுகளின் அடையாளம்.
"கைப்பற்றி என் கனவுகேள்", "இரவு மிருகம்" "அவளை மொழிபெயர்த்தல்" ஆகிய மூன்று தொகுதிகளாக அவருடைய கவிதைகள் வெளியாகியுள்ளன. பிறப்பினால் தலித்தாக அறியப்படும் சுகிர்தராணியின் கவிதைகள் இன்று பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளன. பெண் உடல் மொழி பற்றியும், தலித் விடுதலை பற்றியும் இவர் எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுபவை.
----------------------------------------------------------------------------------------------------------------------
"என் கண்களின் ஒளிக்கற்றைகள்
முன்னறையில் உறங்குபவனின்
ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன.
கோப்பை நிறைய வழியும் மதுவோடு
என்னுடல் மூழ்கி மிதந்தது.
கூசும் வார்த்தைப் பிரயோகங்களை
சன்னமாய் சொல்லியவாறு
சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
பறவைகளின் சிறகோசை கேட்டதும்
என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு
ஓடிவிட்டது இரவு மிருகம்"
என்பதைப் போல உடல் மொழி கவிதைகளையும்
"செத்துப்போன மாட்டைத்
தோலுரிக்கும்போது
காகம் விரட்டுவேன்
வெகு நேரம் நின்று வாங்கிய
ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு
சுடுசோறெனப் பெருமை பேசுவேன்
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் மறைத்துக் கடந்துவிடுவேன்
அப்பாவின் தொழிலும்
ஆண்டு வருமானமும்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடி வாங்குவேன்
தோழிகளற்ற
பின் வரிசையிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்
இப்போது
யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்
பறச்சி என்று"
என்கிற தலித்தியம் சார்ந்த கவிதைகளையும் மிகவும் துணிச்சலாகவே எழுதி ஒரு பெரும் கவனிப்புக்கு உள்ளாகி இருப்பவர் சுகிர்தராணி.
--நன்றி
அதிகாலை.காம்
Monday, June 30, 2008
Friday, June 20, 2008
விடுதலை பிறந்தது
கோடியில் புரலும் அரசியல், ஆன்மீக நயவஞ்சகர்களுக்கு
மத்தியில் கோடிக்கணக்கான எம் மக்களின் ஒற்றைக்குரல்
அண்ணன் தொல்.திருமாவளவன்.
தொன்மத் தமிழின் தூய்மை அரசியல் வாழ்வில் இருபத்தைந்தாவது ஆண்டுகளை கடந்து எம் தமிழுக்காக, எம் தமிழினத்திற்க்காக, எம் மண்ணுக்காக, எம் உரிமைக்காக போராடிவரும் சூழலில் நாமும் அவருடன் கைக்கோர்த்து பார்ப்பனிய இந்துத்துவாவிற்கு எதிராகவும், இந்திய அரசியல், மதசார்பின்மை என்கிற அயோக்கியத்தனங்களுக்கு எதிராகவும் களமிறங்கி போராட கடமைப்பட்டிருக்கிறோம் என்பதனை நினைவுக்கூர்ந்து.அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களை வாழ்த்தி எம் இனத்தின் ஒட்டு மொத்த வாழ்த்தாக இப்பாடலையும் சமர்ப்பிக்கிறேன்.
--------------------------------------------------------
விடுதலை பிறந்ததடா
செம்மொழியாய் இனித்திடவும்
சிதைப்போரை அழித்திடவும்
எம் மொழியும் கானாத
எழுச்சிதனை
அடைந்திடவும்
பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா
சிந்தைனையின் ஒளியாகி
சிறுத்தைகளின் தாயாகி
வஞ்சனைகள் செய்வோரை
வகுத்தெடுக்கும்
வாளாக
பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா
அடிமையல்ல நாங்கள் யார்க்கும்
என்றும் ஆளுகின்ற வர்க்கமென
களம் அமைத்து போராடி
நிறம் அழித்து நிமிர்ந்து நிற்க
பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா
காவிரிகள் காய்ந்து கிடக்க
கர்நாடகம் தர மறுக்க
வற்றாத வான்மழையாய்
பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா
புனித புத்தன் தொடரினிலே
புரட்சி சிறுத்தை அம்பேத்கர்
பெரியாரின் பெரும் நிழலாய்
பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா
வருமா வருமா விடுதலையென்று
வாய் பிளந்து நிற்கையிலே
‘’திருமா’’ உருவில் திரும்பவந்து
பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா
மத்தியில் கோடிக்கணக்கான எம் மக்களின் ஒற்றைக்குரல்
அண்ணன் தொல்.திருமாவளவன்.
தொன்மத் தமிழின் தூய்மை அரசியல் வாழ்வில் இருபத்தைந்தாவது ஆண்டுகளை கடந்து எம் தமிழுக்காக, எம் தமிழினத்திற்க்காக, எம் மண்ணுக்காக, எம் உரிமைக்காக போராடிவரும் சூழலில் நாமும் அவருடன் கைக்கோர்த்து பார்ப்பனிய இந்துத்துவாவிற்கு எதிராகவும், இந்திய அரசியல், மதசார்பின்மை என்கிற அயோக்கியத்தனங்களுக்கு எதிராகவும் களமிறங்கி போராட கடமைப்பட்டிருக்கிறோம் என்பதனை நினைவுக்கூர்ந்து.அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களை வாழ்த்தி எம் இனத்தின் ஒட்டு மொத்த வாழ்த்தாக இப்பாடலையும் சமர்ப்பிக்கிறேன்.
--------------------------------------------------------
விடுதலை பிறந்ததடா
செம்மொழியாய் இனித்திடவும்
சிதைப்போரை அழித்திடவும்
எம் மொழியும் கானாத
எழுச்சிதனை
அடைந்திடவும்
பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா
சிந்தைனையின் ஒளியாகி
சிறுத்தைகளின் தாயாகி
வஞ்சனைகள் செய்வோரை
வகுத்தெடுக்கும்
வாளாக
பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா
அடிமையல்ல நாங்கள் யார்க்கும்
என்றும் ஆளுகின்ற வர்க்கமென
களம் அமைத்து போராடி
நிறம் அழித்து நிமிர்ந்து நிற்க
பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா
காவிரிகள் காய்ந்து கிடக்க
கர்நாடகம் தர மறுக்க
வற்றாத வான்மழையாய்
பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா
புனித புத்தன் தொடரினிலே
புரட்சி சிறுத்தை அம்பேத்கர்
பெரியாரின் பெரும் நிழலாய்
பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா
வருமா வருமா விடுதலையென்று
வாய் பிளந்து நிற்கையிலே
‘’திருமா’’ உருவில் திரும்பவந்து
பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா
Labels:
வாழ்த்துகள்
Friday, May 23, 2008
இது எரிமலை பசி.
தன் மண்ணை விட்டு சென்றாலும் மண்ணின் மணம் மாறாத இலக்கியம் படைக்கவும்.தான் சார்ந்த இயக்கத்தின் கோட்பாடுகளைவைத்து இளைய சமூகத்திற்கு தன்னால் இயன்ற தொண்டு செய்திடவேண்டுமென்கிற கடமையுணர்வும் எல்லோருக்கும் வருவதில்லை. தான் தன் குடும்பம் என்று தன்நல சிந்தனைகளிலேயே சுருங்கிவிடாது, தன் உழைப்பு, பொருளாதாரம் என்று சமூக நலனுக்காக செலவிடுகிற ஆண்மையும் எல்லோருக்கும் வாய்த்துவிடாது.
சிறு வயது முதலே தன் கண்முன் நடக்கும் வன்கொடுமைகள், சாதி திணிப்புகள், அரசியல் அட்டூழியங்கள் என்று கண்டு கண்டு செரிக்கமாட்டாமல் அவற்றிக்கு எழுத்துக்களால் பதிலடி கொடுப்பதுதென்பது ஆயிரத்தில் ஒருவருக்கு உண்டாகும் உணர்வின் கொதிநிலை. வெந்த சோறும் விதிவந்தால் சாவும் என்பது இனியவன் போன்றவர்களுக்கு பொருந்தாது. இது சமூக எழுச்சிக்கான எரிமலை பசி என்றும் அடங்காது எதற்கும், எவனுக்கும் அடிபணியாது.
எழுத்தார்வமும், தன் சமூகத்திற்கு தன்னால் இயன்ற அளவில் ஏதாவது செய்யவேண்டும் என்கிற தொண்டார்வமும் இனியவன் கட்டுரைகளிலும், கவிதைகளிலும வெளிபட்டுகிடக்கிறது. ஏறக்குறைய தான் நேசித்த தலைவர்கள் தொடங்கி தன் துணைவியார் வரை எல்லோருக்கும் கவிதை எழுதியிருக்கிறார். சிலரின் படைப்புகளில் பெரும்பாலும் முடிவில்லாத ஊசலாட்ட தன்மையே வெளிப்படுவதுப் போன்ற தவற்றை இனியவனும் செய்திருக்கிறார். இதனால் இனியவன் எந்த கொள்கையின் தளத்தில் நின்று பேசுகிறார் என்பது முழுமைபெறவில்லை. அதிலும் குறிப்பாக முஸ்லீக்கிற்கு வக்காலத்து வாங்குவதென்பனை முஸ்லீம் இளைஞர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது தெளிவு. ஏனெனில் பல சந்தர்ப்பங்களில் தன் சொந்த வருமானத்திற்காக லீக்கை அடமானம் வைத்ததால்தான் இன்று பல மறுமலர்ச்சி இயக்கங்கள் தோன்றின என்பதனை அறிவோம். முஸ்லீம் லீக் என்ற மரியாதை தலைவர் காயிதே மில்லத் அவர்களோடு முடிடைந்துவிட்டது என்பதே உண்மை.
மேலும் தான் சார்ந்த மதத்திற்கும், மத நல்லிணக்கம் என்கிறதான ஏமாற்றுவேலைக்கும் துணைப் போவதுப்போல் இராமன், சிவன், பிள்ளையார், முருகன் எல்லோரும் இறைத்தூர்களே அவர்களின் புதல்வர்களே என்று எழுதிருப்பது பகுத்தறிவிற்கு அப்பற்பட்ட செய்தியாகவே படுகிறது. இராமன் என்பது ஏதோ குறுதியும் சதையுமாக வாழ்ந்த ஒன்று என்கிற சப்பைகட்டுகள் தேவையில்லை. இணையற்ற வீரர் திரு. திப்பு சுல்தான் அவர்களையே கற்பனை பாத்திரம் என்கிறான். நன்கு புராணங்களை கற்றறிந்த பரமஹம்சர் போன்றவர்களே இராமன் ஒரு கற்பனை பாத்திரம், இந்து மதம் என்கிற கட்டமைப்பே தவறானது என்று வாக்குமூலம் தருகின்ற தருவாயில், இனியவன் போன்ற இஸ்லாமிய சிந்தனையுள்ளவர்கள் தங்கள் நூல்களில் மேற்கண்டவர்களை இறைத்தூதர்கள் என்று பதிவுக்குள்ளாக்குவது தவறு.
