நூல்ஆசிரியர் -கவிஞர் கவிமதி
நூல்விமர்சனம் -கவிஞர் இரா.இரவி
நூலின்அட்டைப்படமே வித்தியாசமாக உள்ளது. நன்றி புதுச்சேரித் தோழர்களுக்கும் புலம் பெயர்ந்த தோழர்களுக்கும் என ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது. சிறுகதை ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தது இன்று சிறுகதை நசிந்து விட்டதோ? என்று எண்ணுமளவிற்கு சுருங்கிவிட்டது. ஒரு நிமிடக் கதை, அரை நிமிடக் கதை, அஞ்சல் அட்டைக் கதை என சுருங்கி நகைச்சுவைத் துணுக்ககை கதை என்று சொல்லும் காலத்தில் சிறுகதை எப்படி? எழுத வேண்டும் என இலக்கணம் கூறுவது போல இந்நூல் வந்துள்ளது.
நூல் ஆசிரியர் கவிமதி துபாயில் வாழ்ந்தாலும் தனது குழந்தைப் பருவத்து நிகழ்வுகளை உணர்வுகளை சிறுகதையாக்கி இருக்கிறார்கள். 21 சிறுகதைகள் இந்நூலில் உள்ளது. ஒவ்வொரு சிறுகதையையும் ஒருவரியில் சொல்வதென்றால், 1) கும்பகோணம் தீ விபத்து நினைவூட்டுவது 2) உலகமயம் தாராளமயம் காரணமாக அடையாளத்தை தொலைத்தது, 3) பண்பாட்டுச் சீரழிவு செய்வோருக்கு சவுக்கடி 4) பேராசை பெருநஷ்டம், நஷ்டத்திலும் சில நன்மை. 5) இனிமையான இலங்கைக் தமிழ் பேச்சு கற்கண்டு தோற்றுப் போச்சு 6) பெண்களை ஏமாற்றும் ஆண்களுக்கு கன்னத்தில் அரை, இப்படியே நூலில் உள்ள ஒவ்வொரு கதை பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆசிரியரின் நல்ல முயற்சி இலக்கியம் என்பது நடைமுறை வாழ்வை எடுத்து இயம்புவது மட்டுமல்ல மனிதனை செம்மைப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு செய்தி உள்ளது. மனிதனை நெறிப்படுத்தும் வாழ்வியல் கருத்துக்களின் பெட்டகமாக உள்ளது. இவருடைய நடை, தனி நடை எவரையும் பின்பற்றாத புதிய நடை அது மட்டுமல்ல எளிதில் அனைவருக்கும் புரிந்திடும் எளிய நடை, இதற்காகவே கதை ஆசிரியரை பாராட்ட வேண்டும். கவிமதி என்பது புனைப் பெயர் தான் என்றாலும் காரணப் பெயரோ? என எண்ணத் தோன்றுகிறது. கவிதை நடையில் கதை சொல்கிறார். கவிதை படிக்கும் போது கிடைக்கும் இன்பம் கதை படிக்கும் போதும் கிடைக்கின்றது அது தான் நூலின் வெற்றி.
நவீன கதையாசிரியர்கள் இன்று வலிய ஆங்கிலச் சொற்களை கலந்து கதை எழுதுவதை பார்க்கிறோம். ஆனால் நூலாசிரியர் கவிமதி ஆங்கில சொற்களை வலிந்து பயன்படுத்த வில்லை இதற்காகவே பாராட்ட வேண்டும். ஆங்கிலச் சொற்களைக் கலந்தால் தான் கதை இயல்பாக இருக்கும் என வரட்டுத்தனமாக வாதிடுபவரின் தலையில் கொட்டும் வண்ணம் நல்ல தமிழில் நடையில் வந்துள்ளது. சிறுகதை பிரியர்களுக்கு இந்நூல் ஒரு இலக்கிய பலா.கதைகளிடையே வாசிப்பு உலா சென்றால் உள்ளம் மகிழ்ந்திடும். சிறுகதைகளின் பெயரையே தனியாக ஆய்வு செய்யலாம்.
இலக்கியத்தரமான தலைப்புகள் இக்கதைகளில் சில நிகழ்வுகள் ஆசிரியர் தன் வாழ்வில் நடந்த சில உண்மை நிகழ்வுகளையும் கதையாக்கி இருப்பதால் கதைகள் உயிரோட்டமாக இருக்கின்றன. படிக்கும் வாசகர்களுக்கு போரடிக்காமல் எப்படி? கதை சொல்ல வேண்டும் என்ற வித்தையை நன்கு கற்று இருக்கிறார். ஆசிரியரின் திறமைக்குச் பறை சாற்றும் விதமாக உள்ளது பாராட்டுக்கள்.
நல்ல தமிழ் சொற்களை ஆசிரியர் பயன்படுத்தி இருப்பதற்கு பதச்சோறு போல ஒரு உதாரணம் "பதிவுக்காக" என்ற 18வது கதையில் "பாஸ்போர்ட்" என்ற ஆங்கில சொல்லை பயன்படுத்தாமல் "கடவுச்சீட்டு" என்ற நல்ல தமிழ்ச்சொல்லை பயன்படுத்தி இருக்கிறார். கதை படிப்பது போல இல்லை நேரடியாக காட்சிகளைப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகின்றார். கதையில் வரும் பாத்திரங்கள் நம் மனக்கண் முன்னே வந்து விடுகின்றன. சிறுகதை உலகில் சிறந்த இடம் உறுதியாக உண்டு ஆசிரியருக்கு தொடர்ந்து எழுதுங்கள்
Thursday, May 07, 2009
Thursday, March 12, 2009
அடிமைகளின் காலம்
இந்நேரத்திற்கு உலகில்
எத்தனையோபேர் தலையில்
இறங்கியிருக்கக்கூடும்
ஏவுகணைகள்
இரக்கமின்றி
பிய்த்து எறியப்பட்டிருக்கும்
இராக்கியர்களின் இதயங்கள்
கருவறுக்கப்பட்டிருக்கும்
காசாவின் கனவுலகம்
குலை குலையாய்
குதறியிருக்ககூடும்
ஈழத்தில் ஈரல்கள்
இன்னும்
அநியாயங்கள் அனைத்திலும்
உன் கையே இருக்குமென்பது அறிந்தே
வெறுக்கும் ஒருகூட்டம் விளகியிருக்கும்
உன் நாட்களை கொண்டாடாமல்
அதற்காகவெல்லாம் கவலைபடாதே
அடுத்தவன் தலையில்
குண்டை போட்டுவிட்டு
நீ சொல்லும்
"ஆப்பி நீயு இயர்களை"
அணுகூடபிசகாமல்
ஆண்டுதோறும் கொண்டாடுவர்
உனக்கு பிறந்தவர்கள்
எத்தனையோபேர் தலையில்
இறங்கியிருக்கக்கூடும்
ஏவுகணைகள்
இரக்கமின்றி
பிய்த்து எறியப்பட்டிருக்கும்
இராக்கியர்களின் இதயங்கள்
கருவறுக்கப்பட்டிருக்கும்
காசாவின் கனவுலகம்
குலை குலையாய்
குதறியிருக்ககூடும்
ஈழத்தில் ஈரல்கள்
இன்னும்
அநியாயங்கள் அனைத்திலும்
உன் கையே இருக்குமென்பது அறிந்தே
வெறுக்கும் ஒருகூட்டம் விளகியிருக்கும்
உன் நாட்களை கொண்டாடாமல்
அதற்காகவெல்லாம் கவலைபடாதே
அடுத்தவன் தலையில்
குண்டை போட்டுவிட்டு
நீ சொல்லும்
"ஆப்பி நீயு இயர்களை"
அணுகூடபிசகாமல்
ஆண்டுதோறும் கொண்டாடுவர்
உனக்கு பிறந்தவர்கள்
Thursday, November 27, 2008
Tuesday, November 25, 2008
Sunday, November 23, 2008
கீற்று.காம்-விருது

ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லும்
அடி மணல் தூய்மை
எம் உறவுகளின் அடையாளம்
உலகின் ஈரம்காயாத அறிவுகளை
அள்ளி அள்ளி இலக்கிய பசியாற்றுவது
எம் தாய்மையின் அடையாளம்
நெடுந்துயர்ந்த மரமேரி கீற்றுமேல் அமர்ந்து
இளநீர் இறக்கி இளைப்பாற்றுவது
எம் விருந்தோம்பலின் அடையாளம்
தமிழின் தொன்மம் தேடித் தேடி
இன அடையாளத்திற்கு ஏர் பிடிப்பது
எம் உழைப்பின் அடையாளம்
சக தமிழனின் உணர்வு பாய்ச்சலுக்கு
விருது படைத்து வீரத்திலகமிட்டு
வெற்றிக்களிப்பில் துள்ளிகுதிப்பதுதான்
எம் தூய்மை நட்பிற்கு அடையாளம்
அத்தகையதொரு அடையாளமாய்
எம் தோழர் இனியவன் இருக்கையில்
இனி எமக்கேது சோர்வு
தொடர்க உம் அடையாளப் பணி
பின்னால் தொடரும் உங்கள்
தம்பிகளின் அணி.
தோழர் ரமேசு (கீற்று.காம்)அவர்களுக்கு விருதளிக்கத்
தேர்வு செய்தமைக்கான மகிழ்வில்
தோழர்களுடன் துள்ளி குதிக்கும்
கவிமதி
துபாயிலிருந்து...
Saturday, August 23, 2008
Monday, June 30, 2008
நேர்காணல்
கவிஞர் சுகிர்தராணி-நம் நவீன தமிழ் இலக்கிய உலகில் சில அதிர்வுகளின் அடையாளம்.
"கைப்பற்றி என் கனவுகேள்", "இரவு மிருகம்" "அவளை மொழிபெயர்த்தல்" ஆகிய மூன்று தொகுதிகளாக அவருடைய கவிதைகள் வெளியாகியுள்ளன. பிறப்பினால் தலித்தாக அறியப்படும் சுகிர்தராணியின் கவிதைகள் இன்று பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளன. பெண் உடல் மொழி பற்றியும், தலித் விடுதலை பற்றியும் இவர் எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுபவை.
----------------------------------------------------------------------------------------------------------------------
"என் கண்களின் ஒளிக்கற்றைகள்
முன்னறையில் உறங்குபவனின்
ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன.
கோப்பை நிறைய வழியும் மதுவோடு
என்னுடல் மூழ்கி மிதந்தது.
கூசும் வார்த்தைப் பிரயோகங்களை
சன்னமாய் சொல்லியவாறு
சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
பறவைகளின் சிறகோசை கேட்டதும்
என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு
ஓடிவிட்டது இரவு மிருகம்"
என்பதைப் போல உடல் மொழி கவிதைகளையும்
"செத்துப்போன மாட்டைத்
தோலுரிக்கும்போது
காகம் விரட்டுவேன்
வெகு நேரம் நின்று வாங்கிய
ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு
சுடுசோறெனப் பெருமை பேசுவேன்
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் மறைத்துக் கடந்துவிடுவேன்
அப்பாவின் தொழிலும்
ஆண்டு வருமானமும்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடி வாங்குவேன்
தோழிகளற்ற
பின் வரிசையிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்
இப்போது
யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்
பறச்சி என்று"
என்கிற தலித்தியம் சார்ந்த கவிதைகளையும் மிகவும் துணிச்சலாகவே எழுதி ஒரு பெரும் கவனிப்புக்கு உள்ளாகி இருப்பவர் சுகிர்தராணி.
--நன்றி
அதிகாலை.காம்
"கைப்பற்றி என் கனவுகேள்", "இரவு மிருகம்" "அவளை மொழிபெயர்த்தல்" ஆகிய மூன்று தொகுதிகளாக அவருடைய கவிதைகள் வெளியாகியுள்ளன. பிறப்பினால் தலித்தாக அறியப்படும் சுகிர்தராணியின் கவிதைகள் இன்று பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளன. பெண் உடல் மொழி பற்றியும், தலித் விடுதலை பற்றியும் இவர் எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுபவை.
----------------------------------------------------------------------------------------------------------------------
"என் கண்களின் ஒளிக்கற்றைகள்
முன்னறையில் உறங்குபவனின்
ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன.
கோப்பை நிறைய வழியும் மதுவோடு
என்னுடல் மூழ்கி மிதந்தது.
கூசும் வார்த்தைப் பிரயோகங்களை
சன்னமாய் சொல்லியவாறு
சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
பறவைகளின் சிறகோசை கேட்டதும்
என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு
ஓடிவிட்டது இரவு மிருகம்"
என்பதைப் போல உடல் மொழி கவிதைகளையும்
"செத்துப்போன மாட்டைத்
தோலுரிக்கும்போது
காகம் விரட்டுவேன்
வெகு நேரம் நின்று வாங்கிய
ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு
சுடுசோறெனப் பெருமை பேசுவேன்
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் மறைத்துக் கடந்துவிடுவேன்
அப்பாவின் தொழிலும்
ஆண்டு வருமானமும்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடி வாங்குவேன்
தோழிகளற்ற
பின் வரிசையிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்
இப்போது
யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்
பறச்சி என்று"
என்கிற தலித்தியம் சார்ந்த கவிதைகளையும் மிகவும் துணிச்சலாகவே எழுதி ஒரு பெரும் கவனிப்புக்கு உள்ளாகி இருப்பவர் சுகிர்தராணி.
--நன்றி
அதிகாலை.காம்
Friday, June 20, 2008
விடுதலை பிறந்தது
கோடியில் புரலும் அரசியல், ஆன்மீக நயவஞ்சகர்களுக்கு
மத்தியில் கோடிக்கணக்கான எம் மக்களின் ஒற்றைக்குரல்
அண்ணன் தொல்.திருமாவளவன்.
தொன்மத் தமிழின் தூய்மை அரசியல் வாழ்வில் இருபத்தைந்தாவது ஆண்டுகளை கடந்து எம் தமிழுக்காக, எம் தமிழினத்திற்க்காக, எம் மண்ணுக்காக, எம் உரிமைக்காக போராடிவரும் சூழலில் நாமும் அவருடன் கைக்கோர்த்து பார்ப்பனிய இந்துத்துவாவிற்கு எதிராகவும், இந்திய அரசியல், மதசார்பின்மை என்கிற அயோக்கியத்தனங்களுக்கு எதிராகவும் களமிறங்கி போராட கடமைப்பட்டிருக்கிறோம் என்பதனை நினைவுக்கூர்ந்து.அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களை வாழ்த்தி எம் இனத்தின் ஒட்டு மொத்த வாழ்த்தாக இப்பாடலையும் சமர்ப்பிக்கிறேன்.
--------------------------------------------------------
விடுதலை பிறந்ததடா
செம்மொழியாய் இனித்திடவும்
சிதைப்போரை அழித்திடவும்
எம் மொழியும் கானாத
எழுச்சிதனை
அடைந்திடவும்
பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா
சிந்தைனையின் ஒளியாகி
சிறுத்தைகளின் தாயாகி
வஞ்சனைகள் செய்வோரை
வகுத்தெடுக்கும்
வாளாக
பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா
அடிமையல்ல நாங்கள் யார்க்கும்
என்றும் ஆளுகின்ற வர்க்கமென
களம் அமைத்து போராடி
நிறம் அழித்து நிமிர்ந்து நிற்க
பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா
காவிரிகள் காய்ந்து கிடக்க
கர்நாடகம் தர மறுக்க
வற்றாத வான்மழையாய்
பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா
புனித புத்தன் தொடரினிலே
புரட்சி சிறுத்தை அம்பேத்கர்
பெரியாரின் பெரும் நிழலாய்
பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா
வருமா வருமா விடுதலையென்று
வாய் பிளந்து நிற்கையிலே
‘’திருமா’’ உருவில் திரும்பவந்து
பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா
மத்தியில் கோடிக்கணக்கான எம் மக்களின் ஒற்றைக்குரல்
அண்ணன் தொல்.திருமாவளவன்.
தொன்மத் தமிழின் தூய்மை அரசியல் வாழ்வில் இருபத்தைந்தாவது ஆண்டுகளை கடந்து எம் தமிழுக்காக, எம் தமிழினத்திற்க்காக, எம் மண்ணுக்காக, எம் உரிமைக்காக போராடிவரும் சூழலில் நாமும் அவருடன் கைக்கோர்த்து பார்ப்பனிய இந்துத்துவாவிற்கு எதிராகவும், இந்திய அரசியல், மதசார்பின்மை என்கிற அயோக்கியத்தனங்களுக்கு எதிராகவும் களமிறங்கி போராட கடமைப்பட்டிருக்கிறோம் என்பதனை நினைவுக்கூர்ந்து.அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களை வாழ்த்தி எம் இனத்தின் ஒட்டு மொத்த வாழ்த்தாக இப்பாடலையும் சமர்ப்பிக்கிறேன்.
--------------------------------------------------------
விடுதலை பிறந்ததடா
செம்மொழியாய் இனித்திடவும்
சிதைப்போரை அழித்திடவும்
எம் மொழியும் கானாத
எழுச்சிதனை
அடைந்திடவும்
பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா
சிந்தைனையின் ஒளியாகி
சிறுத்தைகளின் தாயாகி
வஞ்சனைகள் செய்வோரை
வகுத்தெடுக்கும்
வாளாக
பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா
அடிமையல்ல நாங்கள் யார்க்கும்
என்றும் ஆளுகின்ற வர்க்கமென
களம் அமைத்து போராடி
நிறம் அழித்து நிமிர்ந்து நிற்க
பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா
காவிரிகள் காய்ந்து கிடக்க
கர்நாடகம் தர மறுக்க
வற்றாத வான்மழையாய்
பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா
புனித புத்தன் தொடரினிலே
புரட்சி சிறுத்தை அம்பேத்கர்
பெரியாரின் பெரும் நிழலாய்
பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா
வருமா வருமா விடுதலையென்று
வாய் பிளந்து நிற்கையிலே
‘’திருமா’’ உருவில் திரும்பவந்து
பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா
Labels:
வாழ்த்துகள்
Friday, May 23, 2008
இது எரிமலை பசி.
தன் மண்ணை விட்டு சென்றாலும் மண்ணின் மணம் மாறாத இலக்கியம் படைக்கவும்.தான் சார்ந்த இயக்கத்தின் கோட்பாடுகளைவைத்து இளைய சமூகத்திற்கு தன்னால் இயன்ற தொண்டு செய்திடவேண்டுமென்கிற கடமையுணர்வும் எல்லோருக்கும் வருவதில்லை. தான் தன் குடும்பம் என்று தன்நல சிந்தனைகளிலேயே சுருங்கிவிடாது, தன் உழைப்பு, பொருளாதாரம் என்று சமூக நலனுக்காக செலவிடுகிற ஆண்மையும் எல்லோருக்கும் வாய்த்துவிடாது.
சிறு வயது முதலே தன் கண்முன் நடக்கும் வன்கொடுமைகள், சாதி திணிப்புகள், அரசியல் அட்டூழியங்கள் என்று கண்டு கண்டு செரிக்கமாட்டாமல் அவற்றிக்கு எழுத்துக்களால் பதிலடி கொடுப்பதுதென்பது ஆயிரத்தில் ஒருவருக்கு உண்டாகும் உணர்வின் கொதிநிலை. வெந்த சோறும் விதிவந்தால் சாவும் என்பது இனியவன் போன்றவர்களுக்கு பொருந்தாது. இது சமூக எழுச்சிக்கான எரிமலை பசி என்றும் அடங்காது எதற்கும், எவனுக்கும் அடிபணியாது.
எழுத்தார்வமும், தன் சமூகத்திற்கு தன்னால் இயன்ற அளவில் ஏதாவது செய்யவேண்டும் என்கிற தொண்டார்வமும் இனியவன் கட்டுரைகளிலும், கவிதைகளிலும வெளிபட்டுகிடக்கிறது. ஏறக்குறைய தான் நேசித்த தலைவர்கள் தொடங்கி தன் துணைவியார் வரை எல்லோருக்கும் கவிதை எழுதியிருக்கிறார். சிலரின் படைப்புகளில் பெரும்பாலும் முடிவில்லாத ஊசலாட்ட தன்மையே வெளிப்படுவதுப் போன்ற தவற்றை இனியவனும் செய்திருக்கிறார். இதனால் இனியவன் எந்த கொள்கையின் தளத்தில் நின்று பேசுகிறார் என்பது முழுமைபெறவில்லை. அதிலும் குறிப்பாக முஸ்லீக்கிற்கு வக்காலத்து வாங்குவதென்பனை முஸ்லீம் இளைஞர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது தெளிவு. ஏனெனில் பல சந்தர்ப்பங்களில் தன் சொந்த வருமானத்திற்காக லீக்கை அடமானம் வைத்ததால்தான் இன்று பல மறுமலர்ச்சி இயக்கங்கள் தோன்றின என்பதனை அறிவோம். முஸ்லீம் லீக் என்ற மரியாதை தலைவர் காயிதே மில்லத் அவர்களோடு முடிடைந்துவிட்டது என்பதே உண்மை.
மேலும் தான் சார்ந்த மதத்திற்கும், மத நல்லிணக்கம் என்கிறதான ஏமாற்றுவேலைக்கும் துணைப் போவதுப்போல் இராமன், சிவன், பிள்ளையார், முருகன் எல்லோரும் இறைத்தூர்களே அவர்களின் புதல்வர்களே என்று எழுதிருப்பது பகுத்தறிவிற்கு அப்பற்பட்ட செய்தியாகவே படுகிறது. இராமன் என்பது ஏதோ குறுதியும் சதையுமாக வாழ்ந்த ஒன்று என்கிற சப்பைகட்டுகள் தேவையில்லை. இணையற்ற வீரர் திரு. திப்பு சுல்தான் அவர்களையே கற்பனை பாத்திரம் என்கிறான். நன்கு புராணங்களை கற்றறிந்த பரமஹம்சர் போன்றவர்களே இராமன் ஒரு கற்பனை பாத்திரம், இந்து மதம் என்கிற கட்டமைப்பே தவறானது என்று வாக்குமூலம் தருகின்ற தருவாயில், இனியவன் போன்ற இஸ்லாமிய சிந்தனையுள்ளவர்கள் தங்கள் நூல்களில் மேற்கண்டவர்களை இறைத்தூதர்கள் என்று பதிவுக்குள்ளாக்குவது தவறு.
இது வருங்கால சூழலில் உண்மையென்றாக்க யாராவது முயன்றால் அதற்கு இனியவன் போன்றோரின் நூலும் ஆதாரமாகிவிடும். நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய மவ்லவி மு.ஹதீஸ் மஸ்லஹி, ஆனாரூனா ஆகியவர்களும் இதை திருத்தாததுதான் வியப்பு.
எதிர்வரும் காலங்களில் தன் படைப்புகளில் இப்படிபட்ட வரலாற்று குறைபாடுகளை நீக்கியும், முற்றிலுமாக தவிர்த்தும் வெற்றி நடைபோட என்றும் வாழ்த்துகள்.
தோழமையோடு
கவிமதி (துபாய்)
நூல்: விழித்தெழு உணர்வுகொள் உருவாக்கு
ஆசிரியர்: இனியவன் ஹாஐ¢முஹம்மது.
மின்னஞ்சல்:iniyavan_haji@hotmail.com
சிறு வயது முதலே தன் கண்முன் நடக்கும் வன்கொடுமைகள், சாதி திணிப்புகள், அரசியல் அட்டூழியங்கள் என்று கண்டு கண்டு செரிக்கமாட்டாமல் அவற்றிக்கு எழுத்துக்களால் பதிலடி கொடுப்பதுதென்பது ஆயிரத்தில் ஒருவருக்கு உண்டாகும் உணர்வின் கொதிநிலை. வெந்த சோறும் விதிவந்தால் சாவும் என்பது இனியவன் போன்றவர்களுக்கு பொருந்தாது. இது சமூக எழுச்சிக்கான எரிமலை பசி என்றும் அடங்காது எதற்கும், எவனுக்கும் அடிபணியாது.
எழுத்தார்வமும், தன் சமூகத்திற்கு தன்னால் இயன்ற அளவில் ஏதாவது செய்யவேண்டும் என்கிற தொண்டார்வமும் இனியவன் கட்டுரைகளிலும், கவிதைகளிலும வெளிபட்டுகிடக்கிறது. ஏறக்குறைய தான் நேசித்த தலைவர்கள் தொடங்கி தன் துணைவியார் வரை எல்லோருக்கும் கவிதை எழுதியிருக்கிறார். சிலரின் படைப்புகளில் பெரும்பாலும் முடிவில்லாத ஊசலாட்ட தன்மையே வெளிப்படுவதுப் போன்ற தவற்றை இனியவனும் செய்திருக்கிறார். இதனால் இனியவன் எந்த கொள்கையின் தளத்தில் நின்று பேசுகிறார் என்பது முழுமைபெறவில்லை. அதிலும் குறிப்பாக முஸ்லீக்கிற்கு வக்காலத்து வாங்குவதென்பனை முஸ்லீம் இளைஞர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது தெளிவு. ஏனெனில் பல சந்தர்ப்பங்களில் தன் சொந்த வருமானத்திற்காக லீக்கை அடமானம் வைத்ததால்தான் இன்று பல மறுமலர்ச்சி இயக்கங்கள் தோன்றின என்பதனை அறிவோம். முஸ்லீம் லீக் என்ற மரியாதை தலைவர் காயிதே மில்லத் அவர்களோடு முடிடைந்துவிட்டது என்பதே உண்மை.
மேலும் தான் சார்ந்த மதத்திற்கும், மத நல்லிணக்கம் என்கிறதான ஏமாற்றுவேலைக்கும் துணைப் போவதுப்போல் இராமன், சிவன், பிள்ளையார், முருகன் எல்லோரும் இறைத்தூர்களே அவர்களின் புதல்வர்களே என்று எழுதிருப்பது பகுத்தறிவிற்கு அப்பற்பட்ட செய்தியாகவே படுகிறது. இராமன் என்பது ஏதோ குறுதியும் சதையுமாக வாழ்ந்த ஒன்று என்கிற சப்பைகட்டுகள் தேவையில்லை. இணையற்ற வீரர் திரு. திப்பு சுல்தான் அவர்களையே கற்பனை பாத்திரம் என்கிறான். நன்கு புராணங்களை கற்றறிந்த பரமஹம்சர் போன்றவர்களே இராமன் ஒரு கற்பனை பாத்திரம், இந்து மதம் என்கிற கட்டமைப்பே தவறானது என்று வாக்குமூலம் தருகின்ற தருவாயில், இனியவன் போன்ற இஸ்லாமிய சிந்தனையுள்ளவர்கள் தங்கள் நூல்களில் மேற்கண்டவர்களை இறைத்தூதர்கள் என்று பதிவுக்குள்ளாக்குவது தவறு.
இது வருங்கால சூழலில் உண்மையென்றாக்க யாராவது முயன்றால் அதற்கு இனியவன் போன்றோரின் நூலும் ஆதாரமாகிவிடும். நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய மவ்லவி மு.ஹதீஸ் மஸ்லஹி, ஆனாரூனா ஆகியவர்களும் இதை திருத்தாததுதான் வியப்பு.
எதிர்வரும் காலங்களில் தன் படைப்புகளில் இப்படிபட்ட வரலாற்று குறைபாடுகளை நீக்கியும், முற்றிலுமாக தவிர்த்தும் வெற்றி நடைபோட என்றும் வாழ்த்துகள்.
தோழமையோடு
கவிமதி (துபாய்)
நூல்: விழித்தெழு உணர்வுகொள் உருவாக்கு
ஆசிரியர்: இனியவன் ஹாஐ¢முஹம்மது.
மின்னஞ்சல்:iniyavan_haji@hotmail.com
Labels:
நூல் விமர்சனம்
Saturday, April 26, 2008
அறிவியலா? ஆன்மீகமா?
உனக்கென்று ஒரு கொள்கையை தேர்ந்துதெடுத்துக்கொள் இல்லாவிடில் எவனெவனோ சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் படியாகலாம்” என்று எங்கோ படித்த ஒரு செய்தி இப்போது நினைவிற்கு வந்து தொலைக்கிறது.
மனித இனம் தோன்றியதாக மனிதனே! அறிந்து சொன்ன காலம் முதல் அவன் தலையில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு, தலை கீழே உருளும்வரை இறங்கமால் இருக்கும் இந்த சாதி மதங்கள் மனித இனத்திற்கே தீங்கானவையென பல சமூக அக்கறையுள்ளவர்கள் சொன்னாலும், அவர்களும் தங்கள் கடமைக்கு போகிறப்போக்கில் ஏதாவது ஒரு மதத்திற்கு வக்காலத்து வாங்கிவிட்டு தன்னை நம்பிய மக்களை நரி வாயிலிருந்து பிடிங்கி முதலை வாயில் திணித்துவிட்டு தங்கள் கண்களை மூடிக்கொள்வர்.
எல்லாம் ஏமாற்றுவேலை, எல்லாம் உன்னை சுரண்டும் வேலை, எல்லாம் பெண்களை அடிமைப்படுத்துவது, எல்லாம் ஒரு சாரரருக்கு மட்டுமே உரியவகையில் உள்ளது, மத விடுதலையும், பெண் விடுதலையும் தான் உண்மையான மனித விடுதலை என்று மதங்களில் உள்ள அத்துனை திள்ளு முள்ளுகளையும் எடுத்துக்கூறி மதங்களின் தலையில் மாறி மாறி செருப்பால் அடித்த பெருமை எம் தந்தை பெரியாருக்கே சேரும். அவர் வாங்கிக்கொடுத்த கல்வியாலும், அறிவாலும்தான் இன்று நாம் ஒரு வகையிலாவது நம்மை அடிமைபடுத்த முயலும் சாதிகளை எதிர்கொள்ள துணிவு வருகிறது.
மனித இனத்திற்கான தேவைகளையும், அவர்தம் அறிவு வளர்ச்சிக்கு தேவையான அறிவியலையும் இதுவரை வந்த எந்த மதமும் கற்றுதரவில்லை. ஏன் ஒரு குண்டூசியைக்கூட இதுவரை எந்த ஆன்மீகவாதியும் கண்டுபிடித்ததில்லை. மாறாக அவரவர் கற்பனைக்கு ஏற்றவகையிலும் தான் வாழ்ந்த சூழலிற்கும் தகுந்தாற்போல் பல புரட்சிகளை உருவாக்கி ஒரு மதத்திலிருந்து வேறான்றிற்கு மாற்றிய பெருமையே உண்டு எனலாம்.
இருந்தும் மனிதன் தன் மதக்கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு தன் உடல், பொருள், ஆவி, நேரம் என அத்தனையும் இந்த மனித சமூகத்திற்காக அர்ப்பணித்து புதிய புதிய கண்டுபிடிப்புகளை கொண்டுவந்தால், நோகாமல் நொங்கு தின்பதுபோல் எல்லாம் என் மதத்தை படித்துதான் கண்டுபிடித்தான் என்று நா கூசாமல் சொல்லிக் கொள்வதில் ஒன்றையொன்று சலைத்தவையில்லை. இதில் வேடிக்கை என்னவெனில் அதே விஞ்ஞானி சொல்லும் கருத்துக்களை ஏற்காமல் அவர்களுக்கு பைத்தியக்காரன் என்ற பட்டம் சூட்டி, ஊரைவிட்டு அடித்து விரட்டுவதும்,அவரின் கண்டுபிடிப்புகளை தீக்கிரையாக்குவதிலுமே குறியாக இருந்தவனெல்லாம்; பின்னால் என் மதத்தின் அடிப்படையில்தான் இதை கண்டுபிடித்தான் என்று வெட்கமேயில்லாமல் சொல்லிக்கொள்வதுதான்.
மனித இனத்திற்கு தன் கண்முன்னால் நடக்கும் அநியாயத்தை கண்டு அவற்றிக்கெதிரான சாட்டைகளை சுழற்றுவதும், நிகழ்வுகளை நேர்மையுடன் பதிவுச் செய்வதும்தான் எழுத்தாளர், அல்லது பேச்சாளர்களின் முக்கிய பணி. எழுத்தாளன் அல்லது பேச்சாளன் என்றானப்பிறகு எந்த சாதி அடையாளமோ, நடுநிலையோ இருக்கக்கூடாது.(நடுநிலையென்பது பெரும்பாலும் வாதி பிரதிவாதி இருவரும் மனம் கோணக்கூடாது என்பதாகவே அமைகிறது. ஒரே நிலையென்ற உண்மை நிலைதான் நன்று).
நான் கண்டவரையில் எந்த கூட்டத்திலும் குர்ஆன் தவறானது அதில் அந்த இடத்தில் அப்படியிருக்கிறது இந்த இடத்தில் இப்படி இருக்கிறது என கிருத்துவ பேச்சாளர்கள் சொல்வதில்லை. எங்காவது, விவாதங்கள் வந்தால் ஆதாரங்களுக்காக சொல்லியிருக்கக்கூடும். அப்படியும் தவறானது என்றதாக தெரியவில்லை. ஆனால் அதற்கு நேர்மாறாக எங்கெல்லாம் முஸ்லீம்கள் பேசுகிறார்களோ அங்கெல்லாம் பைபிள் ஈவு இரக்கமின்றி கட்டுக்கதை, பொய்கதையென வார்த்தைகளாலேயே கிழித்தெரியப்படும். பேசும் அனைவரும் மார்க்கத்தை கரைத்து குடித்துவிட்டு அடுத்தவன் வாயிலும் ஊற்ற காத்துக் கொண்டிருப்பவர்கள்தான். ஆனால் “அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு உங்கள் மார்க்கம் உங்களுக்கு” என்கிற குர்ஆன் வாசகத்தை மட்டும் வாகாக மறந்துவிடுவார்கள் போலும். கிருத்துவ பேச்சாளர்கள் பைபிள்தான் சிறந்ததது அதை எப்படி பின்பற்ற வேண்டும் என மாறி மாறி விளக்கம் சொல்வார்களே ஒழிய குர்ஆனையோ மற்ற புனித நூல்களையோ தவறாக பேசியதை நான் பார்த்ததில்லை. இப்படி எழுதுவதால் உடனே கிருத்துவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறான், இதற்காகவே வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்றோ, என் நதிமூலம் தேடி அலைபவர்களும் இருக்கக்கூடும்.
இரண்டு கிருத்துவர்கள் மேடைபோட்டு பைபிளை மாறிமாறி விமர்சனம் செய்வதோ, ஒரு கிருத்துவ மத போதகர் சொல்லும் வசனங்களை மற்றொருவர் எப்போதும் விமர்சனம் செய்வதோ கிடையாது. கிருத்துவத்தில் எத்தனை பிரிவுகள் இருந்தாலும் அதை குறித்து மேடைபோட்டோ, தொலைகாட்சியிலோ ஒருவரையொருவர் திட்டிக்கொள்வதில்லை என்பதை கண்கூடாக அறிவோம். (இந்துக்களும் அப்படியே) அதே நேரத்தில் முஸ்லீம் மத தலைவர்களோ ஒருவரை மற்றவர் குறைகூறாவிட்டால் அன்றைய பொழுது அவர் எதுவும் அமல் (நன்மை) செய்யவில்லை என்பது போல நடந்துகொள்வர். இந்த கூத்துகளை அரங்கேற்ற அன்றாடம் தனித்தனி முஸ்லீம் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், ஒலிநாடாக்கள், குறுந்தகடுகள், துண்டறிக்கைகள் என அத்தனை அறிவுசார்ந்த ஊடகங்களும் பயன்படுத்தபடுவதை நாம் பார்க்கிறோம். ஏனெனில் இவர்கள் தான் ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்துக்கொள்ளும் உத்தம சீலர்கள். ஆனால்
நீங்கள் அந்த கயிற்றின் இரண்டு முனைகளையும் இரண்டுபக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை இனி எந்த தூதர்வந்து சொன்னாலும் உணரமாட்டார்கள். அதே விமர்சனத்தை மற்ற யாராவது சொன்னால் உடனே அவருக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும் என்று சட்டத்தை இவர்களின் சட்டை பைகளிலேயே வைத்துக்கொண்டு அலைவார்கள் போலும்.
அடுத்து இந்த மத நல்லிணக்கம் பற்றி பார்ப்போமா! இந்த மதநல்லிணக்கம் என்பதே ஒரு பெரிய அயோக்கியத்தனம் என்பது தான் உண்மை. மதங்களே வேண்டாம் நாமெல்லாம் மனிதர்களாக இருப்போம் என்று சொல்ல எந்த மதவாதிகளுக்கும் நெஞ்சில் மஞ்சா சோறு கிடையாது. எல்லாம் பதவியும் பணமும் படுத்துகிற பாடுதான் யாரைவிட்டது! இவர்களுக்கு எவனையாவது தனக்கு கீழே இழிவானவனாக வைத்திருக்கவும், தங்கள் மதத்தைவிட அடுத்தவன் மதம் குறைவானது என்று சொல்லி அரசியல் நடத்திக்கொண்டிருக்கவும் எதாவது இருக்கவேண்டுமல்லவா அதனால் தான் அரசியல் அயோக்கியர்களுக்கு இந்தியதேசியம் என்பதுபோல், மதவாதிகளுக்கு மதநல்லிணக்கம் என்கிற காயடிக்கும் இயந்திரம் எப்போதும் தேவைபட்டுக்கொண்டே இருக்கும்.
ஆனால் நம்மையெல்லாம் வாய்பிளக்கவைக்கும் அளவிற்கு சமீபத்தில் சில நிகழ்வுகளில் சில முஸ்லீம் பிரச்சாரர்கள் (மத நல்லிணக்கமோ என்ன மண்ணாங்கட்டியோ தெரியவில்லை) உளறி கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். சில தினங்கள் முன்புகூட முஸ்லீம் அறிஞர் ஒருவரின் இஸ்லாம் குறித்தான மாற்று மதத்தாரின் வினா விடை நிகழ்வினை குறுந்தகடில் காண நேர்ந்தது. அதில் மாற்றுமதத்தினர் கேட்கும் வினாக்களுக்கு குர்ஆனிலிருந்தும், நபிவழியிலிருந்தும் ஆதாரங்களை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தார். இடையிடையே முஸ்லீம் பேச்சாளர்களுக்கே உரிய பாணியில்; பைபிளையும் வாரிக்கொண்டிருந்தார். எனினும் சில விடைகளில் வழக்கம்போல் துணைக் கேள்விகள் எழுந்தாலும் நமக்கு அவரளவுக்கு தெரியாது என்கிறதாலோ என்னவோ சொல்வதை கேட்டுக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தனர் மாற்று மத சகோதரர்கள்!