இது வருங்கால சூழலில் உண்மையென்றாக்க யாராவது முயன்றால் அதற்கு இனியவன் போன்றோரின் நூலும் ஆதாரமாகிவிடும். நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய மவ்லவி மு.ஹதீஸ் மஸ்லஹி, ஆனாரூனா ஆகியவர்களும் இதை திருத்தாததுதான் வியப்பு.
எதிர்வரும் காலங்களில் தன் படைப்புகளில் இப்படிபட்ட வரலாற்று குறைபாடுகளை நீக்கியும், முற்றிலுமாக தவிர்த்தும் வெற்றி நடைபோட என்றும் வாழ்த்துகள்.
தோழமையோடு
கவிமதி (துபாய்)
நூல்: விழித்தெழு உணர்வுகொள் உருவாக்கு
ஆசிரியர்: இனியவன் ஹாஐ¢முஹம்மது.
மின்னஞ்சல்:iniyavan_haji@hotmail.com
சிறு வயது முதலே தன் கண்முன் நடக்கும் வன்கொடுமைகள், சாதி திணிப்புகள், அரசியல் அட்டூழியங்கள் என்று கண்டு கண்டு செரிக்கமாட்டாமல் அவற்றிக்கு எழுத்துக்களால் பதிலடி கொடுப்பதுதென்பது ஆயிரத்தில் ஒருவருக்கு உண்டாகும் உணர்வின் கொதிநிலை. வெந்த சோறும் விதிவந்தால் சாவும் என்பது இனியவன் போன்றவர்களுக்கு பொருந்தாது. இது சமூக எழுச்சிக்கான எரிமலை பசி என்றும் அடங்காது எதற்கும், எவனுக்கும் அடிபணியாது.
எழுத்தார்வமும், தன் சமூகத்திற்கு தன்னால் இயன்ற அளவில் ஏதாவது செய்யவேண்டும் என்கிற தொண்டார்வமும் இனியவன் கட்டுரைகளிலும், கவிதைகளிலும வெளிபட்டுகிடக்கிறது. ஏறக்குறைய தான் நேசித்த தலைவர்கள் தொடங்கி தன் துணைவியார் வரை எல்லோருக்கும் கவிதை எழுதியிருக்கிறார். சிலரின் படைப்புகளில் பெரும்பாலும் முடிவில்லாத ஊசலாட்ட தன்மையே வெளிப்படுவதுப் போன்ற தவற்றை இனியவனும் செய்திருக்கிறார். இதனால் இனியவன் எந்த கொள்கையின் தளத்தில் நின்று பேசுகிறார் என்பது முழுமைபெறவில்லை. அதிலும் குறிப்பாக முஸ்லீக்கிற்கு வக்காலத்து வாங்குவதென்பனை முஸ்லீம் இளைஞர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது தெளிவு. ஏனெனில் பல சந்தர்ப்பங்களில் தன் சொந்த வருமானத்திற்காக லீக்கை அடமானம் வைத்ததால்தான் இன்று பல மறுமலர்ச்சி இயக்கங்கள் தோன்றின என்பதனை அறிவோம். முஸ்லீம் லீக் என்ற மரியாதை தலைவர் காயிதே மில்லத் அவர்களோடு முடிடைந்துவிட்டது என்பதே உண்மை.
மேலும் தான் சார்ந்த மதத்திற்கும், மத நல்லிணக்கம் என்கிறதான ஏமாற்றுவேலைக்கும் துணைப் போவதுப்போல் இராமன், சிவன், பிள்ளையார், முருகன் எல்லோரும் இறைத்தூர்களே அவர்களின் புதல்வர்களே என்று எழுதிருப்பது பகுத்தறிவிற்கு அப்பற்பட்ட செய்தியாகவே படுகிறது. இராமன் என்பது ஏதோ குறுதியும் சதையுமாக வாழ்ந்த ஒன்று என்கிற சப்பைகட்டுகள் தேவையில்லை. இணையற்ற வீரர் திரு. திப்பு சுல்தான் அவர்களையே கற்பனை பாத்திரம் என்கிறான். நன்கு புராணங்களை கற்றறிந்த பரமஹம்சர் போன்றவர்களே இராமன் ஒரு கற்பனை பாத்திரம், இந்து மதம் என்கிற கட்டமைப்பே தவறானது என்று வாக்குமூலம் தருகின்ற தருவாயில், இனியவன் போன்ற இஸ்லாமிய சிந்தனையுள்ளவர்கள் தங்கள் நூல்களில் மேற்கண்டவர்களை இறைத்தூதர்கள் என்று பதிவுக்குள்ளாக்குவது தவறு.
இது வருங்கால சூழலில் உண்மையென்றாக்க யாராவது முயன்றால் அதற்கு இனியவன் போன்றோரின் நூலும் ஆதாரமாகிவிடும். நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய மவ்லவி மு.ஹதீஸ் மஸ்லஹி, ஆனாரூனா ஆகியவர்களும் இதை திருத்தாததுதான் வியப்பு.
எதிர்வரும் காலங்களில் தன் படைப்புகளில் இப்படிபட்ட வரலாற்று குறைபாடுகளை நீக்கியும், முற்றிலுமாக தவிர்த்தும் வெற்றி நடைபோட என்றும் வாழ்த்துகள்.
தோழமையோடு
கவிமதி (துபாய்)
நூல்: விழித்தெழு உணர்வுகொள் உருவாக்கு
ஆசிரியர்: இனியவன் ஹாஐ¢முஹம்மது.
மின்னஞ்சல்:iniyavan_haji@hotmail.com
Labels:
áø Å¢Á÷ºÉõ
Saturday, April 26, 2008
அறிவியலா? ஆன்மீகமா?
உனக்கென்று ஒரு கொள்கையை தேர்ந்துதெடுத்துக்கொள் இல்லாவிடில் எவனெவனோ சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் படியாகலாம்” என்று எங்கோ படித்த ஒரு செய்தி இப்போது நினைவிற்கு வந்து தொலைக்கிறது.
மனித இனம் தோன்றியதாக மனிதனே! அறிந்து சொன்ன காலம் முதல் அவன் தலையில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு, தலை கீழே உருளும்வரை இறங்கமால் இருக்கும் இந்த சாதி மதங்கள் மனித இனத்திற்கே தீங்கானவையென பல சமூக அக்கறையுள்ளவர்கள் சொன்னாலும், அவர்களும் தங்கள் கடமைக்கு போகிறப்போக்கில் ஏதாவது ஒரு மதத்திற்கு வக்காலத்து வாங்கிவிட்டு தன்னை நம்பிய மக்களை நரி வாயிலிருந்து பிடிங்கி முதலை வாயில் திணித்துவிட்டு தங்கள் கண்களை மூடிக்கொள்வர்.
எல்லாம் ஏமாற்றுவேலை, எல்லாம் உன்னை சுரண்டும் வேலை, எல்லாம் பெண்களை அடிமைப்படுத்துவது, எல்லாம் ஒரு சாரரருக்கு மட்டுமே உரியவகையில் உள்ளது, மத விடுதலையும், பெண் விடுதலையும் தான் உண்மையான மனித விடுதலை என்று மதங்களில் உள்ள அத்துனை திள்ளு முள்ளுகளையும் எடுத்துக்கூறி மதங்களின் தலையில் மாறி மாறி செருப்பால் அடித்த பெருமை எம் தந்தை பெரியாருக்கே சேரும். அவர் வாங்கிக்கொடுத்த கல்வியாலும், அறிவாலும்தான் இன்று நாம் ஒரு வகையிலாவது நம்மை அடிமைபடுத்த முயலும் சாதிகளை எதிர்கொள்ள துணிவு வருகிறது.
மனித இனத்திற்கான தேவைகளையும், அவர்தம் அறிவு வளர்ச்சிக்கு தேவையான அறிவியலையும் இதுவரை வந்த எந்த மதமும் கற்றுதரவில்லை. ஏன் ஒரு குண்டூசியைக்கூட இதுவரை எந்த ஆன்மீகவாதியும் கண்டுபிடித்ததில்லை. மாறாக அவரவர் கற்பனைக்கு ஏற்றவகையிலும் தான் வாழ்ந்த சூழலிற்கும் தகுந்தாற்போல் பல புரட்சிகளை உருவாக்கி ஒரு மதத்திலிருந்து வேறான்றிற்கு மாற்றிய பெருமையே உண்டு எனலாம்.
இருந்தும் மனிதன் தன் மதக்கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு தன் உடல், பொருள், ஆவி, நேரம் என அத்தனையும் இந்த மனித சமூகத்திற்காக அர்ப்பணித்து புதிய புதிய கண்டுபிடிப்புகளை கொண்டுவந்தால், நோகாமல் நொங்கு தின்பதுபோல் எல்லாம் என் மதத்தை படித்துதான் கண்டுபிடித்தான் என்று நா கூசாமல் சொல்லிக் கொள்வதில் ஒன்றையொன்று சலைத்தவையில்லை. இதில் வேடிக்கை என்னவெனில் அதே விஞ்ஞானி சொல்லும் கருத்துக்களை ஏற்காமல் அவர்களுக்கு பைத்தியக்காரன் என்ற பட்டம் சூட்டி, ஊரைவிட்டு அடித்து விரட்டுவதும்,அவரின் கண்டுபிடிப்புகளை தீக்கிரையாக்குவதிலுமே குறியாக இருந்தவனெல்லாம்; பின்னால் என் மதத்தின் அடிப்படையில்தான் இதை கண்டுபிடித்தான் என்று வெட்கமேயில்லாமல் சொல்லிக்கொள்வதுதான்.
மனித இனத்திற்கு தன் கண்முன்னால் நடக்கும் அநியாயத்தை கண்டு அவற்றிக்கெதிரான சாட்டைகளை சுழற்றுவதும், நிகழ்வுகளை நேர்மையுடன் பதிவுச் செய்வதும்தான் எழுத்தாளர், அல்லது பேச்சாளர்களின் முக்கிய பணி. எழுத்தாளன் அல்லது பேச்சாளன் என்றானப்பிறகு எந்த சாதி அடையாளமோ, நடுநிலையோ இருக்கக்கூடாது.(நடுநிலையென்பது பெரும்பாலும் வாதி பிரதிவாதி இருவரும் மனம் கோணக்கூடாது என்பதாகவே அமைகிறது. ஒரே நிலையென்ற உண்மை நிலைதான் நன்று).
நான் கண்டவரையில் எந்த கூட்டத்திலும் குர்ஆன் தவறானது அதில் அந்த இடத்தில் அப்படியிருக்கிறது இந்த இடத்தில் இப்படி இருக்கிறது என கிருத்துவ பேச்சாளர்கள் சொல்வதில்லை. எங்காவது, விவாதங்கள் வந்தால் ஆதாரங்களுக்காக சொல்லியிருக்கக்கூடும். அப்படியும் தவறானது என்றதாக தெரியவில்லை. ஆனால் அதற்கு நேர்மாறாக எங்கெல்லாம் முஸ்லீம்கள் பேசுகிறார்களோ அங்கெல்லாம் பைபிள் ஈவு இரக்கமின்றி கட்டுக்கதை, பொய்கதையென வார்த்தைகளாலேயே கிழித்தெரியப்படும். பேசும் அனைவரும் மார்க்கத்தை கரைத்து குடித்துவிட்டு அடுத்தவன் வாயிலும் ஊற்ற காத்துக் கொண்டிருப்பவர்கள்தான். ஆனால் “அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு உங்கள் மார்க்கம் உங்களுக்கு” என்கிற குர்ஆன் வாசகத்தை மட்டும் வாகாக மறந்துவிடுவார்கள் போலும். கிருத்துவ பேச்சாளர்கள் பைபிள்தான் சிறந்ததது அதை எப்படி பின்பற்ற வேண்டும் என மாறி மாறி விளக்கம் சொல்வார்களே ஒழிய குர்ஆனையோ மற்ற புனித நூல்களையோ தவறாக பேசியதை நான் பார்த்ததில்லை. இப்படி எழுதுவதால் உடனே கிருத்துவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறான், இதற்காகவே வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்றோ, என் நதிமூலம் தேடி அலைபவர்களும் இருக்கக்கூடும்.
இரண்டு கிருத்துவர்கள் மேடைபோட்டு பைபிளை மாறிமாறி விமர்சனம் செய்வதோ, ஒரு கிருத்துவ மத போதகர் சொல்லும் வசனங்களை மற்றொருவர் எப்போதும் விமர்சனம் செய்வதோ கிடையாது. கிருத்துவத்தில் எத்தனை பிரிவுகள் இருந்தாலும் அதை குறித்து மேடைபோட்டோ, தொலைகாட்சியிலோ ஒருவரையொருவர் திட்டிக்கொள்வதில்லை என்பதை கண்கூடாக அறிவோம். (இந்துக்களும் அப்படியே) அதே நேரத்தில் முஸ்லீம் மத தலைவர்களோ ஒருவரை மற்றவர் குறைகூறாவிட்டால் அன்றைய பொழுது அவர் எதுவும் அமல் (நன்மை) செய்யவில்லை என்பது போல நடந்துகொள்வர். இந்த கூத்துகளை அரங்கேற்ற அன்றாடம் தனித்தனி முஸ்லீம் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், ஒலிநாடாக்கள், குறுந்தகடுகள், துண்டறிக்கைகள் என அத்தனை அறிவுசார்ந்த ஊடகங்களும் பயன்படுத்தபடுவதை நாம் பார்க்கிறோம். ஏனெனில் இவர்கள் தான் ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்துக்கொள்ளும் உத்தம சீலர்கள். ஆனால்
நீங்கள் அந்த கயிற்றின் இரண்டு முனைகளையும் இரண்டுபக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை இனி எந்த தூதர்வந்து சொன்னாலும் உணரமாட்டார்கள். அதே விமர்சனத்தை மற்ற யாராவது சொன்னால் உடனே அவருக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும் என்று சட்டத்தை இவர்களின் சட்டை பைகளிலேயே வைத்துக்கொண்டு அலைவார்கள் போலும்.
அடுத்து இந்த மத நல்லிணக்கம் பற்றி பார்ப்போமா! இந்த மதநல்லிணக்கம் என்பதே ஒரு பெரிய அயோக்கியத்தனம் என்பது தான் உண்மை. மதங்களே வேண்டாம் நாமெல்லாம் மனிதர்களாக இருப்போம் என்று சொல்ல எந்த மதவாதிகளுக்கும் நெஞ்சில் மஞ்சா சோறு கிடையாது. எல்லாம் பதவியும் பணமும் படுத்துகிற பாடுதான் யாரைவிட்டது! இவர்களுக்கு எவனையாவது தனக்கு கீழே இழிவானவனாக வைத்திருக்கவும், தங்கள் மதத்தைவிட அடுத்தவன் மதம் குறைவானது என்று சொல்லி அரசியல் நடத்திக்கொண்டிருக்கவும் எதாவது இருக்கவேண்டுமல்லவா அதனால் தான் அரசியல் அயோக்கியர்களுக்கு இந்தியதேசியம் என்பதுபோல், மதவாதிகளுக்கு மதநல்லிணக்கம் என்கிற காயடிக்கும் இயந்திரம் எப்போதும் தேவைபட்டுக்கொண்டே இருக்கும்.
ஆனால் நம்மையெல்லாம் வாய்பிளக்கவைக்கும் அளவிற்கு சமீபத்தில் சில நிகழ்வுகளில் சில முஸ்லீம் பிரச்சாரர்கள் (மத நல்லிணக்கமோ என்ன மண்ணாங்கட்டியோ தெரியவில்லை) உளறி கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். சில தினங்கள் முன்புகூட முஸ்லீம் அறிஞர் ஒருவரின் இஸ்லாம் குறித்தான மாற்று மதத்தாரின் வினா விடை நிகழ்வினை குறுந்தகடில் காண நேர்ந்தது. அதில் மாற்றுமதத்தினர் கேட்கும் வினாக்களுக்கு குர்ஆனிலிருந்தும், நபிவழியிலிருந்தும் ஆதாரங்களை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தார். இடையிடையே முஸ்லீம் பேச்சாளர்களுக்கே உரிய பாணியில்; பைபிளையும் வாரிக்கொண்டிருந்தார். எனினும் சில விடைகளில் வழக்கம்போல் துணைக் கேள்விகள் எழுந்தாலும் நமக்கு அவரளவுக்கு தெரியாது என்கிறதாலோ என்னவோ சொல்வதை கேட்டுக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தனர் மாற்று மத சகோதரர்கள்!
அப்படியே ஒரு மாற்று மதத்தினர் இராமன் பற்றியும், பகவத்கீதை பற்றியும் கேட்ட வினாவிற்கு விடையளிக்கும் விதமாக அவருக்கு என்ன ஆனாதோ தெரியவில்லை. இராமனும் இறைத் தூதர்களில் ஒருவரே, அவருக்கும் வேத நூல் இறக்கப்பட்டிருக்காலம் அது பிறகு பைபிள் போல் பலரால் திருத்தப்பட்டிருக்கலாம் என தனது சப்பைக்கட்டுகளை சபையில் எடுத்துரைதார். கேட்டவரும் அதுதான் நம் இராமனை தூதுவர்களில் ஒருவர்தான் என்று ஒப்புக்கொண்டுவிட்டாரே என அமைதியாக உட்கார்ந்துவிட்டார். இராமன் என்பவன் குறுதியும் சதையுமாக வாழ்ந்த ஒரு இறைத்தூதர் என்பதை இத்தனை பெரிய இஸ்லாமிய மத போதகரே சொல்லிவிட்டபடியால் இனி பா.ஜ.கவினருக்கு வேலை மிச்சம். இப்படிக் கூறாவிட்டால் இனி தனது கூட்டத்திற்கு மாற்று மதத்தினர் வராமல் போய்விடக்கூடுமோ அல்லது மத நல்லிணக்கணத்திற்கு மாசு பட்டுவிமோ என்கிற கவலைபோலும்.
இராமனும் இறைத்தூதர்தான், அல்லாவால் அனுப்பபட்ட நபிதான் என இந்து முன்னணியினர் சொல்லியிருந்தால் அதை ஆதரித்து லட்சத்து இருபத்து நாளாயிரம் நபிமார்களில் இராமனும் ஒருவன்தான் என முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வார்களா! இது எவ்வளவு பெரிய அபத்தமாக இருக்கிறது. இராமன் என்பவன் ஒரு நாவலின் கதை நாயகன். ஒரு மனிதனின் வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதை எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் அது. அதை ஏற்று ராமன் நேரடி கடவுள் அல்ல என்று பரமஹம்சர் போன்ற புராணங்களை கரைத்துக் குடித்தவர்களே (அவர்களுக்குள் ஆட்சிபீடத்தில் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு) வாக்குமூலம் கொடுத்துக் கொண்டலையும் இந்த காலகட்டத்தில். இவரைப் போன்றவர்கள் உளர தொடங்கினால் எதிர்காலத்தில் இதைவைத்தே இந்துத்துவாவை வளர்க்க மாட்டார்களா.
இந்த மார்க்க அறிஞர் சொன்னால் சரியாகதானிருக்கும் என்று பிற முஸ்லீம் பேச்சாளர்களும் வாயை மூடிக்கொண்டிருப்பது ஏனோ தெரியவில்லை. இதில் எல்லோருக்கும் உடன்பாடோ!
மேலும் அந்த மார்க்க அறிஞர் ஒரு மருத்துவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஒரு சமயம் ‘வைத்தியம் பார்ப்பதை விட்டு விட்டு இப்படி பேச்சாளராகிவிட்டீர்களே’’ என்று ஒருவர் வினா கேட்க ஆம் நான் இப்போதும் வைத்தியம்தான் பார்த்துக் கொண்டலைகிறேன் இது இஸ்லாம் பற்றிய அறிவில்லாதவர்களுக்கான வைத்தியம் என்றார். அது அறிவிப்பூர்வமான பதிலா இல்லையாவென்பதை மக்கள் கவனத்திற்கு விட்டுவிடுவோம்.
ஆக்கப்பூர்வமாக பார்த்தோமானால் புது புது நோய்கள் பரவிவிட்ட இந்த காலகட்டதில் மருத்துவ துறையில் மண்டையை பிய்த்துக்கொண்டு அவரவர் மருந்துகளை கண்டுபிடித்துக் கொண்டிருக்கையில் (இவர்களும் மதவாதிகள் இல்லையென்பதை கருத்தில்கொள்க) இவரைப் போன்ற சிறந்த மருத்துவர் என்று பேரெடுத்தவர்கள் குறைந்த அளவில் அவர்களுக்கு ஆலோசனைகளாவது வழங்கிக் கொண்டிருக்கலாம் அல்லவா. அதை விட்டு கிடைப்பவர்களை எல்லாம் பிடித்து முஸ்லீமாக்கினால் நாளடைவில் மதம் சார்ந்த பிரிவினைகள்தான் வளர்ந்துக் கொண்டே போகுமல்லவா! இதே முறையில் எல்லா மதவாதிகளும் தங்கள் மதங்களுக்கு ஆள் சேர்த்துக் கொண்டலைவதனால் தான் ஆங்காங்கே மத கலவரங்கள் வெடித்து மக்கள் நிம்மதி இழந்து வருகிறார்கள். இப்போது இவர் பாணியில் தமிழகத்திலும் சில முஸ்லீம் மதகுருமார்கள் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
பிரச்சாரத்தை கேட்டு மதம் மாறுகிறவர்களைவிட சக முஸ்லீம்களின் நடத்தைகளை பார்த்து மதம் மாறினால் தான் சிறப்பு என்பது நபித்தோழர்களின் கருத்து எங்கே இந்த மதவாதிகளில் யாராவது தங்கள் வாழ்க்கையினை இஸ்லாமிய முறைபடிதான் வாழ்கிறேன் என்று சொல்லமுடியுமா? இல்லையென்கிற பதில்தான் வருமெனில் முதலில் இவர்கள் செய்ய வேண்டியது முஸ்லீம்களை இஸ்லாமியர்களாக மாற்றிவிட்டு பிறகு பிற மதத்தவரை திருத்தலாம்!இல்லையா.