அப்படியே ஒரு மாற்று மதத்தினர் இராமன் பற்றியும், பகவத்கீதை பற்றியும் கேட்ட வினாவிற்கு விடையளிக்கும் விதமாக அவருக்கு என்ன ஆனாதோ தெரியவில்லை. இராமனும் இறைத் தூதர்களில் ஒருவரே, அவருக்கும் வேத நூல் இறக்கப்பட்டிருக்காலம் அது பிறகு பைபிள் போல் பலரால் திருத்தப்பட்டிருக்கலாம் என தனது சப்பைக்கட்டுகளை சபையில் எடுத்துரைதார். கேட்டவரும் அதுதான் நம் இராமனை தூதுவர்களில் ஒருவர்தான் என்று ஒப்புக்கொண்டுவிட்டாரே என அமைதியாக உட்கார்ந்துவிட்டார். இராமன் என்பவன் குறுதியும் சதையுமாக வாழ்ந்த ஒரு இறைத்தூதர் என்பதை இத்தனை பெரிய இஸ்லாமிய மத போதகரே சொல்லிவிட்டபடியால் இனி பா.ஜ.கவினருக்கு வேலை மிச்சம். இப்படிக் கூறாவிட்டால் இனி தனது கூட்டத்திற்கு மாற்று மதத்தினர் வராமல் போய்விடக்கூடுமோ அல்லது மத நல்லிணக்கணத்திற்கு மாசு பட்டுவிமோ என்கிற கவலைபோலும்.
இராமனும் இறைத்தூதர்தான், அல்லாவால் அனுப்பபட்ட நபிதான் என இந்து முன்னணியினர் சொல்லியிருந்தால் அதை ஆதரித்து லட்சத்து இருபத்து நாளாயிரம் நபிமார்களில் இராமனும் ஒருவன்தான் என முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வார்களா! இது எவ்வளவு பெரிய அபத்தமாக இருக்கிறது. இராமன் என்பவன் ஒரு நாவலின் கதை நாயகன். ஒரு மனிதனின் வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதை எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் அது. அதை ஏற்று ராமன் நேரடி கடவுள் அல்ல என்று பரமஹம்சர் போன்ற புராணங்களை கரைத்துக் குடித்தவர்களே (அவர்களுக்குள் ஆட்சிபீடத்தில் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு) வாக்குமூலம் கொடுத்துக் கொண்டலையும் இந்த காலகட்டத்தில். இவரைப் போன்றவர்கள் உளர தொடங்கினால் எதிர்காலத்தில் இதைவைத்தே இந்துத்துவாவை வளர்க்க மாட்டார்களா.
இந்த மார்க்க அறிஞர் சொன்னால் சரியாகதானிருக்கும் என்று பிற முஸ்லீம் பேச்சாளர்களும் வாயை மூடிக்கொண்டிருப்பது ஏனோ தெரியவில்லை. இதில் எல்லோருக்கும் உடன்பாடோ!
மேலும் அந்த மார்க்க அறிஞர் ஒரு மருத்துவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஒரு சமயம் ‘வைத்தியம் பார்ப்பதை விட்டு விட்டு இப்படி பேச்சாளராகிவிட்டீர்களே’’ என்று ஒருவர் வினா கேட்க ஆம் நான் இப்போதும் வைத்தியம்தான் பார்த்துக் கொண்டலைகிறேன் இது இஸ்லாம் பற்றிய அறிவில்லாதவர்களுக்கான வைத்தியம் என்றார். அது அறிவிப்பூர்வமான பதிலா இல்லையாவென்பதை மக்கள் கவனத்திற்கு விட்டுவிடுவோம்.
ஆக்கப்பூர்வமாக பார்த்தோமானால் புது புது நோய்கள் பரவிவிட்ட இந்த காலகட்டதில் மருத்துவ துறையில் மண்டையை பிய்த்துக்கொண்டு அவரவர் மருந்துகளை கண்டுபிடித்துக் கொண்டிருக்கையில் (இவர்களும் மதவாதிகள் இல்லையென்பதை கருத்தில்கொள்க) இவரைப் போன்ற சிறந்த மருத்துவர் என்று பேரெடுத்தவர்கள் குறைந்த அளவில் அவர்களுக்கு ஆலோசனைகளாவது வழங்கிக் கொண்டிருக்கலாம் அல்லவா. அதை விட்டு கிடைப்பவர்களை எல்லாம் பிடித்து முஸ்லீமாக்கினால் நாளடைவில் மதம் சார்ந்த பிரிவினைகள்தான் வளர்ந்துக் கொண்டே போகுமல்லவா! இதே முறையில் எல்லா மதவாதிகளும் தங்கள் மதங்களுக்கு ஆள் சேர்த்துக் கொண்டலைவதனால் தான் ஆங்காங்கே மத கலவரங்கள் வெடித்து மக்கள் நிம்மதி இழந்து வருகிறார்கள். இப்போது இவர் பாணியில் தமிழகத்திலும் சில முஸ்லீம் மதகுருமார்கள் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
பிரச்சாரத்தை கேட்டு மதம் மாறுகிறவர்களைவிட சக முஸ்லீம்களின் நடத்தைகளை பார்த்து மதம் மாறினால் தான் சிறப்பு என்பது நபித்தோழர்களின் கருத்து எங்கே இந்த மதவாதிகளில் யாராவது தங்கள் வாழ்க்கையினை இஸ்லாமிய முறைபடிதான் வாழ்கிறேன் என்று சொல்லமுடியுமா? இல்லையென்கிற பதில்தான் வருமெனில் முதலில் இவர்கள் செய்ய வேண்டியது முஸ்லீம்களை இஸ்லாமியர்களாக மாற்றிவிட்டு பிறகு பிற மதத்தவரை திருத்தலாம்!இல்லையா.
மக்கள் விரும்புவது புதிய புதிய மதங்களையல்ல அமைதியை. எல்லா மதத்தவர்களும் அவசர அவசரமாக அவரவர் மதங்களுக்கு கூட்டம் சேர்ப்பதை பார்த்தால், அரசியல் கட்சிகள் தோன்றுவிடும் போலிருக்கிறது. ஏன் இந்த அவசரம்? இதன் உள் நோக்கம் என்ன? என்கிற கேள்விகள் பல எழுகின்றன. மனிதயினத்தில் மாற்றம் என்பது மதங்களற்ற மனிதயினம்தான் அதில்தான் அமைதி இருக்கிறது.மதங்களை பரப்புவதை விட்டு அந்நேரத்தில் பத்து எழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை போதித்திருந்தால் இன்று பத்து மருத்துவர்கள் கிடைத்திருப்பார்களே. என்றும் மக்களுக்குதேவை ஆன்மீகமா? அறிவியலா? என்பதனை உணர்ந்து முடிவெடுக்கவேண்டியது மதவாதிகள்தான்.
மனித இனம் தோன்றியதாக மனிதனே! அறிந்து சொன்ன காலம் முதல் அவன் தலையில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு, தலை கீழே உருளும்வரை இறங்கமால் இருக்கும் இந்த சாதி மதங்கள் மனித இனத்திற்கே தீங்கானவையென பல சமூக அக்கறையுள்ளவர்கள் சொன்னாலும், அவர்களும் தங்கள் கடமைக்கு போகிறப்போக்கில் ஏதாவது ஒரு மதத்திற்கு வக்காலத்து வாங்கிவிட்டு தன்னை நம்பிய மக்களை நரி வாயிலிருந்து பிடிங்கி முதலை வாயில் திணித்துவிட்டு தங்கள் கண்களை மூடிக்கொள்வர்.
எல்லாம் ஏமாற்றுவேலை, எல்லாம் உன்னை சுரண்டும் வேலை, எல்லாம் பெண்களை அடிமைப்படுத்துவது, எல்லாம் ஒரு சாரரருக்கு மட்டுமே உரியவகையில் உள்ளது, மத விடுதலையும், பெண் விடுதலையும் தான் உண்மையான மனித விடுதலை என்று மதங்களில் உள்ள அத்துனை திள்ளு முள்ளுகளையும் எடுத்துக்கூறி மதங்களின் தலையில் மாறி மாறி செருப்பால் அடித்த பெருமை எம் தந்தை பெரியாருக்கே சேரும். அவர் வாங்கிக்கொடுத்த கல்வியாலும், அறிவாலும்தான் இன்று நாம் ஒரு வகையிலாவது நம்மை அடிமைபடுத்த முயலும் சாதிகளை எதிர்கொள்ள துணிவு வருகிறது.
மனித இனத்திற்கான தேவைகளையும், அவர்தம் அறிவு வளர்ச்சிக்கு தேவையான அறிவியலையும் இதுவரை வந்த எந்த மதமும் கற்றுதரவில்லை. ஏன் ஒரு குண்டூசியைக்கூட இதுவரை எந்த ஆன்மீகவாதியும் கண்டுபிடித்ததில்லை. மாறாக அவரவர் கற்பனைக்கு ஏற்றவகையிலும் தான் வாழ்ந்த சூழலிற்கும் தகுந்தாற்போல் பல புரட்சிகளை உருவாக்கி ஒரு மதத்திலிருந்து வேறான்றிற்கு மாற்றிய பெருமையே உண்டு எனலாம்.
இருந்தும் மனிதன் தன் மதக்கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு தன் உடல், பொருள், ஆவி, நேரம் என அத்தனையும் இந்த மனித சமூகத்திற்காக அர்ப்பணித்து புதிய புதிய கண்டுபிடிப்புகளை கொண்டுவந்தால், நோகாமல் நொங்கு தின்பதுபோல் எல்லாம் என் மதத்தை படித்துதான் கண்டுபிடித்தான் என்று நா கூசாமல் சொல்லிக் கொள்வதில் ஒன்றையொன்று சலைத்தவையில்லை. இதில் வேடிக்கை என்னவெனில் அதே விஞ்ஞானி சொல்லும் கருத்துக்களை ஏற்காமல் அவர்களுக்கு பைத்தியக்காரன் என்ற பட்டம் சூட்டி, ஊரைவிட்டு அடித்து விரட்டுவதும்,அவரின் கண்டுபிடிப்புகளை தீக்கிரையாக்குவதிலுமே குறியாக இருந்தவனெல்லாம்; பின்னால் என் மதத்தின் அடிப்படையில்தான் இதை கண்டுபிடித்தான் என்று வெட்கமேயில்லாமல் சொல்லிக்கொள்வதுதான்.
மனித இனத்திற்கு தன் கண்முன்னால் நடக்கும் அநியாயத்தை கண்டு அவற்றிக்கெதிரான சாட்டைகளை சுழற்றுவதும், நிகழ்வுகளை நேர்மையுடன் பதிவுச் செய்வதும்தான் எழுத்தாளர், அல்லது பேச்சாளர்களின் முக்கிய பணி. எழுத்தாளன் அல்லது பேச்சாளன் என்றானப்பிறகு எந்த சாதி அடையாளமோ, நடுநிலையோ இருக்கக்கூடாது.(நடுநிலையென்பது பெரும்பாலும் வாதி பிரதிவாதி இருவரும் மனம் கோணக்கூடாது என்பதாகவே அமைகிறது. ஒரே நிலையென்ற உண்மை நிலைதான் நன்று).
நான் கண்டவரையில் எந்த கூட்டத்திலும் குர்ஆன் தவறானது அதில் அந்த இடத்தில் அப்படியிருக்கிறது இந்த இடத்தில் இப்படி இருக்கிறது என கிருத்துவ பேச்சாளர்கள் சொல்வதில்லை. எங்காவது, விவாதங்கள் வந்தால் ஆதாரங்களுக்காக சொல்லியிருக்கக்கூடும். அப்படியும் தவறானது என்றதாக தெரியவில்லை. ஆனால் அதற்கு நேர்மாறாக எங்கெல்லாம் முஸ்லீம்கள் பேசுகிறார்களோ அங்கெல்லாம் பைபிள் ஈவு இரக்கமின்றி கட்டுக்கதை, பொய்கதையென வார்த்தைகளாலேயே கிழித்தெரியப்படும். பேசும் அனைவரும் மார்க்கத்தை கரைத்து குடித்துவிட்டு அடுத்தவன் வாயிலும் ஊற்ற காத்துக் கொண்டிருப்பவர்கள்தான். ஆனால் “அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு உங்கள் மார்க்கம் உங்களுக்கு” என்கிற குர்ஆன் வாசகத்தை மட்டும் வாகாக மறந்துவிடுவார்கள் போலும். கிருத்துவ பேச்சாளர்கள் பைபிள்தான் சிறந்ததது அதை எப்படி பின்பற்ற வேண்டும் என மாறி மாறி விளக்கம் சொல்வார்களே ஒழிய குர்ஆனையோ மற்ற புனித நூல்களையோ தவறாக பேசியதை நான் பார்த்ததில்லை. இப்படி எழுதுவதால் உடனே கிருத்துவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறான், இதற்காகவே வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்றோ, என் நதிமூலம் தேடி அலைபவர்களும் இருக்கக்கூடும்.
இரண்டு கிருத்துவர்கள் மேடைபோட்டு பைபிளை மாறிமாறி விமர்சனம் செய்வதோ, ஒரு கிருத்துவ மத போதகர் சொல்லும் வசனங்களை மற்றொருவர் எப்போதும் விமர்சனம் செய்வதோ கிடையாது. கிருத்துவத்தில் எத்தனை பிரிவுகள் இருந்தாலும் அதை குறித்து மேடைபோட்டோ, தொலைகாட்சியிலோ ஒருவரையொருவர் திட்டிக்கொள்வதில்லை என்பதை கண்கூடாக அறிவோம். (இந்துக்களும் அப்படியே) அதே நேரத்தில் முஸ்லீம் மத தலைவர்களோ ஒருவரை மற்றவர் குறைகூறாவிட்டால் அன்றைய பொழுது அவர் எதுவும் அமல் (நன்மை) செய்யவில்லை என்பது போல நடந்துகொள்வர். இந்த கூத்துகளை அரங்கேற்ற அன்றாடம் தனித்தனி முஸ்லீம் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், ஒலிநாடாக்கள், குறுந்தகடுகள், துண்டறிக்கைகள் என அத்தனை அறிவுசார்ந்த ஊடகங்களும் பயன்படுத்தபடுவதை நாம் பார்க்கிறோம். ஏனெனில் இவர்கள் தான் ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்துக்கொள்ளும் உத்தம சீலர்கள். ஆனால்
நீங்கள் அந்த கயிற்றின் இரண்டு முனைகளையும் இரண்டுபக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை இனி எந்த தூதர்வந்து சொன்னாலும் உணரமாட்டார்கள். அதே விமர்சனத்தை மற்ற யாராவது சொன்னால் உடனே அவருக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும் என்று சட்டத்தை இவர்களின் சட்டை பைகளிலேயே வைத்துக்கொண்டு அலைவார்கள் போலும்.
அடுத்து இந்த மத நல்லிணக்கம் பற்றி பார்ப்போமா! இந்த மதநல்லிணக்கம் என்பதே ஒரு பெரிய அயோக்கியத்தனம் என்பது தான் உண்மை. மதங்களே வேண்டாம் நாமெல்லாம் மனிதர்களாக இருப்போம் என்று சொல்ல எந்த மதவாதிகளுக்கும் நெஞ்சில் மஞ்சா சோறு கிடையாது. எல்லாம் பதவியும் பணமும் படுத்துகிற பாடுதான் யாரைவிட்டது! இவர்களுக்கு எவனையாவது தனக்கு கீழே இழிவானவனாக வைத்திருக்கவும், தங்கள் மதத்தைவிட அடுத்தவன் மதம் குறைவானது என்று சொல்லி அரசியல் நடத்திக்கொண்டிருக்கவும் எதாவது இருக்கவேண்டுமல்லவா அதனால் தான் அரசியல் அயோக்கியர்களுக்கு இந்தியதேசியம் என்பதுபோல், மதவாதிகளுக்கு மதநல்லிணக்கம் என்கிற காயடிக்கும் இயந்திரம் எப்போதும் தேவைபட்டுக்கொண்டே இருக்கும்.
ஆனால் நம்மையெல்லாம் வாய்பிளக்கவைக்கும் அளவிற்கு சமீபத்தில் சில நிகழ்வுகளில் சில முஸ்லீம் பிரச்சாரர்கள் (மத நல்லிணக்கமோ என்ன மண்ணாங்கட்டியோ தெரியவில்லை) உளறி கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். சில தினங்கள் முன்புகூட முஸ்லீம் அறிஞர் ஒருவரின் இஸ்லாம் குறித்தான மாற்று மதத்தாரின் வினா விடை நிகழ்வினை குறுந்தகடில் காண நேர்ந்தது. அதில் மாற்றுமதத்தினர் கேட்கும் வினாக்களுக்கு குர்ஆனிலிருந்தும், நபிவழியிலிருந்தும் ஆதாரங்களை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தார். இடையிடையே முஸ்லீம் பேச்சாளர்களுக்கே உரிய பாணியில்; பைபிளையும் வாரிக்கொண்டிருந்தார். எனினும் சில விடைகளில் வழக்கம்போல் துணைக் கேள்விகள் எழுந்தாலும் நமக்கு அவரளவுக்கு தெரியாது என்கிறதாலோ என்னவோ சொல்வதை கேட்டுக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தனர் மாற்று மத சகோதரர்கள்!
அப்படியே ஒரு மாற்று மதத்தினர் இராமன் பற்றியும், பகவத்கீதை பற்றியும் கேட்ட வினாவிற்கு விடையளிக்கும் விதமாக அவருக்கு என்ன ஆனாதோ தெரியவில்லை. இராமனும் இறைத் தூதர்களில் ஒருவரே, அவருக்கும் வேத நூல் இறக்கப்பட்டிருக்காலம் அது பிறகு பைபிள் போல் பலரால் திருத்தப்பட்டிருக்கலாம் என தனது சப்பைக்கட்டுகளை சபையில் எடுத்துரைதார். கேட்டவரும் அதுதான் நம் இராமனை தூதுவர்களில் ஒருவர்தான் என்று ஒப்புக்கொண்டுவிட்டாரே என அமைதியாக உட்கார்ந்துவிட்டார். இராமன் என்பவன் குறுதியும் சதையுமாக வாழ்ந்த ஒரு இறைத்தூதர் என்பதை இத்தனை பெரிய இஸ்லாமிய மத போதகரே சொல்லிவிட்டபடியால் இனி பா.ஜ.கவினருக்கு வேலை மிச்சம். இப்படிக் கூறாவிட்டால் இனி தனது கூட்டத்திற்கு மாற்று மதத்தினர் வராமல் போய்விடக்கூடுமோ அல்லது மத நல்லிணக்கணத்திற்கு மாசு பட்டுவிமோ என்கிற கவலைபோலும்.
இராமனும் இறைத்தூதர்தான், அல்லாவால் அனுப்பபட்ட நபிதான் என இந்து முன்னணியினர் சொல்லியிருந்தால் அதை ஆதரித்து லட்சத்து இருபத்து நாளாயிரம் நபிமார்களில் இராமனும் ஒருவன்தான் என முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வார்களா! இது எவ்வளவு பெரிய அபத்தமாக இருக்கிறது. இராமன் என்பவன் ஒரு நாவலின் கதை நாயகன். ஒரு மனிதனின் வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதை எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் அது. அதை ஏற்று ராமன் நேரடி கடவுள் அல்ல என்று பரமஹம்சர் போன்ற புராணங்களை கரைத்துக் குடித்தவர்களே (அவர்களுக்குள் ஆட்சிபீடத்தில் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு) வாக்குமூலம் கொடுத்துக் கொண்டலையும் இந்த காலகட்டத்தில். இவரைப் போன்றவர்கள் உளர தொடங்கினால் எதிர்காலத்தில் இதைவைத்தே இந்துத்துவாவை வளர்க்க மாட்டார்களா.