மக்கள் விரும்புவது புதிய புதிய மதங்களையல்ல அமைதியை. எல்லா மதத்தவர்களும் அவசர அவசரமாக அவரவர் மதங்களுக்கு கூட்டம் சேர்ப்பதை பார்த்தால், அரசியல் கட்சிகள் தோன்றுவிடும் போலிருக்கிறது. ஏன் இந்த அவசரம்? இதன் உள் நோக்கம் என்ன? என்கிற கேள்விகள் பல எழுகின்றன. மனிதயினத்தில் மாற்றம் என்பது மதங்களற்ற மனிதயினம்தான் அதில்தான் அமைதி இருக்கிறது.மதங்களை பரப்புவதை விட்டு அந்நேரத்தில் பத்து எழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை போதித்திருந்தால் இன்று பத்து மருத்துவர்கள் கிடைத்திருப்பார்களே. என்றும் மக்களுக்குதேவை ஆன்மீகமா? அறிவியலா? என்பதனை உணர்ந்து முடிவெடுக்கவேண்டியது மதவாதிகள்தான்.
மனித இனம் தோன்றியதாக மனிதனே! அறிந்து சொன்ன காலம் முதல் அவன் தலையில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு, தலை கீழே உருளும்வரை இறங்கமால் இருக்கும் இந்த சாதி மதங்கள் மனித இனத்திற்கே தீங்கானவையென பல சமூக அக்கறையுள்ளவர்கள் சொன்னாலும், அவர்களும் தங்கள் கடமைக்கு போகிறப்போக்கில் ஏதாவது ஒரு மதத்திற்கு வக்காலத்து வாங்கிவிட்டு தன்னை நம்பிய மக்களை நரி வாயிலிருந்து பிடிங்கி முதலை வாயில் திணித்துவிட்டு தங்கள் கண்களை மூடிக்கொள்வர்.
எல்லாம் ஏமாற்றுவேலை, எல்லாம் உன்னை சுரண்டும் வேலை, எல்லாம் பெண்களை அடிமைப்படுத்துவது, எல்லாம் ஒரு சாரரருக்கு மட்டுமே உரியவகையில் உள்ளது, மத விடுதலையும், பெண் விடுதலையும் தான் உண்மையான மனித விடுதலை என்று மதங்களில் உள்ள அத்துனை திள்ளு முள்ளுகளையும் எடுத்துக்கூறி மதங்களின் தலையில் மாறி மாறி செருப்பால் அடித்த பெருமை எம் தந்தை பெரியாருக்கே சேரும். அவர் வாங்கிக்கொடுத்த கல்வியாலும், அறிவாலும்தான் இன்று நாம் ஒரு வகையிலாவது நம்மை அடிமைபடுத்த முயலும் சாதிகளை எதிர்கொள்ள துணிவு வருகிறது.
மனித இனத்திற்கான தேவைகளையும், அவர்தம் அறிவு வளர்ச்சிக்கு தேவையான அறிவியலையும் இதுவரை வந்த எந்த மதமும் கற்றுதரவில்லை. ஏன் ஒரு குண்டூசியைக்கூட இதுவரை எந்த ஆன்மீகவாதியும் கண்டுபிடித்ததில்லை. மாறாக அவரவர் கற்பனைக்கு ஏற்றவகையிலும் தான் வாழ்ந்த சூழலிற்கும் தகுந்தாற்போல் பல புரட்சிகளை உருவாக்கி ஒரு மதத்திலிருந்து வேறான்றிற்கு மாற்றிய பெருமையே உண்டு எனலாம்.
இருந்தும் மனிதன் தன் மதக்கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு தன் உடல், பொருள், ஆவி, நேரம் என அத்தனையும் இந்த மனித சமூகத்திற்காக அர்ப்பணித்து புதிய புதிய கண்டுபிடிப்புகளை கொண்டுவந்தால், நோகாமல் நொங்கு தின்பதுபோல் எல்லாம் என் மதத்தை படித்துதான் கண்டுபிடித்தான் என்று நா கூசாமல் சொல்லிக் கொள்வதில் ஒன்றையொன்று சலைத்தவையில்லை. இதில் வேடிக்கை என்னவெனில் அதே விஞ்ஞானி சொல்லும் கருத்துக்களை ஏற்காமல் அவர்களுக்கு பைத்தியக்காரன் என்ற பட்டம் சூட்டி, ஊரைவிட்டு அடித்து விரட்டுவதும்,அவரின் கண்டுபிடிப்புகளை தீக்கிரையாக்குவதிலுமே குறியாக இருந்தவனெல்லாம்; பின்னால் என் மதத்தின் அடிப்படையில்தான் இதை கண்டுபிடித்தான் என்று வெட்கமேயில்லாமல் சொல்லிக்கொள்வதுதான்.
மனித இனத்திற்கு தன் கண்முன்னால் நடக்கும் அநியாயத்தை கண்டு அவற்றிக்கெதிரான சாட்டைகளை சுழற்றுவதும், நிகழ்வுகளை நேர்மையுடன் பதிவுச் செய்வதும்தான் எழுத்தாளர், அல்லது பேச்சாளர்களின் முக்கிய பணி. எழுத்தாளன் அல்லது பேச்சாளன் என்றானப்பிறகு எந்த சாதி அடையாளமோ, நடுநிலையோ இருக்கக்கூடாது.(நடுநிலையென்பது பெரும்பாலும் வாதி பிரதிவாதி இருவரும் மனம் கோணக்கூடாது என்பதாகவே அமைகிறது. ஒரே நிலையென்ற உண்மை நிலைதான் நன்று).
நான் கண்டவரையில் எந்த கூட்டத்திலும் குர்ஆன் தவறானது அதில் அந்த இடத்தில் அப்படியிருக்கிறது இந்த இடத்தில் இப்படி இருக்கிறது என கிருத்துவ பேச்சாளர்கள் சொல்வதில்லை. எங்காவது, விவாதங்கள் வந்தால் ஆதாரங்களுக்காக சொல்லியிருக்கக்கூடும். அப்படியும் தவறானது என்றதாக தெரியவில்லை. ஆனால் அதற்கு நேர்மாறாக எங்கெல்லாம் முஸ்லீம்கள் பேசுகிறார்களோ அங்கெல்லாம் பைபிள் ஈவு இரக்கமின்றி கட்டுக்கதை, பொய்கதையென வார்த்தைகளாலேயே கிழித்தெரியப்படும். பேசும் அனைவரும் மார்க்கத்தை கரைத்து குடித்துவிட்டு அடுத்தவன் வாயிலும் ஊற்ற காத்துக் கொண்டிருப்பவர்கள்தான். ஆனால் “அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு உங்கள் மார்க்கம் உங்களுக்கு” என்கிற குர்ஆன் வாசகத்தை மட்டும் வாகாக மறந்துவிடுவார்கள் போலும். கிருத்துவ பேச்சாளர்கள் பைபிள்தான் சிறந்ததது அதை எப்படி பின்பற்ற வேண்டும் என மாறி மாறி விளக்கம் சொல்வார்களே ஒழிய குர்ஆனையோ மற்ற புனித நூல்களையோ தவறாக பேசியதை நான் பார்த்ததில்லை. இப்படி எழுதுவதால் உடனே கிருத்துவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறான், இதற்காகவே வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்றோ, என் நதிமூலம் தேடி அலைபவர்களும் இருக்கக்கூடும்.
இரண்டு கிருத்துவர்கள் மேடைபோட்டு பைபிளை மாறிமாறி விமர்சனம் செய்வதோ, ஒரு கிருத்துவ மத போதகர் சொல்லும் வசனங்களை மற்றொருவர் எப்போதும் விமர்சனம் செய்வதோ கிடையாது. கிருத்துவத்தில் எத்தனை பிரிவுகள் இருந்தாலும் அதை குறித்து மேடைபோட்டோ, தொலைகாட்சியிலோ ஒருவரையொருவர் திட்டிக்கொள்வதில்லை என்பதை கண்கூடாக அறிவோம். (இந்துக்களும் அப்படியே) அதே நேரத்தில் முஸ்லீம் மத தலைவர்களோ ஒருவரை மற்றவர் குறைகூறாவிட்டால் அன்றைய பொழுது அவர் எதுவும் அமல் (நன்மை) செய்யவில்லை என்பது போல நடந்துகொள்வர். இந்த கூத்துகளை அரங்கேற்ற அன்றாடம் தனித்தனி முஸ்லீம் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், ஒலிநாடாக்கள், குறுந்தகடுகள், துண்டறிக்கைகள் என அத்தனை அறிவுசார்ந்த ஊடகங்களும் பயன்படுத்தபடுவதை நாம் பார்க்கிறோம். ஏனெனில் இவர்கள் தான் ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்துக்கொள்ளும் உத்தம சீலர்கள். ஆனால்
நீங்கள் அந்த கயிற்றின் இரண்டு முனைகளையும் இரண்டுபக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை இனி எந்த தூதர்வந்து சொன்னாலும் உணரமாட்டார்கள். அதே விமர்சனத்தை மற்ற யாராவது சொன்னால் உடனே அவருக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும் என்று சட்டத்தை இவர்களின் சட்டை பைகளிலேயே வைத்துக்கொண்டு அலைவார்கள் போலும்.
அடுத்து இந்த மத நல்லிணக்கம் பற்றி பார்ப்போமா! இந்த மதநல்லிணக்கம் என்பதே ஒரு பெரிய அயோக்கியத்தனம் என்பது தான் உண்மை. மதங்களே வேண்டாம் நாமெல்லாம் மனிதர்களாக இருப்போம் என்று சொல்ல எந்த மதவாதிகளுக்கும் நெஞ்சில் மஞ்சா சோறு கிடையாது. எல்லாம் பதவியும் பணமும் படுத்துகிற பாடுதான் யாரைவிட்டது! இவர்களுக்கு எவனையாவது தனக்கு கீழே இழிவானவனாக வைத்திருக்கவும், தங்கள் மதத்தைவிட அடுத்தவன் மதம் குறைவானது என்று சொல்லி அரசியல் நடத்திக்கொண்டிருக்கவும் எதாவது இருக்கவேண்டுமல்லவா அதனால் தான் அரசியல் அயோக்கியர்களுக்கு இந்தியதேசியம் என்பதுபோல், மதவாதிகளுக்கு மதநல்லிணக்கம் என்கிற காயடிக்கும் இயந்திரம் எப்போதும் தேவைபட்டுக்கொண்டே இருக்கும்.
ஆனால் நம்மையெல்லாம் வாய்பிளக்கவைக்கும் அளவிற்கு சமீபத்தில் சில நிகழ்வுகளில் சில முஸ்லீம் பிரச்சாரர்கள் (மத நல்லிணக்கமோ என்ன மண்ணாங்கட்டியோ தெரியவில்லை) உளறி கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். சில தினங்கள் முன்புகூட முஸ்லீம் அறிஞர் ஒருவரின் இஸ்லாம் குறித்தான மாற்று மதத்தாரின் வினா விடை நிகழ்வினை குறுந்தகடில் காண நேர்ந்தது. அதில் மாற்றுமதத்தினர் கேட்கும் வினாக்களுக்கு குர்ஆனிலிருந்தும், நபிவழியிலிருந்தும் ஆதாரங்களை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தார். இடையிடையே முஸ்லீம் பேச்சாளர்களுக்கே உரிய பாணியில்; பைபிளையும் வாரிக்கொண்டிருந்தார். எனினும் சில விடைகளில் வழக்கம்போல் துணைக் கேள்விகள் எழுந்தாலும் நமக்கு அவரளவுக்கு தெரியாது என்கிறதாலோ என்னவோ சொல்வதை கேட்டுக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தனர் மாற்று மத சகோதரர்கள்!
அப்படியே ஒரு மாற்று மதத்தினர் இராமன் பற்றியும், பகவத்கீதை பற்றியும் கேட்ட வினாவிற்கு விடையளிக்கும் விதமாக அவருக்கு என்ன ஆனாதோ தெரியவில்லை. இராமனும் இறைத் தூதர்களில் ஒருவரே, அவருக்கும் வேத நூல் இறக்கப்பட்டிருக்காலம் அது பிறகு பைபிள் போல் பலரால் திருத்தப்பட்டிருக்கலாம் என தனது சப்பைக்கட்டுகளை சபையில் எடுத்துரைதார். கேட்டவரும் அதுதான் நம் இராமனை தூதுவர்களில் ஒருவர்தான் என்று ஒப்புக்கொண்டுவிட்டாரே என அமைதியாக உட்கார்ந்துவிட்டார். இராமன் என்பவன் குறுதியும் சதையுமாக வாழ்ந்த ஒரு இறைத்தூதர் என்பதை இத்தனை பெரிய இஸ்லாமிய மத போதகரே சொல்லிவிட்டபடியால் இனி பா.ஜ.கவினருக்கு வேலை மிச்சம். இப்படிக் கூறாவிட்டால் இனி தனது கூட்டத்திற்கு மாற்று மதத்தினர் வராமல் போய்விடக்கூடுமோ அல்லது மத நல்லிணக்கணத்திற்கு மாசு பட்டுவிமோ என்கிற கவலைபோலும்.
இராமனும் இறைத்தூதர்தான், அல்லாவால் அனுப்பபட்ட நபிதான் என இந்து முன்னணியினர் சொல்லியிருந்தால் அதை ஆதரித்து லட்சத்து இருபத்து நாளாயிரம் நபிமார்களில் இராமனும் ஒருவன்தான் என முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வார்களா! இது எவ்வளவு பெரிய அபத்தமாக இருக்கிறது. இராமன் என்பவன் ஒரு நாவலின் கதை நாயகன். ஒரு மனிதனின் வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதை எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் அது. அதை ஏற்று ராமன் நேரடி கடவுள் அல்ல என்று பரமஹம்சர் போன்ற புராணங்களை கரைத்துக் குடித்தவர்களே (அவர்களுக்குள் ஆட்சிபீடத்தில் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு) வாக்குமூலம் கொடுத்துக் கொண்டலையும் இந்த காலகட்டத்தில். இவரைப் போன்றவர்கள் உளர தொடங்கினால் எதிர்காலத்தில் இதைவைத்தே இந்துத்துவாவை வளர்க்க மாட்டார்களா.
இந்த மார்க்க அறிஞர் சொன்னால் சரியாகதானிருக்கும் என்று பிற முஸ்லீம் பேச்சாளர்களும் வாயை மூடிக்கொண்டிருப்பது ஏனோ தெரியவில்லை. இதில் எல்லோருக்கும் உடன்பாடோ!
மேலும் அந்த மார்க்க அறிஞர் ஒரு மருத்துவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஒரு சமயம் ‘வைத்தியம் பார்ப்பதை விட்டு விட்டு இப்படி பேச்சாளராகிவிட்டீர்களே’’ என்று ஒருவர் வினா கேட்க ஆம் நான் இப்போதும் வைத்தியம்தான் பார்த்துக் கொண்டலைகிறேன் இது இஸ்லாம் பற்றிய அறிவில்லாதவர்களுக்கான வைத்தியம் என்றார். அது அறிவிப்பூர்வமான பதிலா இல்லையாவென்பதை மக்கள் கவனத்திற்கு விட்டுவிடுவோம்.
ஆக்கப்பூர்வமாக பார்த்தோமானால் புது புது நோய்கள் பரவிவிட்ட இந்த காலகட்டதில் மருத்துவ துறையில் மண்டையை பிய்த்துக்கொண்டு அவரவர் மருந்துகளை கண்டுபிடித்துக் கொண்டிருக்கையில் (இவர்களும் மதவாதிகள் இல்லையென்பதை கருத்தில்கொள்க) இவரைப் போன்ற சிறந்த மருத்துவர் என்று பேரெடுத்தவர்கள் குறைந்த அளவில் அவர்களுக்கு ஆலோசனைகளாவது வழங்கிக் கொண்டிருக்கலாம் அல்லவா. அதை விட்டு கிடைப்பவர்களை எல்லாம் பிடித்து முஸ்லீமாக்கினால் நாளடைவில் மதம் சார்ந்த பிரிவினைகள்தான் வளர்ந்துக் கொண்டே போகுமல்லவா! இதே முறையில் எல்லா மதவாதிகளும் தங்கள் மதங்களுக்கு ஆள் சேர்த்துக் கொண்டலைவதனால் தான் ஆங்காங்கே மத கலவரங்கள் வெடித்து மக்கள் நிம்மதி இழந்து வருகிறார்கள். இப்போது இவர் பாணியில் தமிழகத்திலும் சில முஸ்லீம் மதகுருமார்கள் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
பிரச்சாரத்தை கேட்டு மதம் மாறுகிறவர்களைவிட சக முஸ்லீம்களின் நடத்தைகளை பார்த்து மதம் மாறினால் தான் சிறப்பு என்பது நபித்தோழர்களின் கருத்து எங்கே இந்த மதவாதிகளில் யாராவது தங்கள் வாழ்க்கையினை இஸ்லாமிய முறைபடிதான் வாழ்கிறேன் என்று சொல்லமுடியுமா? இல்லையென்கிற பதில்தான் வருமெனில் முதலில் இவர்கள் செய்ய வேண்டியது முஸ்லீம்களை இஸ்லாமியர்களாக மாற்றிவிட்டு பிறகு பிற மதத்தவரை திருத்தலாம்!இல்லையா.
மக்கள் விரும்புவது புதிய புதிய மதங்களையல்ல அமைதியை. எல்லா மதத்தவர்களும் அவசர அவசரமாக அவரவர் மதங்களுக்கு கூட்டம் சேர்ப்பதை பார்த்தால், அரசியல் கட்சிகள் தோன்றுவிடும் போலிருக்கிறது. ஏன் இந்த அவசரம்? இதன் உள் நோக்கம் என்ன? என்கிற கேள்விகள் பல எழுகின்றன. மனிதயினத்தில் மாற்றம் என்பது மதங்களற்ற மனிதயினம்தான் அதில்தான் அமைதி இருக்கிறது.மதங்களை பரப்புவதை விட்டு அந்நேரத்தில் பத்து எழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை போதித்திருந்தால் இன்று பத்து மருத்துவர்கள் கிடைத்திருப்பார்களே. என்றும் மக்களுக்குதேவை ஆன்மீகமா? அறிவியலா? என்பதனை உணர்ந்து முடிவெடுக்கவேண்டியது மதவாதிகள்தான்.
Labels:
கட்டுரைகள்
Saturday, January 19, 2008
பொங்கல் உழவர் திருநாளாலா? தமிழர் திருநாளா?
அன்னைத் தமிழுக்கும் மண்ணின் விடுதலைக்கும் தன்னுயிர் கொடுத்துக் கொண்டிருக்கும் மொழிப்போர் ஈக்கியருக்கு உலகத் தமிழர்கள் கூடி வீர வணக்கம் கூறி தொடங்குவோம்.
தமிழர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள், எல்லா தமிழர்களும் தனித்தனியாக தாம் சார்ந்த மதங்களின் கோட்பாடுகளின் படி பெருநாள்கள் கொண்டாடுகிறார்கள். இருப்பினும் நாம் அனைவரும் தமிழரென்று உறவு கூட்டி குரல் கொடுக்க ஒரே தமிழர் திருநாளென்று பொங்கல் திருநாளை சொல்லலாம்.
ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த தமிழனுக்கு மதப்பேய்கள் பிடித்ததாலும், மதத்திருடர்களை தலைமையேற்று பிரிந்ததாலும் இன்று தமிழர் திருநாள் என்பது மருவி, பொங்கல் திருநாள் என்பது உழவர் திருநாள் என்று சகத் தமிழர்களாலேயே ஒதுக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையே!
உழவர் என்பதென்ன தனி இனமா? நாமும் ஒரு காலத்தில் விவசாயத்தில் உழன்றவர்கள் தானே. வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டு உழுவதை நிறுத்தி வரப்பேறி கிராமம் விட்டு நகரத்தை உறுவாக்கியவர்கள் தானே, நாமும் உழவர் இனமில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?
உள் நாட்டில் மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் உழைப்பவர் எல்லோரும் உழுபவர் தானே. உழவர்கள் இன்றும் வயலை உழுகிறார்கள், நாம் வாழ்க்கையை உழுகிறோம். இன்னும் சொல்லப்போனால் உழவர்கள் உழுதலில் பொதுநலம் இருக்கிறது, நாம் தான் சுயநலவாதிகள்.
நம் உழைப்பென்பது நம் குடும்பத்திற்கானது என்று சுருங்கிவிடுகிறது. உழவர்கள் ஊருக்காக உழைப்பவர்கள் அதனால்தான் நமக்கு சோறு தந்தவர்களை கஞ்சிக்கான வரிசையில் நிற்கவைத்து நன்றிகடனை நிறைவேற்றி விட்டோம்.
''காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்'' என்ற நிலைமாறி இன்றைய சூழலில் உழுவர்களுக்கு உயிர் மிச்சப்படுமா! என்கிற கேள்வி எழுகிறதெனில் வெளிநாட்டிற்கு புலம் பெயர்ந்தவர்கள் மட்டுமின்றி, சொந்த நாட்டிலேயே குளிர்பானம், ஊர்திகள், மென்பொருட்கள் தயாரிப்பது, நிலங்களை கட்டிடங்களுக்காக விற்பது வரையிலான அனைத்து தொழில்களுக்காகவும், வெளிநாட்டு முதலாளிகளுக்காகவும் உழைக்கும் நாம் வெட்கப்படத்தான் வேண்டும்.
இதையாவது உறுப்படியாக செய்தோமா! என்றால் அதுவுமில்லை, வெளிநாட்டில் வாழும் தமிழர்களில் 99 விழுக்காடு பேருக்கு கடன் தொல்லை, வட்டி தொல்லை, மன உலைச்சல், உடல் நல கேடு என்று ஏற்றத்தாழ்வின்றி நாம் விரும்பியோ விரும்பாமலோ வயதையும் வாழ்க்கையையும் கடத்திக் கொண்டிருக்கிறோம்.
அடுத்த பொங்கலுக்காவது நாம் உறவுக்கூட்டி பொங்கல் வைத்து தாய்மண் நனைய நனைய வழிய விடவேண்டுமென்ற ஆவலில் இருப்பவர்கள் பல லட்சம் பேர் இருக்கையில் நாம் ஏன் இன்னும் நிரந்தரமாக தாய்நாட்டில் தங்குவதை தள்ளிப்போடுகிறோம் என விளங்க வில்லை. ஒருகால் நாம் இங்கு வருவதற்காக ஏற்பட்ட நிர்பந்தம்போல் தாய்நாடு திரும்பவும் ஏதாவது நிர்பந்தம் வேண்டுமோ!
தை என்பது வெரும் திருநாள் மட்டுமல்ல அதுதான் தமிழ் ஆண்டின் முதல்நாள். இன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது. அப்படியெனில் சித்திரை இல்லையாவென கேள்விகள் எழலாம், இல்லையென்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டாலும், நாமும் நம் கடமைக்கு சில சொல்லலாம் என நினைக்கிறேன்.
தன் மதக்கோட்பாடுகளை திணிக்கவந்த ஆரியர்கள் அதை எதிர்த்த தமிழர்களை ஒதுக்குவதற்காகவும் அடிமைப்படுத்துவதற்காகவும் யோசித்து நம்மை நேரடியாக எதிர்க்க திராணியற்று முதலில் நம் பண்பாட்டிலும், பழக்க வழக்கத்திலும் கைவைத்தனர். அதன் முதல்கட்டமாக மூடப்பழக்க வழக்கங்களை நம்மிடையே உருவாக்கி நம்மை மூளைச் சலவை செய்து இனவாரியாக ஒற்றுமையாக இருந்தவர்களை மத அடிப்படையிலும், மதங்களின் உட்பிரிவுகளை கொண்டும் பிளவுகளை உண்டாக்கி நம்மிடையே புழக்கத்தில் விட்டு நம்மை மத வாரியாக பிரிப்பதில் முழுமூச்சில் இறங்கி அதில் பெருமளவில் வெற்றியும் கண்டனர்.
அதன் அடிப்படையில் அவர்கள் கைவைத்த பல இடங்களில், தமிழ் மாதங்களின் பெயர்களை மாற்றுவதிலும் செய்தனர். எனவே சித்திரை தான் தமிழ் ஆண்டின் முதல் மாதம் என்கிறதும் ஒன்று. நாம் அறிவுபூர்வமாக பார்த்தாலே தெரியும், நிலம் காய்ந்து கிடக்கும் வறட்சி மிகுந்திருக்கும் வெய்யில் காலமான சித்திரையில் எந்த விழாவேனும் கொண்டாட இயலுமா? (சித்திரை திருவிழா கொண்டாடவைத்ததும் பார்ப்பனிய மூளைதான் எவன் வறண்டு கிடந்தாலும் சுறண்டவேண்டியதை சுறண்ட வேண்டாமா என்ன) அல்லது நெல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டு வயல் காடுகள் எல்லாம் பசுமை பொங்கி நிற்கும் தை மாதத்தில் மகிழ்ச்சி பொங்க கொண்டாடுவோமா?
நெல் விற்று பயிறுகள் விற்று பணம் கையில் புரள போவதைதான் ''தை பிறந்தால் வழி பிறக்கும்'' என்பார்கள். இதிலிருந்து தெரியவில்லையா? தை தான் ஆண்டின் முதல் மாதம் அதுவே கொண்டாடுவதற்கும் ஏற்ற மாதம் என்று. ஆனால் தை பொங்கல் திருநாள் என்பதை ஆங்கில மாதமான சனவரி 15 தேதிகளில்தான் கொண்டாட வேண்டுமென்று நிர்ணயம் ஏதுமில்லை. இப்படி செய்வதிலும் ஒரு சூழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது, ஆம் முதலில் ஆரியத்திடம் தோற்றுப்போன தமிழன் பின் ஆங்கில ஆதிக்கத்திடமும் தோற்றுப்போனான்.
தமிழ் மாதங்களை சரியாக கணக்கிட்டு தை முதல் நாள் எப்போது எந்த தேதியில் வருகிறதென்று தமிழறிஞர்கள் அறிவிக்க வேண்டும். அது ஆங்கிலத்தின் கணக்கு படி ஒவ்வொரு ஆண்டும் மாறலாம். இதனால் தமிழருக்கு என்ன கேடு வந்துவிடப்போகிறது. நம் பண்பாட்டின் படி நம் மாதத்தில், நம் தினத்தில், நம் திருநாளை கொண்டாடுவதுதானே நமக்கு சிறப்பு. அதுதானே நம் இனத்தின் அடையாளமும் கூட.
சரி பொங்கல் திருநாளை யார் யார் கொண்டாடலாம்? என்று பார்த்தோமானால் இங்குதான் ஒட்டுமொத்த தமிழினமும் தலைகுனிகிறது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் கொண்டாடலாம் என்றால் மற்ற மதங்களில் இருப்பவர்கள் ''தாங்கள் தமிழர் அல்லர்'' என்பதுப்போல் ஒதுங்கிக் கொள்கின்றனர்.
ஏனெனில் மத அடிப்படையில் பார்த்தோமானால் ஒரு நடைமுறை சிக்கல் இருப்பதுப்போல் தெரியலாம். தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள் எல்லா மதங்களிலும், எல்லா மதங்களின் உட்பிரிவுகளிலும் அடைபட்டு கிடப்பதால் தமிழர் திருநாள் என்பது பொதுவானதாக இருந்த போதிலும் தமிழன் தான் சார்ந்த மதத்தை மட்டும் தூக்கிப் பிடிப்பதால் இத்திருநாளை கொண்டாடாமல் பொங்கலை உழவர் திருநாள் என்று ஒதுக்கிவிட்டு கண்டுக்கொள்ளாமல் இருந்துவிடுகின்றனர். இதனால் தாங்கள் தமிழர், தமிழினம் என்றாலும் உழவர் தொடங்கி மற்றும் சிலரை தவிர ஒரு பெரும் கூட்டம் தானாக ஒதுங்கிக்கொள்கிறது.
குறிப்பாக பொங்கல் தினத்தன்று பொங்கல், கரும்பு, இஞ்சி, இனிப்பு என வைத்து படைப்பதை சொல்லலாம். இதனாலேயே முசுலீம்கள் மற்றும் கிருத்துவ மதத்தவர்கள் தாங்களும் ஆதித்தமிழர்கள் என்பதைனை மறந்துவிட்டு ஒதுங்கிக் கொள்கின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லா மதத்திலும் படைத்தல் என்பது இருக்கிறது. ஒரு சில முறைகள் தான் வேறுபடுமே தவிர மற்றபடி எல்லோரும் உணவு பொருளை வைத்துதான் படைப்பார்கள். இது வரை எந்த கடவுளும் திண்றதில்லை, இவர்களும் கொடுத்ததில்லை. மேலும் இவர்களின் படைத்தல் என்பது மதரீதியானது, பொங்கல் திருநாள் என்பது தம் இனத்தை அடையாளப்படுத்துவது.
பொங்கல் திருநாளில் படைத்தல் என்கிற முறையும் கூட ஒரு நன்றி நவிழ்தல் தானே தவிர இதனால் அந்த மதத்திலிருந்து விலகிவிட்டதாக பொருளில்லை, இணைவைத்துவிட்டதாகவும் எடுத்துக்கொள்ளக்கூடாது. சரி படைத்தல் என்பதை ஒதுக்கிவிட்டு பொங்கல் திருநாளை கொண்டாட முடியாதா என்ன?
எல்லா தமிழரும் வீட்டில் பொங்கல் வைக்கலாம், கரும்பு வாங்கலாம் அவரவர் வசதிக்கேற்ப பொங்கல் வைத்து ஏழைகளுக்கு வழங்கலாம். கறி வெட்டி கொடுத்தால் தான் திருநாளா! கரும்பு வெட்டி கொடுத்தாலும் திருநாள்தானே. இதனால் ஏழை பணக்காரன் என எல்லோரும் ஒரே நேரத்தில் பசியாரலாமே. அப்படியே திருநாளையும் கொண்டாடியது போலும் இருக்குமே.
இதுதானே உண்மையான மனிதாபிமானம், இதுதானே தமிழர் அடையாளம், இது தானே சமத்துவம், இதுதானே சகோதரத்துவம் இப்படியே போனால் எங்கே வரப்போகிறது மதச்சண்டைகள்.
உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்கள் ஒரே நேரத்தில் பொங்கல் திருநாளை பொதுவாக கொண்டாடினால் அதைவிட சிறப்பு தமிழருக்கு வேறன்ன இருக்கமுடியும்.
எனவே மத அடிப்படையிலான நமது வறட்டு பிடிவாதங்களை ஒதுக்கிவைத்துவிட்டு தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒற்றை குலவையெடுத்து பாடுவோம். அப்படியே பொங்கல் திருநாள் உழவர் திருநாள் மட்டுமல்ல அது தமிழர் திருநாள் என்று உலகின் அனைத்து தமிழரும் கொண்டாடுவோம். இத்திருநாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்த தமிழக அரசுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்வோம்.
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
இனத்தால் நாம் தமிழர்கள்
இணைவோம் இன்று பொங்கல்
தமிழர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள், எல்லா தமிழர்களும் தனித்தனியாக தாம் சார்ந்த மதங்களின் கோட்பாடுகளின் படி பெருநாள்கள் கொண்டாடுகிறார்கள். இருப்பினும் நாம் அனைவரும் தமிழரென்று உறவு கூட்டி குரல் கொடுக்க ஒரே தமிழர் திருநாளென்று பொங்கல் திருநாளை சொல்லலாம்.
ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த தமிழனுக்கு மதப்பேய்கள் பிடித்ததாலும், மதத்திருடர்களை தலைமையேற்று பிரிந்ததாலும் இன்று தமிழர் திருநாள் என்பது மருவி, பொங்கல் திருநாள் என்பது உழவர் திருநாள் என்று சகத் தமிழர்களாலேயே ஒதுக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையே!