இந்த மார்க்க அறிஞர் சொன்னால் சரியாகதானிருக்கும் என்று பிற முஸ்லீம் பேச்சாளர்களும் வாயை மூடிக்கொண்டிருப்பது ஏனோ தெரியவில்லை. இதில் எல்லோருக்கும் உடன்பாடோ!
மேலும் அந்த மார்க்க அறிஞர் ஒரு மருத்துவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஒரு சமயம் ‘வைத்தியம் பார்ப்பதை விட்டு விட்டு இப்படி பேச்சாளராகிவிட்டீர்களே’’ என்று ஒருவர் வினா கேட்க ஆம் நான் இப்போதும் வைத்தியம்தான் பார்த்துக் கொண்டலைகிறேன் இது இஸ்லாம் பற்றிய அறிவில்லாதவர்களுக்கான வைத்தியம் என்றார். அது அறிவிப்பூர்வமான பதிலா இல்லையாவென்பதை மக்கள் கவனத்திற்கு விட்டுவிடுவோம்.
ஆக்கப்பூர்வமாக பார்த்தோமானால் புது புது நோய்கள் பரவிவிட்ட இந்த காலகட்டதில் மருத்துவ துறையில் மண்டையை பிய்த்துக்கொண்டு அவரவர் மருந்துகளை கண்டுபிடித்துக் கொண்டிருக்கையில் (இவர்களும் மதவாதிகள் இல்லையென்பதை கருத்தில்கொள்க) இவரைப் போன்ற சிறந்த மருத்துவர் என்று பேரெடுத்தவர்கள் குறைந்த அளவில் அவர்களுக்கு ஆலோசனைகளாவது வழங்கிக் கொண்டிருக்கலாம் அல்லவா. அதை விட்டு கிடைப்பவர்களை எல்லாம் பிடித்து முஸ்லீமாக்கினால் நாளடைவில் மதம் சார்ந்த பிரிவினைகள்தான் வளர்ந்துக் கொண்டே போகுமல்லவா! இதே முறையில் எல்லா மதவாதிகளும் தங்கள் மதங்களுக்கு ஆள் சேர்த்துக் கொண்டலைவதனால் தான் ஆங்காங்கே மத கலவரங்கள் வெடித்து மக்கள் நிம்மதி இழந்து வருகிறார்கள். இப்போது இவர் பாணியில் தமிழகத்திலும் சில முஸ்லீம் மதகுருமார்கள் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
பிரச்சாரத்தை கேட்டு மதம் மாறுகிறவர்களைவிட சக முஸ்லீம்களின் நடத்தைகளை பார்த்து மதம் மாறினால் தான் சிறப்பு என்பது நபித்தோழர்களின் கருத்து எங்கே இந்த மதவாதிகளில் யாராவது தங்கள் வாழ்க்கையினை இஸ்லாமிய முறைபடிதான் வாழ்கிறேன் என்று சொல்லமுடியுமா? இல்லையென்கிற பதில்தான் வருமெனில் முதலில் இவர்கள் செய்ய வேண்டியது முஸ்லீம்களை இஸ்லாமியர்களாக மாற்றிவிட்டு பிறகு பிற மதத்தவரை திருத்தலாம்!இல்லையா.
மக்கள் விரும்புவது புதிய புதிய மதங்களையல்ல அமைதியை. எல்லா மதத்தவர்களும் அவசர அவசரமாக அவரவர் மதங்களுக்கு கூட்டம் சேர்ப்பதை பார்த்தால், அரசியல் கட்சிகள் தோன்றுவிடும் போலிருக்கிறது. ஏன் இந்த அவசரம்? இதன் உள் நோக்கம் என்ன? என்கிற கேள்விகள் பல எழுகின்றன. மனிதயினத்தில் மாற்றம் என்பது மதங்களற்ற மனிதயினம்தான் அதில்தான் அமைதி இருக்கிறது.மதங்களை பரப்புவதை விட்டு அந்நேரத்தில் பத்து எழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை போதித்திருந்தால் இன்று பத்து மருத்துவர்கள் கிடைத்திருப்பார்களே. என்றும் மக்களுக்குதேவை ஆன்மீகமா? அறிவியலா? என்பதனை உணர்ந்து முடிவெடுக்கவேண்டியது மதவாதிகள்தான்.
Labels:
கட்டுரைகள்
Saturday, January 19, 2008
பொங்கல் உழவர் திருநாளாலா? தமிழர் திருநாளா?
அன்னைத் தமிழுக்கும் மண்ணின் விடுதலைக்கும் தன்னுயிர் கொடுத்துக் கொண்டிருக்கும் மொழிப்போர் ஈக்கியருக்கு உலகத் தமிழர்கள் கூடி வீர வணக்கம் கூறி தொடங்குவோம்.
தமிழர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள், எல்லா தமிழர்களும் தனித்தனியாக தாம் சார்ந்த மதங்களின் கோட்பாடுகளின் படி பெருநாள்கள் கொண்டாடுகிறார்கள். இருப்பினும் நாம் அனைவரும் தமிழரென்று உறவு கூட்டி குரல் கொடுக்க ஒரே தமிழர் திருநாளென்று பொங்கல் திருநாளை சொல்லலாம்.
ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த தமிழனுக்கு மதப்பேய்கள் பிடித்ததாலும், மதத்திருடர்களை தலைமையேற்று பிரிந்ததாலும் இன்று தமிழர் திருநாள் என்பது மருவி, பொங்கல் திருநாள் என்பது உழவர் திருநாள் என்று சகத் தமிழர்களாலேயே ஒதுக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையே!
உழவர் என்பதென்ன தனி இனமா? நாமும் ஒரு காலத்தில் விவசாயத்தில் உழன்றவர்கள் தானே. வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டு உழுவதை நிறுத்தி வரப்பேறி கிராமம் விட்டு நகரத்தை உறுவாக்கியவர்கள் தானே, நாமும் உழவர் இனமில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?
உள் நாட்டில் மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் உழைப்பவர் எல்லோரும் உழுபவர் தானே. உழவர்கள் இன்றும் வயலை உழுகிறார்கள், நாம் வாழ்க்கையை உழுகிறோம். இன்னும் சொல்லப்போனால் உழவர்கள் உழுதலில் பொதுநலம் இருக்கிறது, நாம் தான் சுயநலவாதிகள்.
நம் உழைப்பென்பது நம் குடும்பத்திற்கானது என்று சுருங்கிவிடுகிறது. உழவர்கள் ஊருக்காக உழைப்பவர்கள் அதனால்தான் நமக்கு சோறு தந்தவர்களை கஞ்சிக்கான வரிசையில் நிற்கவைத்து நன்றிகடனை நிறைவேற்றி விட்டோம்.
''காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்'' என்ற நிலைமாறி இன்றைய சூழலில் உழுவர்களுக்கு உயிர் மிச்சப்படுமா! என்கிற கேள்வி எழுகிறதெனில் வெளிநாட்டிற்கு புலம் பெயர்ந்தவர்கள் மட்டுமின்றி, சொந்த நாட்டிலேயே குளிர்பானம், ஊர்திகள், மென்பொருட்கள் தயாரிப்பது, நிலங்களை கட்டிடங்களுக்காக விற்பது வரையிலான அனைத்து தொழில்களுக்காகவும், வெளிநாட்டு முதலாளிகளுக்காகவும் உழைக்கும் நாம் வெட்கப்படத்தான் வேண்டும்.
இதையாவது உறுப்படியாக செய்தோமா! என்றால் அதுவுமில்லை, வெளிநாட்டில் வாழும் தமிழர்களில் 99 விழுக்காடு பேருக்கு கடன் தொல்லை, வட்டி தொல்லை, மன உலைச்சல், உடல் நல கேடு என்று ஏற்றத்தாழ்வின்றி நாம் விரும்பியோ விரும்பாமலோ வயதையும் வாழ்க்கையையும் கடத்திக் கொண்டிருக்கிறோம்.
அடுத்த பொங்கலுக்காவது நாம் உறவுக்கூட்டி பொங்கல் வைத்து தாய்மண் நனைய நனைய வழிய விடவேண்டுமென்ற ஆவலில் இருப்பவர்கள் பல லட்சம் பேர் இருக்கையில் நாம் ஏன் இன்னும் நிரந்தரமாக தாய்நாட்டில் தங்குவதை தள்ளிப்போடுகிறோம் என விளங்க வில்லை. ஒருகால் நாம் இங்கு வருவதற்காக ஏற்பட்ட நிர்பந்தம்போல் தாய்நாடு திரும்பவும் ஏதாவது நிர்பந்தம் வேண்டுமோ!
தை என்பது வெரும் திருநாள் மட்டுமல்ல அதுதான் தமிழ் ஆண்டின் முதல்நாள். இன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது. அப்படியெனில் சித்திரை இல்லையாவென கேள்விகள் எழலாம், இல்லையென்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டாலும், நாமும் நம் கடமைக்கு சில சொல்லலாம் என நினைக்கிறேன்.
தன் மதக்கோட்பாடுகளை திணிக்கவந்த ஆரியர்கள் அதை எதிர்த்த தமிழர்களை ஒதுக்குவதற்காகவும் அடிமைப்படுத்துவதற்காகவும் யோசித்து நம்மை நேரடியாக எதிர்க்க திராணியற்று முதலில் நம் பண்பாட்டிலும், பழக்க வழக்கத்திலும் கைவைத்தனர். அதன் முதல்கட்டமாக மூடப்பழக்க வழக்கங்களை நம்மிடையே உருவாக்கி நம்மை மூளைச் சலவை செய்து இனவாரியாக ஒற்றுமையாக இருந்தவர்களை மத அடிப்படையிலும், மதங்களின் உட்பிரிவுகளை கொண்டும் பிளவுகளை உண்டாக்கி நம்மிடையே புழக்கத்தில் விட்டு நம்மை மத வாரியாக பிரிப்பதில் முழுமூச்சில் இறங்கி அதில் பெருமளவில் வெற்றியும் கண்டனர்.
அதன் அடிப்படையில் அவர்கள் கைவைத்த பல இடங்களில், தமிழ் மாதங்களின் பெயர்களை மாற்றுவதிலும் செய்தனர். எனவே சித்திரை தான் தமிழ் ஆண்டின் முதல் மாதம் என்கிறதும் ஒன்று. நாம் அறிவுபூர்வமாக பார்த்தாலே தெரியும், நிலம் காய்ந்து கிடக்கும் வறட்சி மிகுந்திருக்கும் வெய்யில் காலமான சித்திரையில் எந்த விழாவேனும் கொண்டாட இயலுமா? (சித்திரை திருவிழா கொண்டாடவைத்ததும் பார்ப்பனிய மூளைதான் எவன் வறண்டு கிடந்தாலும் சுறண்டவேண்டியதை சுறண்ட வேண்டாமா என்ன) அல்லது நெல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டு வயல் காடுகள் எல்லாம் பசுமை பொங்கி நிற்கும் தை மாதத்தில் மகிழ்ச்சி பொங்க கொண்டாடுவோமா?
நெல் விற்று பயிறுகள் விற்று பணம் கையில் புரள போவதைதான் ''தை பிறந்தால் வழி பிறக்கும்'' என்பார்கள். இதிலிருந்து தெரியவில்லையா? தை தான் ஆண்டின் முதல் மாதம் அதுவே கொண்டாடுவதற்கும் ஏற்ற மாதம் என்று. ஆனால் தை பொங்கல் திருநாள் என்பதை ஆங்கில மாதமான சனவரி 15 தேதிகளில்தான் கொண்டாட வேண்டுமென்று நிர்ணயம் ஏதுமில்லை. இப்படி செய்வதிலும் ஒரு சூழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது, ஆம் முதலில் ஆரியத்திடம் தோற்றுப்போன தமிழன் பின் ஆங்கில ஆதிக்கத்திடமும் தோற்றுப்போனான்.
தமிழ் மாதங்களை சரியாக கணக்கிட்டு தை முதல் நாள் எப்போது எந்த தேதியில் வருகிறதென்று தமிழறிஞர்கள் அறிவிக்க வேண்டும். அது ஆங்கிலத்தின் கணக்கு படி ஒவ்வொரு ஆண்டும் மாறலாம். இதனால் தமிழருக்கு என்ன கேடு வந்துவிடப்போகிறது. நம் பண்பாட்டின் படி நம் மாதத்தில், நம் தினத்தில், நம் திருநாளை கொண்டாடுவதுதானே நமக்கு சிறப்பு. அதுதானே நம் இனத்தின் அடையாளமும் கூட.
சரி பொங்கல் திருநாளை யார் யார் கொண்டாடலாம்? என்று பார்த்தோமானால் இங்குதான் ஒட்டுமொத்த தமிழினமும் தலைகுனிகிறது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் கொண்டாடலாம் என்றால் மற்ற மதங்களில் இருப்பவர்கள் ''தாங்கள் தமிழர் அல்லர்'' என்பதுப்போல் ஒதுங்கிக் கொள்கின்றனர்.
ஏனெனில் மத அடிப்படையில் பார்த்தோமானால் ஒரு நடைமுறை சிக்கல் இருப்பதுப்போல் தெரியலாம். தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள் எல்லா மதங்களிலும், எல்லா மதங்களின் உட்பிரிவுகளிலும் அடைபட்டு கிடப்பதால் தமிழர் திருநாள் என்பது பொதுவானதாக இருந்த போதிலும் தமிழன் தான் சார்ந்த மதத்தை மட்டும் தூக்கிப் பிடிப்பதால் இத்திருநாளை கொண்டாடாமல் பொங்கலை உழவர் திருநாள் என்று ஒதுக்கிவிட்டு கண்டுக்கொள்ளாமல் இருந்துவிடுகின்றனர். இதனால் தாங்கள் தமிழர், தமிழினம் என்றாலும் உழவர் தொடங்கி மற்றும் சிலரை தவிர ஒரு பெரும் கூட்டம் தானாக ஒதுங்கிக்கொள்கிறது.
குறிப்பாக பொங்கல் தினத்தன்று பொங்கல், கரும்பு, இஞ்சி, இனிப்பு என வைத்து படைப்பதை சொல்லலாம். இதனாலேயே முசுலீம்கள் மற்றும் கிருத்துவ மதத்தவர்கள் தாங்களும் ஆதித்தமிழர்கள் என்பதைனை மறந்துவிட்டு ஒதுங்கிக் கொள்கின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லா மதத்திலும் படைத்தல் என்பது இருக்கிறது. ஒரு சில முறைகள் தான் வேறுபடுமே தவிர மற்றபடி எல்லோரும் உணவு பொருளை வைத்துதான் படைப்பார்கள். இது வரை எந்த கடவுளும் திண்றதில்லை, இவர்களும் கொடுத்ததில்லை. மேலும் இவர்களின் படைத்தல் என்பது மதரீதியானது, பொங்கல் திருநாள் என்பது தம் இனத்தை அடையாளப்படுத்துவது.
பொங்கல் திருநாளில் படைத்தல் என்கிற முறையும் கூட ஒரு நன்றி நவிழ்தல் தானே தவிர இதனால் அந்த மதத்திலிருந்து விலகிவிட்டதாக பொருளில்லை, இணைவைத்துவிட்டதாகவும் எடுத்துக்கொள்ளக்கூடாது. சரி படைத்தல் என்பதை ஒதுக்கிவிட்டு பொங்கல் திருநாளை கொண்டாட முடியாதா என்ன?
எல்லா தமிழரும் வீட்டில் பொங்கல் வைக்கலாம், கரும்பு வாங்கலாம் அவரவர் வசதிக்கேற்ப பொங்கல் வைத்து ஏழைகளுக்கு வழங்கலாம். கறி வெட்டி கொடுத்தால் தான் திருநாளா! கரும்பு வெட்டி கொடுத்தாலும் திருநாள்தானே. இதனால் ஏழை பணக்காரன் என எல்லோரும் ஒரே நேரத்தில் பசியாரலாமே. அப்படியே திருநாளையும் கொண்டாடியது போலும் இருக்குமே.
இதுதானே உண்மையான மனிதாபிமானம், இதுதானே தமிழர் அடையாளம், இது தானே சமத்துவம், இதுதானே சகோதரத்துவம் இப்படியே போனால் எங்கே வரப்போகிறது மதச்சண்டைகள்.
உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்கள் ஒரே நேரத்தில் பொங்கல் திருநாளை பொதுவாக கொண்டாடினால் அதைவிட சிறப்பு தமிழருக்கு வேறன்ன இருக்கமுடியும்.
எனவே மத அடிப்படையிலான நமது வறட்டு பிடிவாதங்களை ஒதுக்கிவைத்துவிட்டு தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒற்றை குலவையெடுத்து பாடுவோம். அப்படியே பொங்கல் திருநாள் உழவர் திருநாள் மட்டுமல்ல அது தமிழர் திருநாள் என்று உலகின் அனைத்து தமிழரும் கொண்டாடுவோம். இத்திருநாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்த தமிழக அரசுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்வோம்.
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
இனத்தால் நாம் தமிழர்கள்
இணைவோம் இன்று பொங்கல்
தமிழர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள், எல்லா தமிழர்களும் தனித்தனியாக தாம் சார்ந்த மதங்களின் கோட்பாடுகளின் படி பெருநாள்கள் கொண்டாடுகிறார்கள். இருப்பினும் நாம் அனைவரும் தமிழரென்று உறவு கூட்டி குரல் கொடுக்க ஒரே தமிழர் திருநாளென்று பொங்கல் திருநாளை சொல்லலாம்.
ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த தமிழனுக்கு மதப்பேய்கள் பிடித்ததாலும், மதத்திருடர்களை தலைமையேற்று பிரிந்ததாலும் இன்று தமிழர் திருநாள் என்பது மருவி, பொங்கல் திருநாள் என்பது உழவர் திருநாள் என்று சகத் தமிழர்களாலேயே ஒதுக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையே!
உழவர் என்பதென்ன தனி இனமா? நாமும் ஒரு காலத்தில் விவசாயத்தில் உழன்றவர்கள் தானே. வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டு உழுவதை நிறுத்தி வரப்பேறி கிராமம் விட்டு நகரத்தை உறுவாக்கியவர்கள் தானே, நாமும் உழவர் இனமில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?
உள் நாட்டில் மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலும் உழைப்பவர் எல்லோரும் உழுபவர் தானே. உழவர்கள் இன்றும் வயலை உழுகிறார்கள், நாம் வாழ்க்கையை உழுகிறோம். இன்னும் சொல்லப்போனால் உழவர்கள் உழுதலில் பொதுநலம் இருக்கிறது, நாம் தான் சுயநலவாதிகள்.
நம் உழைப்பென்பது நம் குடும்பத்திற்கானது என்று சுருங்கிவிடுகிறது. உழவர்கள் ஊருக்காக உழைப்பவர்கள் அதனால்தான் நமக்கு சோறு தந்தவர்களை கஞ்சிக்கான வரிசையில் நிற்கவைத்து நன்றிகடனை நிறைவேற்றி விட்டோம்.
''காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்'' என்ற நிலைமாறி இன்றைய சூழலில் உழுவர்களுக்கு உயிர் மிச்சப்படுமா! என்கிற கேள்வி எழுகிறதெனில் வெளிநாட்டிற்கு புலம் பெயர்ந்தவர்கள் மட்டுமின்றி, சொந்த நாட்டிலேயே குளிர்பானம், ஊர்திகள், மென்பொருட்கள் தயாரிப்பது, நிலங்களை கட்டிடங்களுக்காக விற்பது வரையிலான அனைத்து தொழில்களுக்காகவும், வெளிநாட்டு முதலாளிகளுக்காகவும் உழைக்கும் நாம் வெட்கப்படத்தான் வேண்டும்.
இதையாவது உறுப்படியாக செய்தோமா! என்றால் அதுவுமில்லை, வெளிநாட்டில் வாழும் தமிழர்களில் 99 விழுக்காடு பேருக்கு கடன் தொல்லை, வட்டி தொல்லை, மன உலைச்சல், உடல் நல கேடு என்று ஏற்றத்தாழ்வின்றி நாம் விரும்பியோ விரும்பாமலோ வயதையும் வாழ்க்கையையும் கடத்திக் கொண்டிருக்கிறோம்.
அடுத்த பொங்கலுக்காவது நாம் உறவுக்கூட்டி பொங்கல் வைத்து தாய்மண் நனைய நனைய வழிய விடவேண்டுமென்ற ஆவலில் இருப்பவர்கள் பல லட்சம் பேர் இருக்கையில் நாம் ஏன் இன்னும் நிரந்தரமாக தாய்நாட்டில் தங்குவதை தள்ளிப்போடுகிறோம் என விளங்க வில்லை. ஒருகால் நாம் இங்கு வருவதற்காக ஏற்பட்ட நிர்பந்தம்போல் தாய்நாடு திரும்பவும் ஏதாவது நிர்பந்தம் வேண்டுமோ!
தை என்பது வெரும் திருநாள் மட்டுமல்ல அதுதான் தமிழ் ஆண்டின் முதல்நாள். இன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது. அப்படியெனில் சித்திரை இல்லையாவென கேள்விகள் எழலாம், இல்லையென்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டாலும், நாமும் நம் கடமைக்கு சில சொல்லலாம் என நினைக்கிறேன்.
தன் மதக்கோட்பாடுகளை திணிக்கவந்த ஆரியர்கள் அதை எதிர்த்த தமிழர்களை ஒதுக்குவதற்காகவும் அடிமைப்படுத்துவதற்காகவும் யோசித்து நம்மை நேரடியாக எதிர்க்க திராணியற்று முதலில் நம் பண்பாட்டிலும், பழக்க வழக்கத்திலும் கைவைத்தனர். அதன் முதல்கட்டமாக மூடப்பழக்க வழக்கங்களை நம்மிடையே உருவாக்கி நம்மை மூளைச் சலவை செய்து இனவாரியாக ஒற்றுமையாக இருந்தவர்களை மத அடிப்படையிலும், மதங்களின் உட்பிரிவுகளை கொண்டும் பிளவுகளை உண்டாக்கி நம்மிடையே புழக்கத்தில் விட்டு நம்மை மத வாரியாக பிரிப்பதில் முழுமூச்சில் இறங்கி அதில் பெருமளவில் வெற்றியும் கண்டனர்.
அதன் அடிப்படையில் அவர்கள் கைவைத்த பல இடங்களில், தமிழ் மாதங்களின் பெயர்களை மாற்றுவதிலும் செய்தனர். எனவே சித்திரை தான் தமிழ் ஆண்டின் முதல் மாதம் என்கிறதும் ஒன்று. நாம் அறிவுபூர்வமாக பார்த்தாலே தெரியும், நிலம் காய்ந்து கிடக்கும் வறட்சி மிகுந்திருக்கும் வெய்யில் காலமான சித்திரையில் எந்த விழாவேனும் கொண்டாட இயலுமா? (சித்திரை திருவிழா கொண்டாடவைத்ததும் பார்ப்பனிய மூளைதான் எவன் வறண்டு கிடந்தாலும் சுறண்டவேண்டியதை சுறண்ட வேண்டாமா என்ன) அல்லது நெல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டு வயல் காடுகள் எல்லாம் பசுமை பொங்கி நிற்கும் தை மாதத்தில் மகிழ்ச்சி பொங்க கொண்டாடுவோமா?
நெல் விற்று பயிறுகள் விற்று பணம் கையில் புரள போவதைதான் ''தை பிறந்தால் வழி பிறக்கும்'' என்பார்கள். இதிலிருந்து தெரியவில்லையா? தை தான் ஆண்டின் முதல் மாதம் அதுவே கொண்டாடுவதற்கும் ஏற்ற மாதம் என்று. ஆனால் தை பொங்கல் திருநாள் என்பதை ஆங்கில மாதமான சனவரி 15 தேதிகளில்தான் கொண்டாட வேண்டுமென்று நிர்ணயம் ஏதுமில்லை. இப்படி செய்வதிலும் ஒரு சூழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது, ஆம் முதலில் ஆரியத்திடம் தோற்றுப்போன தமிழன் பின் ஆங்கில ஆதிக்கத்திடமும் தோற்றுப்போனான்.
தமிழ் மாதங்களை சரியாக கணக்கிட்டு தை முதல் நாள் எப்போது எந்த தேதியில் வருகிறதென்று தமிழறிஞர்கள் அறிவிக்க வேண்டும். அது ஆங்கிலத்தின் கணக்கு படி ஒவ்வொரு ஆண்டும் மாறலாம். இதனால் தமிழருக்கு என்ன கேடு வந்துவிடப்போகிறது. நம் பண்பாட்டின் படி நம் மாதத்தில், நம் தினத்தில், நம் திருநாளை கொண்டாடுவதுதானே நமக்கு சிறப்பு. அதுதானே நம் இனத்தின் அடையாளமும் கூட.
சரி பொங்கல் திருநாளை யார் யார் கொண்டாடலாம்? என்று பார்த்தோமானால் இங்குதான் ஒட்டுமொத்த தமிழினமும் தலைகுனிகிறது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் கொண்டாடலாம் என்றால் மற்ற மதங்களில் இருப்பவர்கள் ''தாங்கள் தமிழர் அல்லர்'' என்பதுப்போல் ஒதுங்கிக் கொள்கின்றனர்.
ஏனெனில் மத அடிப்படையில் பார்த்தோமானால் ஒரு நடைமுறை சிக்கல் இருப்பதுப்போல் தெரியலாம். தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள் எல்லா மதங்களிலும், எல்லா மதங்களின் உட்பிரிவுகளிலும் அடைபட்டு கிடப்பதால் தமிழர் திருநாள் என்பது பொதுவானதாக இருந்த போதிலும் தமிழன் தான் சார்ந்த மதத்தை மட்டும் தூக்கிப் பிடிப்பதால் இத்திருநாளை கொண்டாடாமல் பொங்கலை உழவர் திருநாள் என்று ஒதுக்கிவிட்டு கண்டுக்கொள்ளாமல் இருந்துவிடுகின்றனர். இதனால் தாங்கள் தமிழர், தமிழினம் என்றாலும் உழவர் தொடங்கி மற்றும் சிலரை தவிர ஒரு பெரும் கூட்டம் தானாக ஒதுங்கிக்கொள்கிறது.
குறிப்பாக பொங்கல் தினத்தன்று பொங்கல், கரும்பு, இஞ்சி, இனிப்பு என வைத்து படைப்பதை சொல்லலாம். இதனாலேயே முசுலீம்கள் மற்றும் கிருத்துவ மதத்தவர்கள் தாங்களும் ஆதித்தமிழர்கள் என்பதைனை மறந்துவிட்டு ஒதுங்கிக் கொள்கின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் எல்லா மதத்திலும் படைத்தல் என்பது இருக்கிறது. ஒரு சில முறைகள் தான் வேறுபடுமே தவிர மற்றபடி எல்லோரும் உணவு பொருளை வைத்துதான் படைப்பார்கள். இது வரை எந்த கடவுளும் திண்றதில்லை, இவர்களும் கொடுத்ததில்லை. மேலும் இவர்களின் படைத்தல் என்பது மதரீதியானது, பொங்கல் திருநாள் என்பது தம் இனத்தை அடையாளப்படுத்துவது.
பொங்கல் திருநாளில் படைத்தல் என்கிற முறையும் கூட ஒரு நன்றி நவிழ்தல் தானே தவிர இதனால் அந்த மதத்திலிருந்து விலகிவிட்டதாக பொருளில்லை, இணைவைத்துவிட்டதாகவும் எடுத்துக்கொள்ளக்கூடாது. சரி படைத்தல் என்பதை ஒதுக்கிவிட்டு பொங்கல் திருநாளை கொண்டாட முடியாதா என்ன?
எல்லா தமிழரும் வீட்டில் பொங்கல் வைக்கலாம், கரும்பு வாங்கலாம் அவரவர் வசதிக்கேற்ப பொங்கல் வைத்து ஏழைகளுக்கு வழங்கலாம். கறி வெட்டி கொடுத்தால் தான் திருநாளா! கரும்பு வெட்டி கொடுத்தாலும் திருநாள்தானே. இதனால் ஏழை பணக்காரன் என எல்லோரும் ஒரே நேரத்தில் பசியாரலாமே. அப்படியே திருநாளையும் கொண்டாடியது போலும் இருக்குமே.
இதுதானே உண்மையான மனிதாபிமானம், இதுதானே தமிழர் அடையாளம், இது தானே சமத்துவம், இதுதானே சகோதரத்துவம் இப்படியே போனால் எங்கே வரப்போகிறது மதச்சண்டைகள்.
உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்கள் ஒரே நேரத்தில் பொங்கல் திருநாளை பொதுவாக கொண்டாடினால் அதைவிட சிறப்பு தமிழருக்கு வேறன்ன இருக்கமுடியும்.
எனவே மத அடிப்படையிலான நமது வறட்டு பிடிவாதங்களை ஒதுக்கிவைத்துவிட்டு தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒற்றை குலவையெடுத்து பாடுவோம். அப்படியே பொங்கல் திருநாள் உழவர் திருநாள் மட்டுமல்ல அது தமிழர் திருநாள் என்று உலகின் அனைத்து தமிழரும் கொண்டாடுவோம். இத்திருநாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்த தமிழக அரசுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்வோம்.
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
இனத்தால் நாம் தமிழர்கள்
இணைவோம் இன்று பொங்கல்
Labels:
கட்டுரைகள்
Tuesday, January 01, 2008
கோவணம் கட்டினவன்
எப்படி உலகமே புதுவருடத்தை கொண்டாடும்படியான
கட்டாயத்தை ஏற்றுக்கொண்ட தருணத்தில் உனக்கு மட்டுமென்ன இப்படியொரு நினைப்பு என எனக்குள் இன்னொரு மனம் கேள்விகேட்க...
கடைசியில் முதல் மனம் வெல்கிறது.
பழைய வருடங்களின் குப்பைகள் நிறைய குவிந்துகிடக்க அதனை ஒரு ஓரமாக தள்ளிவைத்துவிட்டு தன்மேல் புதிய வாந்திகளை அள்ளி அள்ளி பூசிக்கொண்டு குதூகலிக்க அடிமை மனம்கொண்டவர்களால் மட்டுமே முடிகிறது.
கடந்த ஆண்டிகளில் நடந்த எத்தனையோ அடக்குமுறைகளை மறந்தாலும், மறக்க முடியாதது திரு.சதாம் உசேன் அவர்களின் படுகொலை. ஈராகில் புகுந்ததிலிருந்து நடத்திய கொலைகளுடன் இந்த படுகொலையையும் நிகழ்த்தியவர்கள், அங்கே தற்போது அமைதி நிலை திரும்பிக்கொண்டிருப்பதாக (செய்திகள்) வதந்திகளை வாரி வாரி இரைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதை வெட்கங்கெட்ட அரபுநாடுகள் உள்பட அனைத்தும் தங்கள் நாடுகளில் வெளியாகும் (வெளியாக்கும்) பத்திரிகைகளில் வெளியிட்டு பூரித்துபோகின்றன.
அமைதி திரும்பிவிட்டதாக அவர்கள் வெளியுலகத்திற்கு காட்டுவது. அமெரிக்க இராணுவத்தினர் (புகைப்படங்களுக்காக) குழந்தைகளுக்கு இனிப்பு தருவதையும், உணவகங்கள் சிறப்பாக நடந்துகொண்டிருப்பதையும் தானே தவிர இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒருபிடி மண்ணாவது திரும்ப கிடைத்ததாவென்று காட்ட முடியவில்லை.
உதாரணத்திற்கு இங்கு என்னால் குறிப்பிட முடிந்தது ஒரு ஈராக் மட்டுமே இந்த வரிசையில் பாலஸ்தீனம், காஷ்மீர், இலங்கை தொடங்கி பாதிக்கப்படும் அத்தனை சமூகங்களுங்களை பற்றியும் எழுத இங்கே பக்கங்கள் போதாது என்பதும் தங்களுக்கு தெரிந்ததே.
தன் இனமே ஆனாலும் பாதிக்கப்படுவது யாரோதானே என நினைத்துக்கொண்டிருக்கும் இந்த சுரனைகெட்ட மனித இனத்தினிடையில்தான் உணர்வாளிகளும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்றென்னுகையில் எனக்கு ஏதோ பிணங்களின் மத்தியில் இருப்பதுபோல் தோன்றுகிறது.
இதே உணர்வுகள் உங்களுக்கும் தோன்றினால் நாம் தோழர்களே என்ற மாமனிதன் சே குவேராவின் வரிகளுடன் நாம் உரக்க ஊருக்கு உரைக்க சொல்லுவோம்.
இந்த புத்தாண்டு மட்டுமல்ல, நாளை நாமும் தாக்கப்படுவோம் என்பதை அறிந்தும் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் மனித சமூகம் இருக்கும்வரை எந்த இனத்தின் எந்த புத்தாண்டுகளும் நமக்கு பொலிவாகாது. வழக்கம்போல் இதுவும் வெரும் நாட்களின் எண்ணிக்கைக்குதான் என்று அலட்சியப்படுத்தி அசிங்கத்தைபோல் துடைத்து எறிந்துவிடலாம்.
எல்லா புத்தாண்டுகளுக்கும் நான் தவறாமல் செய்கிற நல்ல பழக்கம் புத்தாண்டுகள் பிறப்பதற்கு முன் உறங்கிவிடுவது. முதலாளிய கட்டமைப்புகளின் நடுவில் வாழ்வதால் ஒரு நாள் விடுமுறையை வீணாக்குவானேன் என்கிற நல்லெண்ணம்தான்.
வாழ்க உருப்படாத சனநாயகம்.
கட்டாயத்தை ஏற்றுக்கொண்ட தருணத்தில் உனக்கு மட்டுமென்ன இப்படியொரு நினைப்பு என எனக்குள் இன்னொரு மனம் கேள்விகேட்க...
கடைசியில் முதல் மனம் வெல்கிறது.
பழைய வருடங்களின் குப்பைகள் நிறைய குவிந்துகிடக்க அதனை ஒரு ஓரமாக தள்ளிவைத்துவிட்டு தன்மேல் புதிய வாந்திகளை அள்ளி அள்ளி பூசிக்கொண்டு குதூகலிக்க அடிமை மனம்கொண்டவர்களால் மட்டுமே முடிகிறது.
கடந்த ஆண்டிகளில் நடந்த எத்தனையோ அடக்குமுறைகளை மறந்தாலும், மறக்க முடியாதது திரு.சதாம் உசேன் அவர்களின் படுகொலை. ஈராகில் புகுந்ததிலிருந்து நடத்திய கொலைகளுடன் இந்த படுகொலையையும் நிகழ்த்தியவர்கள், அங்கே தற்போது அமைதி நிலை திரும்பிக்கொண்டிருப்பதாக (செய்திகள்) வதந்திகளை வாரி வாரி இரைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதை வெட்கங்கெட்ட அரபுநாடுகள் உள்பட அனைத்தும் தங்கள் நாடுகளில் வெளியாகும் (வெளியாக்கும்) பத்திரிகைகளில் வெளியிட்டு பூரித்துபோகின்றன.
அமைதி திரும்பிவிட்டதாக அவர்கள் வெளியுலகத்திற்கு காட்டுவது. அமெரிக்க இராணுவத்தினர் (புகைப்படங்களுக்காக) குழந்தைகளுக்கு இனிப்பு தருவதையும், உணவகங்கள் சிறப்பாக நடந்துகொண்டிருப்பதையும் தானே தவிர இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒருபிடி மண்ணாவது திரும்ப கிடைத்ததாவென்று காட்ட முடியவில்லை.
உதாரணத்திற்கு இங்கு என்னால் குறிப்பிட முடிந்தது ஒரு ஈராக் மட்டுமே இந்த வரிசையில் பாலஸ்தீனம், காஷ்மீர், இலங்கை தொடங்கி பாதிக்கப்படும் அத்தனை சமூகங்களுங்களை பற்றியும் எழுத இங்கே பக்கங்கள் போதாது என்பதும் தங்களுக்கு தெரிந்ததே.
தன் இனமே ஆனாலும் பாதிக்கப்படுவது யாரோதானே என நினைத்துக்கொண்டிருக்கும் இந்த சுரனைகெட்ட மனித இனத்தினிடையில்தான் உணர்வாளிகளும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்றென்னுகையில் எனக்கு ஏதோ பிணங்களின் மத்தியில் இருப்பதுபோல் தோன்றுகிறது.
இதே உணர்வுகள் உங்களுக்கும் தோன்றினால் நாம் தோழர்களே என்ற மாமனிதன் சே குவேராவின் வரிகளுடன் நாம் உரக்க ஊருக்கு உரைக்க சொல்லுவோம்.
இந்த புத்தாண்டு மட்டுமல்ல, நாளை நாமும் தாக்கப்படுவோம் என்பதை அறிந்தும் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் மனித சமூகம் இருக்கும்வரை எந்த இனத்தின் எந்த புத்தாண்டுகளும் நமக்கு பொலிவாகாது. வழக்கம்போல் இதுவும் வெரும் நாட்களின் எண்ணிக்கைக்குதான் என்று அலட்சியப்படுத்தி அசிங்கத்தைபோல் துடைத்து எறிந்துவிடலாம்.
எல்லா புத்தாண்டுகளுக்கும் நான் தவறாமல் செய்கிற நல்ல பழக்கம் புத்தாண்டுகள் பிறப்பதற்கு முன் உறங்கிவிடுவது. முதலாளிய கட்டமைப்புகளின் நடுவில் வாழ்வதால் ஒரு நாள் விடுமுறையை வீணாக்குவானேன் என்கிற நல்லெண்ணம்தான்.
வாழ்க உருப்படாத சனநாயகம்.
Labels:
கட்டுரைகள்
Friday, December 28, 2007
"தும்பிக்காரன்" வார்ப்பில்
என் தும்பிக்காரன் பற்றி அய்யா த.பழமலய் அவர்களை தொடர்ந்து
வார்ப்பு கவிதை தளத்திலும், வானவில், மாற்று, குளம் மற்றும் தோழமை இதழ்களிலும் விமர்சனம் எழுதி சிறப்பு செய்தவர்ளுக்கும்,
திருமுதுகுன்றத்தில்(விருதாசலம்) தனியாக அறிமுக விழா நடத்திய தோழர்கள் சி.சுந்தரபாண்டியன், பட்டி செங்குட்டுவன், பொன்குமார், லலித்குமார்,
மற்றும் புதுவை தோழர்களுக்கும் நன்றிகள்
காண்க வார்ப்பு:
http://www.vaarppu.com/review.php?rvr_id=16
வார்ப்பு கவிதை தளத்திலும், வானவில், மாற்று, குளம் மற்றும் தோழமை இதழ்களிலும் விமர்சனம் எழுதி சிறப்பு செய்தவர்ளுக்கும்,
திருமுதுகுன்றத்தில்(விருதாசலம்) தனியாக அறிமுக விழா நடத்திய தோழர்கள் சி.சுந்தரபாண்டியன், பட்டி செங்குட்டுவன், பொன்குமார், லலித்குமார்,
மற்றும் புதுவை தோழர்களுக்கும் நன்றிகள்
காண்க வார்ப்பு:
http://www.vaarppu.com/review.php?rvr_id=16
Labels:
விமர்சனங்கள்
சிறுகதை தொகுப்பு

இது என் அய்ந்தாவது புத்தகம்
கவிதைகளை தொடர்ந்து தற்போது
சிறுகதை தொகுப்பு ஒன்றும் வெளியிட்டுள்ளேன்.