உழவர் என்பதென்ன தனி இனமா? நாமும் ஒரு காலத்தில் விவசாயத்தில் உழன்றவர்கள் தானே. வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டு உழுவதை நிறுத்தி வரப்பேறி கிராமம் விட்டு நகரத்தை உறுவாக்கியவர்கள் தானே, நாமும் உழவர் இனமில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?
உள் நாட்டில் மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் உழைப்பவர் எல்லோரும் உழுபவர் தானே. உழவர்கள் இன்றும் வயலை உழுகிறார்கள், நாம் வாழ்க்கையை உழுகிறோம். இன்னும் சொல்லப்போனால் உழவர்கள் உழுதலில் பொதுநலம் இருக்கிறது, நாம் தான் சுயநலவாதிகள்.
நம் உழைப்பென்பது நம் குடும்பத்திற்கானது என்று சுருங்கிவிடுகிறது. உழவர்கள் ஊருக்காக உழைப்பவர்கள் அதனால்தான் நமக்கு சோறு தந்தவர்களை கஞ்சிக்கான வரிசையில் நிற்கவைத்து நன்றிகடனை நிறைவேற்றி விட்டோம்.
''காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்'' என்ற நிலைமாறி இன்றைய சூழலில் உழுவர்களுக்கு உயிர் மிச்சப்படுமா! என்கிற கேள்வி எழுகிறதெனில் வெளிநாட்டிற்கு புலம் பெயர்ந்தவர்கள் மட்டுமின்றி, சொந்த நாட்டிலேயே குளிர்பானம், ஊர்திகள், மென்பொருட்கள் தயாரிப்பது, நிலங்களை கட்டிடங்களுக்காக விற்பது வரையிலான அனைத்து தொழில்களுக்காகவும், வெளிநாட்டு முதலாளிகளுக்காகவும் உழைக்கும் நாம் வெட்கப்படத்தான் வேண்டும்.
இதையாவது உறுப்படியாக செய்தோமா! என்றால் அதுவுமில்லை, வெளிநாட்டில் வாழும் தமிழர்களில் 99 விழுக்காடு பேருக்கு கடன் தொல்லை, வட்டி தொல்லை, மன உலைச்சல், உடல் நல கேடு என்று ஏற்றத்தாழ்வின்றி நாம் விரும்பியோ விரும்பாமலோ வயதையும் வாழ்க்கையையும் கடத்திக் கொண்டிருக்கிறோம்.
அடுத்த பொங்கலுக்காவது நாம் உறவுக்கூட்டி பொங்கல் வைத்து தாய்மண் நனைய நனைய வழிய விடவேண்டுமென்ற ஆவலில் இருப்பவர்கள் பல லட்சம் பேர் இருக்கையில் நாம் ஏன் இன்னும் நிரந்தரமாக தாய்நாட்டில் தங்குவதை தள்ளிப்போடுகிறோம் என விளங்க வில்லை. ஒருகால் நாம் இங்கு வருவதற்காக ஏற்பட்ட நிர்பந்தம்போல் தாய்நாடு திரும்பவும் ஏதாவது நிர்பந்தம் வேண்டுமோ!
தை என்பது வெரும் திருநாள் மட்டுமல்ல அதுதான் தமிழ் ஆண்டின் முதல்நாள். இன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது. அப்படியெனில் சித்திரை இல்லையாவென கேள்விகள் எழலாம், இல்லையென்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டாலும், நாமும் நம் கடமைக்கு சில சொல்லலாம் என நினைக்கிறேன்.
தன் மதக்கோட்பாடுகளை திணிக்கவந்த ஆரியர்கள் அதை எதிர்த்த தமிழர்களை ஒதுக்குவதற்காகவும் அடிமைப்படுத்துவதற்காகவும் யோசித்து நம்மை நேரடியாக எதிர்க்க திராணியற்று முதலில் நம் பண்பாட்டிலும், பழக்க வழக்கத்திலும் கைவைத்தனர். அதன் முதல்கட்டமாக மூடப்பழக்க வழக்கங்களை நம்மிடையே உருவாக்கி நம்மை மூளைச் சலவை செய்து இனவாரியாக ஒற்றுமையாக இருந்தவர்களை மத அடிப்படையிலும், மதங்களின் உட்பிரிவுகளை கொண்டும் பிளவுகளை உண்டாக்கி நம்மிடையே புழக்கத்தில் விட்டு நம்மை மத வாரியாக பிரிப்பதில் முழுமூச்சில் இறங்கி அதில் பெருமளவில் வெற்றியும் கண்டனர்.
அதன் அடிப்படையில் அவர்கள் கைவைத்த பல இடங்களில், தமிழ் மாதங்களின் பெயர்களை மாற்றுவதிலும் செய்தனர். எனவே சித்திரை தான் தமிழ் ஆண்டின் முதல் மாதம் என்கிறதும் ஒன்று. நாம் அறிவுபூர்வமாக பார்த்தாலே தெரியும், நிலம் காய்ந்து கிடக்கும் வறட்சி மிகுந்திருக்கும் வெய்யில் காலமான சித்திரையில் எந்த விழாவேனும் கொண்டாட இயலுமா? (சித்திரை திருவிழா கொண்டாடவைத்ததும் பார்ப்பனிய மூளைதான் எவன் வறண்டு கிடந்தாலும் சுறண்டவேண்டியதை சுறண்ட வேண்டாமா என்ன) அல்லது நெல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டு வயல் காடுகள் எல்லாம் பசுமை பொங்கி நிற்கும் தை மாதத்தில் மகிழ்ச்சி பொங்க கொண்டாடுவோமா?
நெல் விற்று பயிறுகள் விற்று பணம் கையில் புரள போவதைதான் ''தை பிறந்தால் வழி பிறக்கும்'' என்பார்கள். இதிலிருந்து தெரியவில்லையா? தை தான் ஆண்டின் முதல் மாதம் அதுவே கொண்டாடுவதற்கும் ஏற்ற மாதம் என்று. ஆனால் தை பொங்கல் திருநாள் என்பதை ஆங்கில மாதமான சனவரி 15 தேதிகளில்தான் கொண்டாட வேண்டுமென்று நிர்ணயம் ஏதுமில்லை. இப்படி செய்வதிலும் ஒரு சூழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது, ஆம் முதலில் ஆரியத்திடம் தோற்றுப்போன தமிழன் பின் ஆங்கில ஆதிக்கத்திடமும் தோற்றுப்போனான்.
தமிழ் மாதங்களை சரியாக கணக்கிட்டு தை முதல் நாள் எப்போது எந்த தேதியில் வருகிறதென்று தமிழறிஞர்கள் அறிவிக்க வேண்டும். அது ஆங்கிலத்தின் கணக்கு படி ஒவ்வொரு ஆண்டும் மாறலாம். இதனால் தமிழருக்கு என்ன கேடு வந்துவிடப்போகிறது. நம் பண்பாட்டின் படி நம் மாதத்தில், நம் தினத்தில், நம் திருநாளை கொண்டாடுவதுதானே நமக்கு சிறப்பு. அதுதானே நம் இனத்தின் அடையாளமும் கூட.
சரி பொங்கல் திருநாளை யார் யார் கொண்டாடலாம்? என்று பார்த்தோமானால் இங்குதான் ஒட்டுமொத்த தமிழினமும் தலைகுனிகிறது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் கொண்டாடலாம் என்றால் மற்ற மதங்களில் இருப்பவர்கள் ''தாங்கள் தமிழர் அல்லர்'' என்பதுப்போல் ஒதுங்கிக் கொள்கின்றனர்.
ஏனெனில் மத அடிப்படையில் பார்த்தோமானால் ஒரு நடைமுறை சிக்கல் இருப்பதுப்போல் தெரியலாம். தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள் எல்லா மதங்களிலும், எல்லா மதங்களின் உட்பிரிவுகளிலும் அடைபட்டு கிடப்பதால் தமிழர் திருநாள் என்பது பொதுவானதாக இருந்த போதிலும் தமிழன் தான் சார்ந்த மதத்தை மட்டும் தூக்கிப் பிடிப்பதால் இத்திருநாளை கொண்டாடாமல் பொங்கலை உழவர் திருநாள் என்று ஒதுக்கிவிட்டு கண்டுக்கொள்ளாமல் இருந்துவிடுகின்றனர். இதனால் தாங்கள் தமிழர், தமிழினம் என்றாலும் உழவர் தொடங்கி மற்றும் சிலரை தவிர ஒரு பெரும் கூட்டம் தானாக ஒதுங்கிக்கொள்கிறது.
குறிப்பாக பொங்கல் தினத்தன்று பொங்கல், கரும்பு, இஞ்சி, இனிப்பு என வைத்து படைப்பதை சொல்லலாம். இதனாலேயே முசுலீம்கள் மற்றும் கிருத்துவ மதத்தவர்கள் தாங்களும் ஆதித்தமிழர்கள் என்பதைனை மறந்துவிட்டு ஒதுங்கிக் கொள்கின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லா மதத்திலும் படைத்தல் என்பது இருக்கிறது. ஒரு சில முறைகள் தான் வேறுபடுமே தவிர மற்றபடி எல்லோரும் உணவு பொருளை வைத்துதான் படைப்பார்கள். இது வரை எந்த கடவுளும் திண்றதில்லை, இவர்களும் கொடுத்ததில்லை. மேலும் இவர்களின் படைத்தல் என்பது மதரீதியானது, பொங்கல் திருநாள் என்பது தம் இனத்தை அடையாளப்படுத்துவது.
பொங்கல் திருநாளில் படைத்தல் என்கிற முறையும் கூட ஒரு நன்றி நவிழ்தல் தானே தவிர இதனால் அந்த மதத்திலிருந்து விலகிவிட்டதாக பொருளில்லை, இணைவைத்துவிட்டதாகவும் எடுத்துக்கொள்ளக்கூடாது. சரி படைத்தல் என்பதை ஒதுக்கிவிட்டு பொங்கல் திருநாளை கொண்டாட முடியாதா என்ன?
எல்லா தமிழரும் வீட்டில் பொங்கல் வைக்கலாம், கரும்பு வாங்கலாம் அவரவர் வசதிக்கேற்ப பொங்கல் வைத்து ஏழைகளுக்கு வழங்கலாம். கறி வெட்டி கொடுத்தால் தான் திருநாளா! கரும்பு வெட்டி கொடுத்தாலும் திருநாள்தானே. இதனால் ஏழை பணக்காரன் என எல்லோரும் ஒரே நேரத்தில் பசியாரலாமே. அப்படியே திருநாளையும் கொண்டாடியது போலும் இருக்குமே.
இதுதானே உண்மையான மனிதாபிமானம், இதுதானே தமிழர் அடையாளம், இது தானே சமத்துவம், இதுதானே சகோதரத்துவம் இப்படியே போனால் எங்கே வரப்போகிறது மதச்சண்டைகள்.
உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்கள் ஒரே நேரத்தில் பொங்கல் திருநாளை பொதுவாக கொண்டாடினால் அதைவிட சிறப்பு தமிழருக்கு வேறன்ன இருக்கமுடியும்.
எனவே மத அடிப்படையிலான நமது வறட்டு பிடிவாதங்களை ஒதுக்கிவைத்துவிட்டு தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒற்றை குலவையெடுத்து பாடுவோம். அப்படியே பொங்கல் திருநாள் உழவர் திருநாள் மட்டுமல்ல அது தமிழர் திருநாள் என்று உலகின் அனைத்து தமிழரும் கொண்டாடுவோம். இத்திருநாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்த தமிழக அரசுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்வோம்.
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
இனத்தால் நாம் தமிழர்கள்
இணைவோம் இன்று பொங்கல்
Labels:
கட்டுரைகள்
Tuesday, January 01, 2008
கோவணம் கட்டினவன்
எப்படி உலகமே புதுவருடத்தை கொண்டாடும்படியான
கட்டாயத்தை ஏற்றுக்கொண்ட தருணத்தில் உனக்கு மட்டுமென்ன இப்படியொரு நினைப்பு என எனக்குள் இன்னொரு மனம் கேள்விகேட்க...
கடைசியில் முதல் மனம் வெல்கிறது.
பழைய வருடங்களின் குப்பைகள் நிறைய குவிந்துகிடக்க அதனை ஒரு ஓரமாக தள்ளிவைத்துவிட்டு தன்மேல் புதிய வாந்திகளை அள்ளி அள்ளி பூசிக்கொண்டு குதூகலிக்க அடிமை மனம்கொண்டவர்களால் மட்டுமே முடிகிறது.
கடந்த ஆண்டிகளில் நடந்த எத்தனையோ அடக்குமுறைகளை மறந்தாலும், மறக்க முடியாதது திரு.சதாம் உசேன் அவர்களின் படுகொலை. ஈராகில் புகுந்ததிலிருந்து நடத்திய கொலைகளுடன் இந்த படுகொலையையும் நிகழ்த்தியவர்கள், அங்கே தற்போது அமைதி நிலை திரும்பிக்கொண்டிருப்பதாக (செய்திகள்) வதந்திகளை வாரி வாரி இரைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதை வெட்கங்கெட்ட அரபுநாடுகள் உள்பட அனைத்தும் தங்கள் நாடுகளில் வெளியாகும் (வெளியாக்கும்) பத்திரிகைகளில் வெளியிட்டு பூரித்துபோகின்றன.
அமைதி திரும்பிவிட்டதாக அவர்கள் வெளியுலகத்திற்கு காட்டுவது. அமெரிக்க இராணுவத்தினர் (புகைப்படங்களுக்காக) குழந்தைகளுக்கு இனிப்பு தருவதையும், உணவகங்கள் சிறப்பாக நடந்துகொண்டிருப்பதையும் தானே தவிர இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒருபிடி மண்ணாவது திரும்ப கிடைத்ததாவென்று காட்ட முடியவில்லை.
உதாரணத்திற்கு இங்கு என்னால் குறிப்பிட முடிந்தது ஒரு ஈராக் மட்டுமே இந்த வரிசையில் பாலஸ்தீனம், காஷ்மீர், இலங்கை தொடங்கி பாதிக்கப்படும் அத்தனை சமூகங்களுங்களை பற்றியும் எழுத இங்கே பக்கங்கள் போதாது என்பதும் தங்களுக்கு தெரிந்ததே.
தன் இனமே ஆனாலும் பாதிக்கப்படுவது யாரோதானே என நினைத்துக்கொண்டிருக்கும் இந்த சுரனைகெட்ட மனித இனத்தினிடையில்தான் உணர்வாளிகளும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்றென்னுகையில் எனக்கு ஏதோ பிணங்களின் மத்தியில் இருப்பதுபோல் தோன்றுகிறது.
இதே உணர்வுகள் உங்களுக்கும் தோன்றினால் நாம் தோழர்களே என்ற மாமனிதன் சே குவேராவின் வரிகளுடன் நாம் உரக்க ஊருக்கு உரைக்க சொல்லுவோம்.
இந்த புத்தாண்டு மட்டுமல்ல, நாளை நாமும் தாக்கப்படுவோம் என்பதை அறிந்தும் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் மனித சமூகம் இருக்கும்வரை எந்த இனத்தின் எந்த புத்தாண்டுகளும் நமக்கு பொலிவாகாது. வழக்கம்போல் இதுவும் வெரும் நாட்களின் எண்ணிக்கைக்குதான் என்று அலட்சியப்படுத்தி அசிங்கத்தைபோல் துடைத்து எறிந்துவிடலாம்.
எல்லா புத்தாண்டுகளுக்கும் நான் தவறாமல் செய்கிற நல்ல பழக்கம் புத்தாண்டுகள் பிறப்பதற்கு முன் உறங்கிவிடுவது. முதலாளிய கட்டமைப்புகளின் நடுவில் வாழ்வதால் ஒரு நாள் விடுமுறையை வீணாக்குவானேன் என்கிற நல்லெண்ணம்தான்.
வாழ்க உருப்படாத சனநாயகம்.
கட்டாயத்தை ஏற்றுக்கொண்ட தருணத்தில் உனக்கு மட்டுமென்ன இப்படியொரு நினைப்பு என எனக்குள் இன்னொரு மனம் கேள்விகேட்க...
கடைசியில் முதல் மனம் வெல்கிறது.
பழைய வருடங்களின் குப்பைகள் நிறைய குவிந்துகிடக்க அதனை ஒரு ஓரமாக தள்ளிவைத்துவிட்டு தன்மேல் புதிய வாந்திகளை அள்ளி அள்ளி பூசிக்கொண்டு குதூகலிக்க அடிமை மனம்கொண்டவர்களால் மட்டுமே முடிகிறது.
கடந்த ஆண்டிகளில் நடந்த எத்தனையோ அடக்குமுறைகளை மறந்தாலும், மறக்க முடியாதது திரு.சதாம் உசேன் அவர்களின் படுகொலை. ஈராகில் புகுந்ததிலிருந்து நடத்திய கொலைகளுடன் இந்த படுகொலையையும் நிகழ்த்தியவர்கள், அங்கே தற்போது அமைதி நிலை திரும்பிக்கொண்டிருப்பதாக (செய்திகள்) வதந்திகளை வாரி வாரி இரைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதை வெட்கங்கெட்ட அரபுநாடுகள் உள்பட அனைத்தும் தங்கள் நாடுகளில் வெளியாகும் (வெளியாக்கும்) பத்திரிகைகளில் வெளியிட்டு பூரித்துபோகின்றன.
அமைதி திரும்பிவிட்டதாக அவர்கள் வெளியுலகத்திற்கு காட்டுவது. அமெரிக்க இராணுவத்தினர் (புகைப்படங்களுக்காக) குழந்தைகளுக்கு இனிப்பு தருவதையும், உணவகங்கள் சிறப்பாக நடந்துகொண்டிருப்பதையும் தானே தவிர இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒருபிடி மண்ணாவது திரும்ப கிடைத்ததாவென்று காட்ட முடியவில்லை.
உதாரணத்திற்கு இங்கு என்னால் குறிப்பிட முடிந்தது ஒரு ஈராக் மட்டுமே இந்த வரிசையில் பாலஸ்தீனம், காஷ்மீர், இலங்கை தொடங்கி பாதிக்கப்படும் அத்தனை சமூகங்களுங்களை பற்றியும் எழுத இங்கே பக்கங்கள் போதாது என்பதும் தங்களுக்கு தெரிந்ததே.
தன் இனமே ஆனாலும் பாதிக்கப்படுவது யாரோதானே என நினைத்துக்கொண்டிருக்கும் இந்த சுரனைகெட்ட மனித இனத்தினிடையில்தான் உணர்வாளிகளும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்றென்னுகையில் எனக்கு ஏதோ பிணங்களின் மத்தியில் இருப்பதுபோல் தோன்றுகிறது.
இதே உணர்வுகள் உங்களுக்கும் தோன்றினால் நாம் தோழர்களே என்ற மாமனிதன் சே குவேராவின் வரிகளுடன் நாம் உரக்க ஊருக்கு உரைக்க சொல்லுவோம்.
இந்த புத்தாண்டு மட்டுமல்ல, நாளை நாமும் தாக்கப்படுவோம் என்பதை அறிந்தும் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் மனித சமூகம் இருக்கும்வரை எந்த இனத்தின் எந்த புத்தாண்டுகளும் நமக்கு பொலிவாகாது. வழக்கம்போல் இதுவும் வெரும் நாட்களின் எண்ணிக்கைக்குதான் என்று அலட்சியப்படுத்தி அசிங்கத்தைபோல் துடைத்து எறிந்துவிடலாம்.
எல்லா புத்தாண்டுகளுக்கும் நான் தவறாமல் செய்கிற நல்ல பழக்கம் புத்தாண்டுகள் பிறப்பதற்கு முன் உறங்கிவிடுவது. முதலாளிய கட்டமைப்புகளின் நடுவில் வாழ்வதால் ஒரு நாள் விடுமுறையை வீணாக்குவானேன் என்கிற நல்லெண்ணம்தான்.
வாழ்க உருப்படாத சனநாயகம்.
Labels:
கட்டுரைகள்
Friday, December 28, 2007
"தும்பிக்காரன்" வார்ப்பில்
என் தும்பிக்காரன் பற்றி அய்யா த.பழமலய் அவர்களை தொடர்ந்து
வார்ப்பு கவிதை தளத்திலும், வானவில், மாற்று, குளம் மற்றும் தோழமை இதழ்களிலும் விமர்சனம் எழுதி சிறப்பு செய்தவர்ளுக்கும்,
திருமுதுகுன்றத்தில்(விருதாசலம்) தனியாக அறிமுக விழா நடத்திய தோழர்கள் சி.சுந்தரபாண்டியன், பட்டி செங்குட்டுவன், பொன்குமார், லலித்குமார்,
மற்றும் புதுவை தோழர்களுக்கும் நன்றிகள்
காண்க வார்ப்பு:
http://www.vaarppu.com/review.php?rvr_id=16
வார்ப்பு கவிதை தளத்திலும், வானவில், மாற்று, குளம் மற்றும் தோழமை இதழ்களிலும் விமர்சனம் எழுதி சிறப்பு செய்தவர்ளுக்கும்,
திருமுதுகுன்றத்தில்(விருதாசலம்) தனியாக அறிமுக விழா நடத்திய தோழர்கள் சி.சுந்தரபாண்டியன், பட்டி செங்குட்டுவன், பொன்குமார், லலித்குமார்,
மற்றும் புதுவை தோழர்களுக்கும் நன்றிகள்
காண்க வார்ப்பு:
http://www.vaarppu.com/review.php?rvr_id=16