இந்நூல் முன்னதாக ஆரியம் வென்றதா என்கிற தலைப்பில் வெளியிட
ஏற்பாடுகள் முடிந்துவிட்ட தருணத்தில் எதிபாராத எதிர்ப்புகள் காரணமாக
தற்போது மதகுப்பலகைகள் என்கிற தலைப்பில் காவியா வெளியீடாக வந்திருப்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
புத்தகத்தின் பெயர்: மதகுப்பலகைகள்
வெளியீடு: காவியா சென்னை.
விலை: உரூபாய்-80
கிடைக்குமிடங்கள்: காவியா பதிப்பகம்.
தமிழ் அலை திருமுதுகுன்றம்
இலக்கியம், லெனின் வீதி,புதுவை
Labels:
அறிமுகம்
Saturday, October 20, 2007
செருப்புகளும் மதங்களும்
விற்பனை சந்தையில்
நிறைய
குவிந்து கிடக்கின்றன
செருப்புகள் போல்
மதங்களும்
தங்களுக்குள்
விவாதித்து விவாதித்து
தாங்களாகவே
அடித்துக் கொள்வதிலும்
சளைத்தவையில்லை
ஒன்றையொன்று
அளவுகளிலும்
அழகுகளிலும் தான்
வெவ்வேறாக
இருக்கின்றன
சில அறுந்தும்
சில தேய்ந்தும்
செருப்புகளை போலவே
பல வேளைகளில்
செருப்புகள்
உயர்வானவைதான்
மனிதயினத்தை
காவுகள் கேட்கும்
மதங்களைவிடவும்
நிறைய
குவிந்து கிடக்கின்றன
செருப்புகள் போல்
மதங்களும்
தங்களுக்குள்
விவாதித்து விவாதித்து
தாங்களாகவே
அடித்துக் கொள்வதிலும்
சளைத்தவையில்லை
ஒன்றையொன்று
அளவுகளிலும்
அழகுகளிலும் தான்
வெவ்வேறாக
இருக்கின்றன
சில அறுந்தும்
சில தேய்ந்தும்
செருப்புகளை போலவே
பல வேளைகளில்
செருப்புகள்
உயர்வானவைதான்
மனிதயினத்தை
காவுகள் கேட்கும்
மதங்களைவிடவும்
Labels:
கவிதைகள்
பிறவிப்பயன்
ஒழுக்கமா திண்ணுப்புட்டு
உபாதைன்னு
ஊர்பாதையில கழிக்கிற
கழிவுதாங்க நாங்க
எழுத்தாளர்களுக்கு இருப்பதுப்போல
எங்களுக்கும் நிறையவுண்டு
இணை, துணை, புனை பெயர்கள்
மனுச பயக
உதாசினப்படுத்தின எங்கள
தள்ளாடியபடி
தலையில் சுமக்குறாங்க
சில கடவுள்கள்
அரசு தொட்டில்கூட இல்லாத
அனாதைங்களனாலும்
பெருமைதாங்க எங்களுக்கு
வெட்டித்தனமா
மதங்கள் பேசும்
மனுசங்களா இல்லாம
மலமா இருந்தாலும்
மத்தவங்களுக்கு
உதவுறமேன்னு
உபாதைன்னு
ஊர்பாதையில கழிக்கிற
கழிவுதாங்க நாங்க
எழுத்தாளர்களுக்கு இருப்பதுப்போல
எங்களுக்கும் நிறையவுண்டு
இணை, துணை, புனை பெயர்கள்
மனுச பயக
உதாசினப்படுத்தின எங்கள
தள்ளாடியபடி
தலையில் சுமக்குறாங்க
சில கடவுள்கள்
அரசு தொட்டில்கூட இல்லாத
அனாதைங்களனாலும்
பெருமைதாங்க எங்களுக்கு
வெட்டித்தனமா
மதங்கள் பேசும்
மனுசங்களா இல்லாம
மலமா இருந்தாலும்
மத்தவங்களுக்கு
உதவுறமேன்னு
Labels:
கவிதைகள்
கடவுள்கள் உண்டு
கடவுள்கள் இல்லையென்று
கத்திக் கொண்டிருந்தவன்தான்
தேடிப்பார்த்துவிடலாம் என்று
தெருவில் இறங்கிவிட்டேன்
கோயில், குளம், மசூதி,
தேவாலயம் என்று
எங்கெல்லாமோ
தேடித் தேடித் தேடி
தொங்கிப்போன முகத்தோடு
தொடர்வண்டி நிலையம் வந்தேன்
பறந்துகொண்டிருக்கும் உலகில்
பதற்றமேயின்றி
"பீ" அள்ளிக் கொண்டிருந்தான்
என் பிதாமகன்
அடப்பாவிகளா
கடவுள் இல்லையென்கிறீர்களே
உருப்படுவீர்களா நீங்கள்
அப்ப நாற்சந்திகளில்
நரகலை அள்ளிக்கொண்டிருப்பவர் யார்?
கத்திக் கொண்டிருந்தவன்தான்
தேடிப்பார்த்துவிடலாம் என்று
தெருவில் இறங்கிவிட்டேன்
கோயில், குளம், மசூதி,
தேவாலயம் என்று
எங்கெல்லாமோ
தேடித் தேடித் தேடி
தொங்கிப்போன முகத்தோடு
தொடர்வண்டி நிலையம் வந்தேன்
பறந்துகொண்டிருக்கும் உலகில்
பதற்றமேயின்றி
"பீ" அள்ளிக் கொண்டிருந்தான்
என் பிதாமகன்
அடப்பாவிகளா
கடவுள் இல்லையென்கிறீர்களே
உருப்படுவீர்களா நீங்கள்
அப்ப நாற்சந்திகளில்
நரகலை அள்ளிக்கொண்டிருப்பவர் யார்?
Labels:
கவிதைகள்
Saturday, June 30, 2007
பெரியாரும் பெருமானாரும்
அப்படியொன்றும்
பெரிய இடைவெளியில்லை
அவருக்கும்
இவருக்கும்
அவர் இனத்தலைவர்
இவர் இனமானத் தலைவர்
இருவரும் போராளிகளே
பெண்விடுதலைக்கும்
மண்விடுதலைக்கும்
பெரியவர் தொடங்கியதை
பெரியார் தொடர்ந்தார்
இருவருக்கும்
பிடித்தது கருப்பு
வெளிச்சத்தின்
திமிர் அடக்க
வினாக்களற்ற விடைகள்
நிறைய அவரிடம்
விடைகளற்ற வினாக்கள்
நிறைய இவரிடம்.
இவருக்கும் அவருக்கும்
வாரிசுகளாக மக்களே
இருந்தனர்
இருவரும்
உயர்குடியில் பிறந்தவர்கள்தான்
தாழ்குடிகளுக்காக
தங்களை இழந்தவர்கள்
அவருக்காவது
இறைவன் துணை
இவருக்கு
அறிவே துணை
பெரிய இடைவெளியில்லை
அவருக்கும்
இவருக்கும்
அவர் இனத்தலைவர்
இவர் இனமானத் தலைவர்
இருவரும் போராளிகளே
பெண்விடுதலைக்கும்
மண்விடுதலைக்கும்
பெரியவர் தொடங்கியதை
பெரியார் தொடர்ந்தார்
இருவருக்கும்
பிடித்தது கருப்பு
வெளிச்சத்தின்
திமிர் அடக்க
வினாக்களற்ற விடைகள்
நிறைய அவரிடம்
விடைகளற்ற வினாக்கள்
நிறைய இவரிடம்.
இவருக்கும் அவருக்கும்
வாரிசுகளாக மக்களே
இருந்தனர்
இருவரும்
உயர்குடியில் பிறந்தவர்கள்தான்
தாழ்குடிகளுக்காக
தங்களை இழந்தவர்கள்
அவருக்காவது
இறைவன் துணை
இவருக்கு
அறிவே துணை
Labels:
கவிதைகள்
Saturday, April 28, 2007
எங்கள் பெரியார்

மூடிமறைத்து பேச
அறியார்
மூட பழக்கம் எதுவும்
தெரியார்
அறியார்
மூட பழக்கம் எதுவும்
தெரியார்
நூலார் திமிர் அறுத்த
வாளார்
நூற்றாண்டு கடந்து வாழும்
வரலாறார்
நரியார் தோலுரித்த
புலியார்
நால்வகை வர்ணம் கலைத்த
கரியார்
எளிதாய் கடந்து செல்லும்
வழியார்
ஏதிலியார்க்கு வெளிச்சம் தந்த
விழியார்
தெளியார் அறிவு நெய்த
தறியார்
தெளிந்தோருக்கு தெளிவான
குறியார்
உலக தமிழருக்கு
உரியார்
உணர்ந்தால் விளங்கும்
மொழியார்
மநூ வேதம் கொளுத்திய
திரியார்
மாதருக்கு தெளிவான
ஒலியார்
தேடி படிக்க சிறந்த
நெறியார் - தூய
தாடி முளைத்த
தந்தை பெரியார்.
வாளார்
நூற்றாண்டு கடந்து வாழும்
வரலாறார்
நரியார் தோலுரித்த
புலியார்
நால்வகை வர்ணம் கலைத்த
கரியார்
எளிதாய் கடந்து செல்லும்
வழியார்
ஏதிலியார்க்கு வெளிச்சம் தந்த
விழியார்
தெளியார் அறிவு நெய்த
தறியார்
தெளிந்தோருக்கு தெளிவான
குறியார்
உலக தமிழருக்கு
உரியார்
உணர்ந்தால் விளங்கும்
மொழியார்
மநூ வேதம் கொளுத்திய
திரியார்
மாதருக்கு தெளிவான
ஒலியார்
தேடி படிக்க சிறந்த
நெறியார் - தூய
தாடி முளைத்த
தந்தை பெரியார்.
Labels:
கவிதைகள்
Thursday, March 08, 2007
தனி-குடித்தனம்
எங்களுக்கென்று
வீடுகளுண்டு எம்மண்ணில்
மாடி ஓடு கூரையென
பல வடிவங்களில்
நினைத்த இடத்தில்
இருக்கலாம் உறங்கலாம்
ஓடி விளையாடலாம்
கட்டில் அலமாரி தொடங்கி
சாமான் சட்டுகள்
மூலை முடுக்கு
எங்கும் எதிலும்
எம் வாசமே
நிறைந்திருக்கும்
எல்லாம் விட்டு
புலம்பெயர்கையில்
நினைக்கவில்லை
எம் வாழ்வு எம் மகிழ்வு
எம் இயக்கம் எல்லாம்
சுருங்கிப்போகுமென்று
ஒரேயொரு கட்டிலில்
வீடுகளுண்டு எம்மண்ணில்
மாடி ஓடு கூரையென
பல வடிவங்களில்
நினைத்த இடத்தில்
இருக்கலாம் உறங்கலாம்
ஓடி விளையாடலாம்
கட்டில் அலமாரி தொடங்கி
சாமான் சட்டுகள்
மூலை முடுக்கு
எங்கும் எதிலும்
எம் வாசமே
நிறைந்திருக்கும்
எல்லாம் விட்டு
புலம்பெயர்கையில்
நினைக்கவில்லை
எம் வாழ்வு எம் மகிழ்வு
எம் இயக்கம் எல்லாம்
சுருங்கிப்போகுமென்று
ஒரேயொரு கட்டிலில்
Labels:
கவிதைகள்
புதிர் மரணங்கள்
புதிதல்ல தான்
நாங்கள் மரணிப்பது
வறுமைக்கும்
வாழ்க்கைக்குமிடையே
நிகழும் போராட்டத்தில்
மனதளவில்
செத்துவிட்ட எம்மை
மறுபடி மறுபடி
சாகடிக்கின்றன
சில பல புதிர் மரணங்கள்
மன அழுத்தத்தில் சில
கடன் அழுத்தத்தில் பல
கட்டிடத்திலிருந்து விழுந்து
மருத்துவமின்றி பல பல
படுக்கும் செலவுதான்
என்றில்லை
இங்கு எடுக்கும் செலவும்
அதிகமே
எங்கோ தூரத்தில்
கொண்டாடப்படுகிறதாம்
தொழிலாளர் தினம்
எதற்கிது…
தொழிலாளியாக இருப்பதற்கா?
இறப்பதற்கா?
நாங்கள் மரணிப்பது
வறுமைக்கும்
வாழ்க்கைக்குமிடையே
நிகழும் போராட்டத்தில்
மனதளவில்
செத்துவிட்ட எம்மை
மறுபடி மறுபடி
சாகடிக்கின்றன
சில பல புதிர் மரணங்கள்
மன அழுத்தத்தில் சில
கடன் அழுத்தத்தில் பல
கட்டிடத்திலிருந்து விழுந்து
மருத்துவமின்றி பல பல
படுக்கும் செலவுதான்
என்றில்லை
இங்கு எடுக்கும் செலவும்
அதிகமே
எங்கோ தூரத்தில்
கொண்டாடப்படுகிறதாம்
தொழிலாளர் தினம்
எதற்கிது…
தொழிலாளியாக இருப்பதற்கா?
இறப்பதற்கா?
Labels:
கவிதைகள்
பூட்டியவீட்டில்
பூட்டியவீட்டில்
தனியே விட்டு செல்லாதீர்கள்
உம் குலகருமாந்திரமான
என்னை
கொல்லிவாய் பேய்களென
மிரட்டுதுங்கள்
குடும்பப்படங்கள்
எண்ணெய் கொப்பறைகளாய்
கொளுத்துதென்னை
இடவலமென எரியும்;
விளக்குகள்
புறம் வசை புலம்பலென
எதிரொலித்து மிரட்டுதுங்கள்
பேச்சுகள்
இரவு ஆந்தைகள்
விழிப்பிடுங்க
அலறி அலறி ஓடுகிறதென்
ஆழ்மனக்கனவுகள்
எப்படி ஒப்பினீர்கள்
உம்மை படைத்து
பரிபாலிப்பேனென நம்பியும்
என்னை பூட்டிய வீட்டில் தனியே விட்டுச்செல்ல
தனியே விட்டு செல்லாதீர்கள்
உம் குலகருமாந்திரமான
என்னை
கொல்லிவாய் பேய்களென
மிரட்டுதுங்கள்
குடும்பப்படங்கள்
எண்ணெய் கொப்பறைகளாய்
கொளுத்துதென்னை
இடவலமென எரியும்;
விளக்குகள்
புறம் வசை புலம்பலென
எதிரொலித்து மிரட்டுதுங்கள்
பேச்சுகள்
இரவு ஆந்தைகள்
விழிப்பிடுங்க
அலறி அலறி ஓடுகிறதென்
ஆழ்மனக்கனவுகள்
எப்படி ஒப்பினீர்கள்
உம்மை படைத்து
பரிபாலிப்பேனென நம்பியும்
என்னை பூட்டிய வீட்டில் தனியே விட்டுச்செல்ல
Labels:
கவிதைகள்
நிரந்தரமென்று
நிரந்தமற்று
கழிந்துக்கொண்டிருக்கிறது
காலம்
நிரந்தரமற்றவையிலிருந்தே
தம்மை சரிசெய்து
உயிர்த்தெழுகின்றது
நிரந்தரமற்ற வாழ்க்கை
எதுவும் நிரந்தரமில்லை
என்பதாக பொரிருமி
தள்ளினும்
பலவகையில்
எதையேனும்
நிரந்தரமாக்கி கொள்ளவே
பேராசையோடு அலைகிறது
நிரந்தரமற்ற
மனிதயினம்
கழிந்துக்கொண்டிருக்கிறது
காலம்
நிரந்தரமற்றவையிலிருந்தே
தம்மை சரிசெய்து
உயிர்த்தெழுகின்றது
நிரந்தரமற்ற வாழ்க்கை
எதுவும் நிரந்தரமில்லை
என்பதாக பொரிருமி
தள்ளினும்
பலவகையில்
எதையேனும்
நிரந்தரமாக்கி கொள்ளவே
பேராசையோடு அலைகிறது
நிரந்தரமற்ற
மனிதயினம்
Labels:
கவிதைகள்
நன்றி கெட்டத் தனம்
அந்த கழுதைக் கூட
சபித்திருக்கக்கூடும்
உன் அழுக்கை
சுமந்து செல்கையில்
எருக்கம்பால் தொட்டு
அடையாளம்
எழுதுகையிலும்
வெள்ளாவி பானையில்
வரிந்து வரிந்து
சுற்றுகையிலும்
வெந்துப்போன கைகள் கண்டு
வெருப்பு வந்ததில்லை
அவர்களுக்கு
மேல் கீழ் மூச்சுவாங்கி
அடித்து பிழிந்து முருக்கி தேய்த்து
முதுகில் சுமந்து தருகையில்
கூலியை குறைப்பதற்காக
சொல்லுகிறாய்
வேட்டி ஓரத்தில்
கறையிருப்பதாக
அறிந்திருக்கவில்லை தான்
அது அவர்களின்
குருதிதான் யென்பதை
அறிந்தால்…
சபித்திருக்கக்கூடும்
உன் அழுக்கை
சுமந்து செல்கையில்
எருக்கம்பால் தொட்டு
அடையாளம்
எழுதுகையிலும்
வெள்ளாவி பானையில்
வரிந்து வரிந்து
சுற்றுகையிலும்
வெந்துப்போன கைகள் கண்டு
வெருப்பு வந்ததில்லை
அவர்களுக்கு
மேல் கீழ் மூச்சுவாங்கி
அடித்து பிழிந்து முருக்கி தேய்த்து
முதுகில் சுமந்து தருகையில்
கூலியை குறைப்பதற்காக
சொல்லுகிறாய்
வேட்டி ஓரத்தில்
கறையிருப்பதாக
அறிந்திருக்கவில்லை தான்
அது அவர்களின்
குருதிதான் யென்பதை
அறிந்தால்…
Labels:
கவிதைகள்
மன மாற்றம்
எப்போதாவது யாராவது
மதம் மாறுகையில்
பதை பதைத்துதான் போவேன்
தடுத்து நிறுத்திவிட எண்ணி
அரிசி பருப்பு
பணமெல்லாம் கிடைக்கும்
ஒரு வேலைக்கு மட்டும்
வறுமையும்
வசை சொற்களும்
தொடரும்
மாறிவந்தவனென்று
முன் தோல் நீக்குவதில்
முன்னணியில் இருப்பவர்கள் கூட
இருப்பதில்லை
முன்னுரிமை தருவதில்
இருக்குமிடத்திலிருந்து
போராடாமல்
மாறித்தான் என்ன பயன்
மனிதமற்ற மதங்களுக்கு
மதம் மாறுகையில்
பதை பதைத்துதான் போவேன்
தடுத்து நிறுத்திவிட எண்ணி
அரிசி பருப்பு
பணமெல்லாம் கிடைக்கும்
ஒரு வேலைக்கு மட்டும்
வறுமையும்
வசை சொற்களும்
தொடரும்
மாறிவந்தவனென்று
முன் தோல் நீக்குவதில்
முன்னணியில் இருப்பவர்கள் கூட
இருப்பதில்லை
முன்னுரிமை தருவதில்
இருக்குமிடத்திலிருந்து
போராடாமல்
மாறித்தான் என்ன பயன்
மனிதமற்ற மதங்களுக்கு
Labels:
கவிதைகள்
கடவுள் பேசுகிறேன்
தவறாக
நிகழ்ந்து விட்டதென்
பிறப்பு
பீ அள்ளும்
கைகளாகவோ
ஏர்பிடிக்கும்
தோள்களாகவோ
சேறு மிதிக்கும்
கால்களாகவோ
அல்லாமல்
வேதாதங்களின்
தொடைகளுக்கிடையில்
வழிந்திறங்கும்
பிறப்பு கழிவுகளாக
பண புழுக்கமிகுந்த
அறையில்
அய்வகை உணவுகள்
தலையில் ஒழுக
அறிவற்றுலரும்
கூட்டத்திலென
தவறாக
நிகழ்ந்துவிட்டதென்
பிறப்பு
நிகழ்ந்து விட்டதென்
பிறப்பு
பீ அள்ளும்
கைகளாகவோ
ஏர்பிடிக்கும்
தோள்களாகவோ
சேறு மிதிக்கும்
கால்களாகவோ
அல்லாமல்
வேதாதங்களின்
தொடைகளுக்கிடையில்
வழிந்திறங்கும்
பிறப்பு கழிவுகளாக
பண புழுக்கமிகுந்த
அறையில்
அய்வகை உணவுகள்
தலையில் ஒழுக
அறிவற்றுலரும்
கூட்டத்திலென
தவறாக
நிகழ்ந்துவிட்டதென்
பிறப்பு
Labels:
கவிதைகள்
Wednesday, August 09, 2006
சுதந்திர தினம்
உன் குலம்
அழிஞ்சேபோச்சுன்னு
குதிச்ச
நா குளத்துல
கைய வச்சதுக்கு
கொச கொசன்னு
வழியிர குருதி காயத்தோட
அண்ணன் பிணம் வந்தப்போவ
அடிவயித்த புடிச்சிகிட்டு
அப்பவே போயிட்டா ஆத்தா
அடிச்சி புடிச்சி
அப்பனுக்கும் போட்டானுவோ
பொய் வழக்குகள
மேல் சட்டையே போடவிடாம
பொரட்டி பொரட்டியெடுத்துட்டு
கையில குடுக்குற
இத்துனூண்டு
கொடியும் குண்டூசியும்
கேடுகெட்டு நா
கொண்டாடனுமா
சுதந்திர தினம்
அழிஞ்சேபோச்சுன்னு
குதிச்ச
நா குளத்துல
கைய வச்சதுக்கு
கொச கொசன்னு
வழியிர குருதி காயத்தோட
அண்ணன் பிணம் வந்தப்போவ
அடிவயித்த புடிச்சிகிட்டு
அப்பவே போயிட்டா ஆத்தா
அடிச்சி புடிச்சி
அப்பனுக்கும் போட்டானுவோ
பொய் வழக்குகள
மேல் சட்டையே போடவிடாம
பொரட்டி பொரட்டியெடுத்துட்டு
கையில குடுக்குற
இத்துனூண்டு
கொடியும் குண்டூசியும்
கேடுகெட்டு நா
கொண்டாடனுமா
சுதந்திர தினம்
Labels:
கவிதைகள்
Wednesday, June 14, 2006
தும்பிக்காரன் விமர்சனம் 02
தும்பிகள்; ஈசல்கள் அல்ல...
பேரா. த. பழமலய்
தும்பிக்காரன் - கவிமதி
சுறவம் 2005
தமிழ்அலை வெளியீடு
உளுந்தூர்பேட்டை
கவிக்கோ அப்துல் ரகுமான் சப்பானிய அய்க்கூ கவிதையைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியதோடு அதனை வளர்த் தெடுத்தவர். அவர் வளர்த்தெடுத்தது அய்க்கூக்களை மட்டுமா? அவரால் இலட்சிக்கவி 'அண்ணன் அறிவுமதி' போன்ற எத்தனையோ கவிஞர்கள் அலை எழுப்பி நிற்கிறார்கள்.
அறிவுமதியின் தனிச்சிறப்பு, அவர் அடிவாழையாய் அநேகம் பேரைக் குலை தள்ள வைத்திருப்பது. அய்க்கூ குலைகள்! அவற்றுக்குப் புகை மூட்டம் போட்டு அவற்றைச் சந்தைக்குக் கொண்டு வருவதில் கவிஞர் இ.இசாக்கின் உழைப்புக் குறிப்பிடத்தக்கது.
அறிவுமதியின் சுடரில் தங்கள் திரிகளை ஏற்றிக்கொண்டவருள் ஒருவர் அசன்பசர். இவரின் புனை பெயர் கவிமதி. இவரின் இந்தப் பெயரிலேயே இவரை பிறியாதவராக அறிவுமதியும், அறிவுமதியை பிறியாதவராக இவரும் இருக்கிறார்கள். கருத்தொருமித்தவர்கள். இது நல்லது, தமிழுக்கு நல்லது.
அசன்பசர், "கடல் கடந்தும் தாய் மொழியே பேசும் சங்கு"! அரபுநாட்டிற்கு அம்மாவின் கடிதம் கொண்டுவரும் அருமைத் தமிழுக்காக ஏங்குபவர். தமிழ் பாட்டை பாடுவதற்கு ஒரு தமிழன் கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பவர். மொழியும், மொழி உணர்வும் மதம் கடந்தது.
கவிஞர் கவிமதியே சொல்வது போலச் சொட்டு சொட்டான இந்த ஒட்டாத கவிதைகள் (அய்க்கூக்கள்) தாமரை இலைத் தண்ணீர்தான். என்றாலும் இவற்றை ஒன்று சேர்த்தும் பார்க்க முடியும். இதில் இவர் கவி ஆளுமை தெரிகிறது. அனைத்து அக்கறைகளும் தெரிகின்றன.
சிலுவை பிறை ஓம்
எதுவும் காப்பாற்ற வில்லை
சுனாமி.
பேருந்து விபத்து
முகப்பில்
கடவுள் துணை? பிறகு எதுதான் காப்பாற்றும்? துணை?,
ஈரோட்டிலும்
பூசணிப்பூ
சாணி உருண்டையில்
பிறகு... பாலைவனத்தை நனைப்பது வியர்வையாகத்தான் இருக்க முடியும். உழைப்பில் நம்பிக்கை வைக்க வேண்டும். அதுதான் எல்லாம்.
இப்படி உழைப்பதில் பெருமை கொள்ளும் கவிஞரின் நம்பிக்கைகள் கும்மிருட்டில் மின்மினிகளாய் அழகு சேர்க்கின்றன.
முருங்கை மரத்தில் வந்து ஏறி உலுக்கும் வேதாளத்திடமிருந்து பூக்களைக் காப்பாற்ற செருப்பு, விளக்குமாறு கட்டி வைப்பவர் அந்த நாள் ஆசாமி, அணில்களிடமிருந்து பழங்களைக் காப்பாற்றக் கொய்யா மரத்தில் மணிகளைக் கட்டி வைப்பவர் இந்த நாள் ஆசாமி. இந்த ஆசாமிகளுக்காக முருங்கையிடமும் அணிலிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்பவர்கள்தாம் கவிஞர்கள். "யுத்த களத்தில் தனியாய்ச் சமாதனக் கொடி" பிடிப்பவர்கள்.
கவிமதியின் வெகுமதி பெரும் கவிதைகள்;
ரகசிய மடல்
படித்துவிட்டது
பிரதித்தாள்.
சாய்வுத் தூறல்
சடக்கென விரியுது
வானவில் குடை"
அய்க்கூ எழுதுவது, சிறுவர்கள் மழைக்காலத்தில் தும்பி பிடிக்கும் அனுபவந்தான். அய்க்கூக்காரர்கள், தும்பிக்காரர்கள்! அவர்கள் பிடித்து நமக்காக விடும் தும்பிகள்தாம் இந்த அய்க்கூ கவிதைகள். அவை அழகு,கோத்தும்பி ஓர் அழகு, ஊசித்தும்பி ஓர் அழகு, இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு.
புற்றீசல்கள் ஆகிவிடும் போதுதான் அலுப்புச் சலிப்புத் தருவன.
கவிமதி தும்பிக்காரர்... ஈசல்காரர் அல்லர்.
த.பழமலய்
விழுப்புரம்
19.5.06
Labels:
அய்க்கூ நூல்
தும்பிக்காரன் விமர்சனம் 01
தும்பிக்காரன் - ஹைக்கூ நூல் விமர்சனம்
கன்னிக்கோயில் இராஜா
'வேற்று நாட்டு சரித்திரங்களை நம்
மொழியில் மொழிபெயர்திடல் வேண்டும்'
என்றான் மாக்கவி பாரதி. அவ்வாறு தற்போது நமது தமிழ் இலக்கியப் பட்டியலில் ஐக்கூ, ஹொக்கூ,கெய்கூ,ஹைக்கூ என்று சொல்லப்படுகின்ற ஜப்பானிய கவிதைகள் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு பிடித்துப்போக, படைக்க துவங்கிவிட்டனர்.
இவை தமிழிற்கு வந்தபிறகு, தமிழ் மண்ணிற்கே உரியத்தான பால அங்கத சுவைகளை பொருத்தி எழுதப்பட்டு அனைவரின் பாராட்டுதலையும் பெற்று வருகிறது. அவ்வகையில் புதுச்சேரியிலிருந்து புறப்பட்டிருக்கிறார் கவிமதி. தனது 'தும்பிக்காரன்' தொகுப்பின்மூலம்.
இனி தும்பிக்காரனை வாசிக்க துவக்குவோம்...
தமிழில் தான் அதிக ஹைக்கூ நூல்கள் வந்திருக்கின்றன என்ற செய்தி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இதோ அவ்வரிசையில் தும்பிக்காரனும் சிறந்தமுறையில் அட்டைப்படம் மற்றும் உள் புகைப்படங்கள் மற்றும் 135 ஹைக்கூக்களுடன் வந்திருக்கிறார்.
இத்தொகுப்பில் முதல் ஹைக்கூவே மனதில் காட்சிப் படிமத்தை கொண்டு வரக்கூடியதாக அமைந்தது தொகுபிற்கான வெற்றியே...
சாவுவீடு
கொதிக்கிறது
கோழி
-என்றும்
ஊரில் சாவு
இன்று நிறையும்
வெட்டியான் வயிறு
-என இவை இரண்டுமே பொருள் ஒன்றாக இருந்தாலும் வெவ்வேறு செய்திகளை கூறுவதோடு கவிஞரின் யுக்தியை பறைச்சாற்றுகிறது.
செய்திதாள்களிலும், பட்டிமன்றங்களிலும் கூட்டுக்குடும்பத்தைப் பற்றியும், அது கிடைக்காத குடுபங்களின் அவலத்தையும் பட்டி தொட்டி வரை பேசிக்கொண்டு மட்டுமே இருக்கிறன. இத்தருணத்தில்
கூட்டுவாழ்க்கை
படிப்பறிவற்ற
புறாக்கள்
-என்ற ஹைக்கூ மூலம் படித்தவர்களுக்கு நல்ல 'சூடு' போட்டிருக்கிறார்.
சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே தற்போது அதிக அளவில் கவனிப்புக்குள்ளாகிறது. கவிஞரும் அதற்கு ஆதாரமாக...
சாலைவிரிவாக்கம்
மரங்கள் சாகும்
நாளை நீயும்
- என சாலை விரிவாக்கம் என்ற பெயரில் எண்ணற்ற மரங்களை கொன்று குவிக்கின்ற செயல்களை சாட்டையடியாக விளாசுகிறார்.
இயற்கையை நேசித்த கவிஞர் ஐந்தறிவு ஜீவராசிகளின் மேலும் பெருங்கருணைக் கொண்டுள்ளார் என்பதற்கு சான்றாக...
கதவுகள் இல்லை
தொடர்வண்டிவரும்
கவனம் ஆடுகளே
- இவை ஆடுகளுக்கு கூறுவதாக கூறி மடமை மாந்தனுக்கும் அறிவுரையாகவே கூறியிருக்கிறார்.
'காணி நிலம் வேண்டும் பராசக்தியே'என்று பாடிய பாரதி இன்றிருந்தால் 'காண நிலம் வேண்டும் பராசக்தியே' என் பாடும் குரலாக...
கம்பிச்செடிகள்
கலவைமரங்கள்
விதைமறந்த வயல்
- என பதிவு செய்திருப்பது பாராட்டிற்குரியது.
இது தொகுப்பில் செறிவு மிகுந்த கவிதையாகவும், ஆங்காங்கே இதுபோன்று பரவிக்கிடப்பதும் படிக்கின்ற வாசகனை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
அவசர உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிற நாம் எங்கு நோக்கிலும் கூட்ட நெரிசல்களை காண்கிறோம். மக்கள் நெரிசல் நிறைந்த அங்கே மாந்த நேயம் இருக்கிறதா? என்ற வினாவிற்கு விடையாக...
கூட்டநெரிசல்
காலியாக
சிறுமிகையில் தட்டு
- நம்மில் மாந்த நேயத்தின் வெளிப்பாடு வெறுமைதானா? என சிந்திக்க வைத்திருக்கிறார்.
குளம் ஒரு சிறு கல்லில், நிறைய வட்டங்களை தன்னுள்ளே எழுப்பிக்கொள்வதைப் போல ஹைக்கூ கவிதைகளும் படிக்கின்ற வாசகனை பல்வேறு நிலைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அத்தகைய பதிவாக...
மண்டப வாசல்
மனிதன்,நாய்,காக்கை
வெற்று இலை
பட்டாசு விற்பனை
சூடுபித்தது
பிஞ்சுகாயங்கள்
இலைகள் உதிரவில்லை
கிளையில் தூளி
குழந்தை உறக்கம்
- போன்றவற்றின் மூலம் வாசக விழிகளுக்கு விருந்து படைத்திருக்கிறார்.
இந்த தும்பிக்காரன் மழை பிரியராய் இருந்திருப்பார் என எண்ணத் தோன்றும் அளவிற்கு...
கும்மிருட்டு
ஒற்றை இசை
மழை
மழைநீர் சேகரிப்பு
சன்னலுக்கு வெளியே
பிஞ்சு கைகள்
- போன்று பல மழைக் கவிதைகள் படைத்துள்ளார்.
தொகுப்பில் ஒரே கருப்பொருட்களைக் கொண்டு ஹைக்கூ படைக்கின்ற ஆற்றல் கவிஞருக்கு இருந்தாலும், அது படிக்கின்ற வாசகனை சலிப்படையவே வைத்திடும்.
அதேபோன்று கவிதைகள் எழுதி, அதனை நூலாக்கும் பட்சத்தில் அதிக கவனமும் தேவைபடுகிறது. ஏனெனில் இத்தொகுப்பில் பக்கம் 42லும், பக்கம்52லும்,
மரம் வெட்டினவன்
கோடாரியை திட்டினான்
காலில் காயம்
- என ஒரே கவிதையே இரு இடங்களில் பதிவாகியுள்ளது.
மேற்கூறிய சில குறைகளல்லாத குறைகள் இருப்பினும், தொகுப்பில் பல புதிய சிந்தனைகளுடன் கூடிய ஹைக்கூ கவிதைகளோடு; முன்னழகு/பின்னழகு/ஒளியழகு/வடிவழகு/அச்சழகு என அழகான நூலாக அழகாக்கிய தும்பிக்காரன்; கவிதைவானில் சிறப்புடன் வலம் வருவா(ன்)ர்.
அன்புடன்
கன்னிக்கோயில் இராஜா
நூல்பெற
சி.சுந்தரபாண்டியன்
கோனான்குப்பம்-606 104
திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) வட்டம்
கடலூர் மாவட்டம்.
பக்கம்: 74, விலை:ரூ30
கன்னிக்கோயில் இராஜா
'வேற்று நாட்டு சரித்திரங்களை நம்
மொழியில் மொழிபெயர்திடல் வேண்டும்'
என்றான் மாக்கவி பாரதி. அவ்வாறு தற்போது நமது தமிழ் இலக்கியப் பட்டியலில் ஐக்கூ, ஹொக்கூ,கெய்கூ,ஹைக்கூ என்று சொல்லப்படுகின்ற ஜப்பானிய கவிதைகள் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு பிடித்துப்போக, படைக்க துவங்கிவிட்டனர்.
இவை தமிழிற்கு வந்தபிறகு, தமிழ் மண்ணிற்கே உரியத்தான பால அங்கத சுவைகளை பொருத்தி எழுதப்பட்டு அனைவரின் பாராட்டுதலையும் பெற்று வருகிறது. அவ்வகையில் புதுச்சேரியிலிருந்து புறப்பட்டிருக்கிறார் கவிமதி. தனது 'தும்பிக்காரன்' தொகுப்பின்மூலம்.
இனி தும்பிக்காரனை வாசிக்க துவக்குவோம்...
தமிழில் தான் அதிக ஹைக்கூ நூல்கள் வந்திருக்கின்றன என்ற செய்தி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இதோ அவ்வரிசையில் தும்பிக்காரனும் சிறந்தமுறையில் அட்டைப்படம் மற்றும் உள் புகைப்படங்கள் மற்றும் 135 ஹைக்கூக்களுடன் வந்திருக்கிறார்.
இத்தொகுப்பில் முதல் ஹைக்கூவே மனதில் காட்சிப் படிமத்தை கொண்டு வரக்கூடியதாக அமைந்தது தொகுபிற்கான வெற்றியே...
சாவுவீடு
கொதிக்கிறது
கோழி
-என்றும்
ஊரில் சாவு
இன்று நிறையும்
வெட்டியான் வயிறு
-என இவை இரண்டுமே பொருள் ஒன்றாக இருந்தாலும் வெவ்வேறு செய்திகளை கூறுவதோடு கவிஞரின் யுக்தியை பறைச்சாற்றுகிறது.
செய்திதாள்களிலும், பட்டிமன்றங்களிலும் கூட்டுக்குடும்பத்தைப் பற்றியும், அது கிடைக்காத குடுபங்களின் அவலத்தையும் பட்டி தொட்டி வரை பேசிக்கொண்டு மட்டுமே இருக்கிறன. இத்தருணத்தில்
கூட்டுவாழ்க்கை
படிப்பறிவற்ற
புறாக்கள்
-என்ற ஹைக்கூ மூலம் படித்தவர்களுக்கு நல்ல 'சூடு' போட்டிருக்கிறார்.
சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே தற்போது அதிக அளவில் கவனிப்புக்குள்ளாகிறது. கவிஞரும் அதற்கு ஆதாரமாக...
சாலைவிரிவாக்கம்
மரங்கள் சாகும்
நாளை நீயும்
- என சாலை விரிவாக்கம் என்ற பெயரில் எண்ணற்ற மரங்களை கொன்று குவிக்கின்ற செயல்களை சாட்டையடியாக விளாசுகிறார்.
இயற்கையை நேசித்த கவிஞர் ஐந்தறிவு ஜீவராசிகளின் மேலும் பெருங்கருணைக் கொண்டுள்ளார் என்பதற்கு சான்றாக...
கதவுகள் இல்லை
தொடர்வண்டிவரும்
கவனம் ஆடுகளே
- இவை ஆடுகளுக்கு கூறுவதாக கூறி மடமை மாந்தனுக்கும் அறிவுரையாகவே கூறியிருக்கிறார்.
'காணி நிலம் வேண்டும் பராசக்தியே'என்று பாடிய பாரதி இன்றிருந்தால் 'காண நிலம் வேண்டும் பராசக்தியே' என் பாடும் குரலாக...
கம்பிச்செடிகள்
கலவைமரங்கள்
விதைமறந்த வயல்
- என பதிவு செய்திருப்பது பாராட்டிற்குரியது.
இது தொகுப்பில் செறிவு மிகுந்த கவிதையாகவும், ஆங்காங்கே இதுபோன்று பரவிக்கிடப்பதும் படிக்கின்ற வாசகனை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
அவசர உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிற நாம் எங்கு நோக்கிலும் கூட்ட நெரிசல்களை காண்கிறோம். மக்கள் நெரிசல் நிறைந்த அங்கே மாந்த நேயம் இருக்கிறதா? என்ற வினாவிற்கு விடையாக...
கூட்டநெரிசல்
காலியாக
சிறுமிகையில் தட்டு
- நம்மில் மாந்த நேயத்தின் வெளிப்பாடு வெறுமைதானா? என சிந்திக்க வைத்திருக்கிறார்.
குளம் ஒரு சிறு கல்லில், நிறைய வட்டங்களை தன்னுள்ளே எழுப்பிக்கொள்வதைப் போல ஹைக்கூ கவிதைகளும் படிக்கின்ற வாசகனை பல்வேறு நிலைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அத்தகைய பதிவாக...
மண்டப வாசல்
மனிதன்,நாய்,காக்கை
வெற்று இலை
பட்டாசு விற்பனை
சூடுபித்தது
பிஞ்சுகாயங்கள்
இலைகள் உதிரவில்லை
கிளையில் தூளி
குழந்தை உறக்கம்
- போன்றவற்றின் மூலம் வாசக விழிகளுக்கு விருந்து படைத்திருக்கிறார்.
இந்த தும்பிக்காரன் மழை பிரியராய் இருந்திருப்பார் என எண்ணத் தோன்றும் அளவிற்கு...
கும்மிருட்டு
ஒற்றை இசை
மழை
மழைநீர் சேகரிப்பு
சன்னலுக்கு வெளியே
பிஞ்சு கைகள்
- போன்று பல மழைக் கவிதைகள் படைத்துள்ளார்.
தொகுப்பில் ஒரே கருப்பொருட்களைக் கொண்டு ஹைக்கூ படைக்கின்ற ஆற்றல் கவிஞருக்கு இருந்தாலும், அது படிக்கின்ற வாசகனை சலிப்படையவே வைத்திடும்.
அதேபோன்று கவிதைகள் எழுதி, அதனை நூலாக்கும் பட்சத்தில் அதிக கவனமும் தேவைபடுகிறது. ஏனெனில் இத்தொகுப்பில் பக்கம் 42லும், பக்கம்52லும்,
மரம் வெட்டினவன்
கோடாரியை திட்டினான்
காலில் காயம்
- என ஒரே கவிதையே இரு இடங்களில் பதிவாகியுள்ளது.
மேற்கூறிய சில குறைகளல்லாத குறைகள் இருப்பினும், தொகுப்பில் பல புதிய சிந்தனைகளுடன் கூடிய ஹைக்கூ கவிதைகளோடு; முன்னழகு/பின்னழகு/ஒளியழகு/வடிவழகு/அச்சழகு என அழகான நூலாக அழகாக்கிய தும்பிக்காரன்; கவிதைவானில் சிறப்புடன் வலம் வருவா(ன்)ர்.
அன்புடன்
கன்னிக்கோயில் இராஜா
நூல்பெற
சி.சுந்தரபாண்டியன்
கோனான்குப்பம்-606 104
திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) வட்டம்
கடலூர் மாவட்டம்.
பக்கம்: 74, விலை:ரூ30
தை இரண்டாம் இதழ்
உயிருக்கு நேர் -- அறிவுமதி
இதழாகத்தான் தொடங்கினோம்
இயக்கமாகி விட்டது.
முதல் பதிப்பு போதாமல் இரண்டாம் பதிப்பு கண்டிருக்கிறது...
ஓர் இலக்கிய இதழ். தமிழில்... தமிழ்நாட்டில்...
கைநாட்டு மரபிலிருந்து... கையெழுத்து மரபிற்குக்
கரையேற்றிய அந்த ஈரோட்டுக் கிழவரின் எதிர்நீச்சல்
வெற்றியாகத்தான் இதனை உணர்கிறோம்.
கறுநீர் மடுவில் களிப்போடு மீன்களோடு மீன்களாய்
நீச்சலடித்துக் கொண்டிருந்தவரை
அற்ப சூழ்ச்சியில் போய் அமுக்கி
ஆழத்திலேயே கொல்லப் பார்த்தவரின்
கொடும்பிடியிலிருந்துத் திமிறி உதறி உந்தி
மேல்வந்து வானம் வாங்கி
மூச்சுவிடுகிற வேகத்தில் வெளிப்படுகிறது
இன்றைய தமிழர்களின் தமிழ்க் கவிதை.
என்ன எழுதியிருக்கிறாள், என்ன எழுதியிருக்கிறான்
என்பது தெரியாத எம் ஏடறியா எழுத்தறியா பாமரத் தாய்கள்
இந்தத் தை இதழை ஏந்திப்போய்
எதிர்வீட்டுக்காரர்களிடமெல்லாம்
காட்டிக் காட்டி
என் மகள் எழுதியதைப் பாருங்கள்
என் மகன் எழுதியதைப்பாருங்கள் என்று
ஏக்கம் தீர்க்கிறார்கள் என்கிற செய்தியையே
வியர்வைத் திங்களின்
வெற்றியாகப் பதிவு செய்கிறோம்.
அங்கங்கே அழைத்தழைத்து அறிமுக விழா நடத்தி
அம்மாவின் முந்தானை அவிழ்ப்பாய்
ஆதரவு தருகிற அனைத்து
அன்புள்ளங்களுக்கும்
உறுதிதருகிறோம்
கவிதைகளுக்கான இந்த இதழை
தொடர்ந்து கொண்டுவருவோம்...
இதழாகத்தான் தொடங்கினோம்
இயக்கமாகி விட்டது.
முதல் பதிப்பு போதாமல் இரண்டாம் பதிப்பு கண்டிருக்கிறது...
ஓர் இலக்கிய இதழ். தமிழில்... தமிழ்நாட்டில்...
கைநாட்டு மரபிலிருந்து... கையெழுத்து மரபிற்குக்
கரையேற்றிய அந்த ஈரோட்டுக் கிழவரின் எதிர்நீச்சல்
வெற்றியாகத்தான் இதனை உணர்கிறோம்.
கறுநீர் மடுவில் களிப்போடு மீன்களோடு மீன்களாய்
நீச்சலடித்துக் கொண்டிருந்தவரை
அற்ப சூழ்ச்சியில் போய் அமுக்கி
ஆழத்திலேயே கொல்லப் பார்த்தவரின்
கொடும்பிடியிலிருந்துத் திமிறி உதறி உந்தி
மேல்வந்து வானம் வாங்கி
மூச்சுவிடுகிற வேகத்தில் வெளிப்படுகிறது
இன்றைய தமிழர்களின் தமிழ்க் கவிதை.
என்ன எழுதியிருக்கிறாள், என்ன எழுதியிருக்கிறான்
என்பது தெரியாத எம் ஏடறியா எழுத்தறியா பாமரத் தாய்கள்
இந்தத் தை இதழை ஏந்திப்போய்
எதிர்வீட்டுக்காரர்களிடமெல்லாம்
காட்டிக் காட்டி
என் மகள் எழுதியதைப் பாருங்கள்
என் மகன் எழுதியதைப்பாருங்கள் என்று
ஏக்கம் தீர்க்கிறார்கள் என்கிற செய்தியையே
வியர்வைத் திங்களின்
வெற்றியாகப் பதிவு செய்கிறோம்.
அங்கங்கே அழைத்தழைத்து அறிமுக விழா நடத்தி
அம்மாவின் முந்தானை அவிழ்ப்பாய்
ஆதரவு தருகிற அனைத்து
அன்புள்ளங்களுக்கும்
உறுதிதருகிறோம்
கவிதைகளுக்கான இந்த இதழை
தொடர்ந்து கொண்டுவருவோம்...
தெளிவான பேச்சு
ஒரு வீடுநிறைந்த
ஒலி கூட்டங்களில்
ஆத்திகம்; நாத்திகம்
போதனைகள்; வேதனைகளென
இசங்களின் சண்டைகளாய்
தெளிவாகக் கேட்கிறதெனக்கு
பேச்சுகள்
எந்த இசத்துக்குள்ளும்
என்னை அடைய விடாமல்
அடைகாக்கிறதொரு
கருத்த முட்டை
தரையில் நசுங்கிய
மழை அட்டை கழிவுகளாய்
நாற்றமடித்து
காற்றை குழப்புகின்றன
வேதாதங்கள்
இடையில்
எனக்கு மட்டும்
கேட்கிறதொரு தெளிவான பேச்சு
ஒலி கூட்டங்களில்
ஆத்திகம்; நாத்திகம்
போதனைகள்; வேதனைகளென
இசங்களின் சண்டைகளாய்
தெளிவாகக் கேட்கிறதெனக்கு
பேச்சுகள்
எந்த இசத்துக்குள்ளும்
என்னை அடைய விடாமல்
அடைகாக்கிறதொரு
கருத்த முட்டை
தரையில் நசுங்கிய
மழை அட்டை கழிவுகளாய்
நாற்றமடித்து
காற்றை குழப்புகின்றன
வேதாதங்கள்
இடையில்
எனக்கு மட்டும்
கேட்கிறதொரு தெளிவான பேச்சு
Labels:
கவிதைகள்
பேரினவாதத்தின் முகங்கள்
பேரினவாததிற்கென முகங்களுண்டு
தாக்கப்படுவோரின்
குரல்வளைக் குருதியில்
மிளிருமது.
பேரினவாதத்திற்கென
பேச்சுமுண்டு
அறுக்கப்படுவோரின்
அலறில் எதிரொலிக்குமது.
பேரினவாததிற்கென
கைகளுமுண்டு
கொடூரங்கள் நிகழ்த்துகையில்
வாளேந்தி வருமது
இப்படி
பேரினவாதத்தின் முகங்கள்
நீழுகின்றன
அடக்கு முறையின்
உருவங்களாக
தாக்கப்படுவோரின்
குரல்வளைக் குருதியில்
மிளிருமது.
பேரினவாதத்திற்கென
பேச்சுமுண்டு
அறுக்கப்படுவோரின்
அலறில் எதிரொலிக்குமது.
பேரினவாததிற்கென
கைகளுமுண்டு
கொடூரங்கள் நிகழ்த்துகையில்
வாளேந்தி வருமது
இப்படி
பேரினவாதத்தின் முகங்கள்
நீழுகின்றன
அடக்கு முறையின்
உருவங்களாக
Labels:
கவிதைகள்
மானங்கெட்ட நாட்டுல...
மூனுபோகம்
வெளஞ்ச மண்ணு
மனசுவச்சா ஆக்குறா
மாறினா அழிக்கிறா
மழையம்மா
வெவசாயம் நீத்துபோக
வெளஞ்ச நெலத்த
வித்துபுட்டு
வெளிநாடு போனவக தவிர
மிஞ்சியிருக்குற
சனங்களுக்கு
கஞ்சிவூத்துரதா கேள்விபட்டு
போன எடத்துல
பொளப்பத்த
நாய்களான்னு
திட்டு வாங்கினதுதா
மிச்சம்
வெளஞ்ச மண்ணு
மனசுவச்சா ஆக்குறா
மாறினா அழிக்கிறா
மழையம்மா
வெவசாயம் நீத்துபோக
வெளஞ்ச நெலத்த
வித்துபுட்டு
வெளிநாடு போனவக தவிர
மிஞ்சியிருக்குற
சனங்களுக்கு
கஞ்சிவூத்துரதா கேள்விபட்டு
போன எடத்துல
பொளப்பத்த
நாய்களான்னு
திட்டு வாங்கினதுதா
மிச்சம்
Labels:
கவிதைகள்
தனித்து மனிதம்
ஏதேனுமொரு
இசங்களுக்குள்ளேயே தம்மை
திணித்துக்கொண்டலையும்
மனிதர்களுக்கிடையில்
இசங்களை கட்டுடைத்து
எம்மனிதனுடனும்
தன்னை
திணித்துக்கொள்ளாது
தனித்தலைகிறது
மனிதம்
இசங்களுக்குள்ளேயே தம்மை
திணித்துக்கொண்டலையும்
மனிதர்களுக்கிடையில்
இசங்களை கட்டுடைத்து
எம்மனிதனுடனும்
தன்னை
திணித்துக்கொள்ளாது
தனித்தலைகிறது
மனிதம்
Labels:
கவிதைகள்
குருட்டு நம்பிக்கை
நவீனங்களுக்குள்
புகுந்துக்கொள்கிரது உலகம்.
எவர் தன்னைப்பற்றி
எது சொல்லினும்
கவலைகொள்ளாதது
ஒரு போர்வக்குள்ளாக
அடங்கிவிட்டு
இன்னும் இரவு
இருட்டென்றே எண்ணியுறங்கும்
மனிதரைப்போல்
பிரபஞ்சங்களனைத்தும்
தனக்குள்ளாகவே
நிகழ்கிறதென்ற
குருட்டு நம்பிக்கையின்
நவீனங்களுக்குள்ளேயே
புகுந்துக்கொள்கிறது
உலகம்.
புகுந்துக்கொள்கிரது உலகம்.
எவர் தன்னைப்பற்றி
எது சொல்லினும்
கவலைகொள்ளாதது
ஒரு போர்வக்குள்ளாக
அடங்கிவிட்டு
இன்னும் இரவு
இருட்டென்றே எண்ணியுறங்கும்
மனிதரைப்போல்
பிரபஞ்சங்களனைத்தும்
தனக்குள்ளாகவே
நிகழ்கிறதென்ற
குருட்டு நம்பிக்கையின்
நவீனங்களுக்குள்ளேயே
புகுந்துக்கொள்கிறது
உலகம்.
Labels:
கவிதைகள்
தப்பி பிழைத்த சொற்கள்
சொற்கள்
பூமியின் விசாலமாய்
பரந்து கிடக்கின்றன
வார்த்தை மின்னல்களில்
வழுக்கி தொலையும் சில
நாவுகளில் கிடந்து
பரிதாபப்படுகின்றன
அச்சுப்பிழைகலென
பிராவகமெடுத்து
அரசியல் நாற்றமாகிறது
சிலவேளை
இன்னும் புழக்கத்திற்கு
வரதேவையில்லையென
காற்றில் படிந்துகிடக்கக்கூடும்
நிறையச் சொற்கள்
பூமியின் விசாலமாய்
பரந்து கிடக்கின்றன
வார்த்தை மின்னல்களில்
வழுக்கி தொலையும் சில
நாவுகளில் கிடந்து
பரிதாபப்படுகின்றன
அச்சுப்பிழைகலென
பிராவகமெடுத்து
அரசியல் நாற்றமாகிறது
சிலவேளை
இன்னும் புழக்கத்திற்கு
வரதேவையில்லையென
காற்றில் படிந்துகிடக்கக்கூடும்
நிறையச் சொற்கள்
Labels:
கவிதைகள்
நிதர்சனம்
வாடகை வீட்டில்
வசிப்பவர்கள் எனினும்
நிறைய சேர்த்து விடுகிறோம்
சொந்தங்களென
அடிக்கடி
முகவரி மாறுவது பற்றிய
வருத்தங்களும் கூடுதலே
கைக்கெட்டியது போக
நிறைய திரும்பியிருக்கக் கூடும்
மடல்கள் பரிசுகளென்று
திரும்ப பெருகிறவர்கள்
திட்டுவதும் கூட
எப்போதேனும் சந்திக்கையில்
புதிய முகவரி பற்றி
கேட்கக் கூடும்.
எழுதிக்கொடுக்கையில்
துவண்டுதான் போகிறது மனம்
எத்தனை நாளைக்கிது
நிரந்தரமென்று?
(''தை'' கவிதை காலாண்டு முதல் இதழில் வெளியாகி பாராட்டுப்பெற்ற கவிதை)
வசிப்பவர்கள் எனினும்
நிறைய சேர்த்து விடுகிறோம்
சொந்தங்களென
அடிக்கடி
முகவரி மாறுவது பற்றிய
வருத்தங்களும் கூடுதலே
கைக்கெட்டியது போக
நிறைய திரும்பியிருக்கக் கூடும்
மடல்கள் பரிசுகளென்று
திரும்ப பெருகிறவர்கள்
திட்டுவதும் கூட
எப்போதேனும் சந்திக்கையில்
புதிய முகவரி பற்றி
கேட்கக் கூடும்.
எழுதிக்கொடுக்கையில்
துவண்டுதான் போகிறது மனம்
எத்தனை நாளைக்கிது
நிரந்தரமென்று?
(''தை'' கவிதை காலாண்டு முதல் இதழில் வெளியாகி பாராட்டுப்பெற்ற கவிதை)
Labels:
கவிதைகள்
எமக்கென்றொரு காலம்
அன்று அதிகாலை
கதவுகளை தட்டினாய்
குண்டுகளால்
கண்களை திறக்குமுன்
கல்லறைகளை
திறந்தாய்
இப்படியே போகாது
காலம்
வெல்வோம்
உன் தலைமித்தெம்
விடுதலை நடக்கும்
நடக்க,,, நடக்க,,,
விடியும் எம் ஞாயிறு
பாவம்
நீதானிருக்கமாட்டாய்
அந்த அதிகாலையில்
கதவுகளை தட்டினாய்
குண்டுகளால்
கண்களை திறக்குமுன்
கல்லறைகளை
திறந்தாய்
இப்படியே போகாது
காலம்
வெல்வோம்
உன் தலைமித்தெம்
விடுதலை நடக்கும்
நடக்க,,, நடக்க,,,
விடியும் எம் ஞாயிறு
பாவம்
நீதானிருக்கமாட்டாய்
அந்த அதிகாலையில்
Labels:
கவிதைகள்
கடலே கேள்
நாங்கள்
பிணங்களை
புதைப்பதில்லை
விதைக்கிறோம்
இழந்தவைகள் கோடி
நாங்கள் இழந்தவைகளை
எவனும் தரமுடியாது
தேவைவுமில்லை
ஊண்ணற்ற உடல்கள்
ஒளியற்ற விழிகள்
திமிரற்ற மார்புகள்
எதுவும்
எம்மினத்தில் இல்லை
தேடுவோம்
தேடத்...தேடத்..தேட
எம் வீரர்கள்
நீ புதைத்த
மண்ணிலிருந்தே எஔழுவர்
பிணங்களை
புதைப்பதில்லை
விதைக்கிறோம்
இழந்தவைகள் கோடி
நாங்கள் இழந்தவைகளை
எவனும் தரமுடியாது
தேவைவுமில்லை
ஊண்ணற்ற உடல்கள்
ஒளியற்ற விழிகள்
திமிரற்ற மார்புகள்
எதுவும்
எம்மினத்தில் இல்லை
தேடுவோம்
தேடத்...தேடத்..தேட
எம் வீரர்கள்
நீ புதைத்த
மண்ணிலிருந்தே எஔழுவர்
Labels:
கவிதைகள்
பொய்க்குறிகள்
குறிகளை சிலர்
குறிக்கோலுடன்
அனுகுவர்
பலரின் குறிகள்
பக்தர்களையே
பதம் பார்க்கும்
குறிவைத்து தாக்கப்படும்
சமூகங்களோ இன்னும்
தங்கள் குறிகளை
தயாரிக்கவேயில்லை
குறிகளுக்கும்
இலக்குகளுக்குமிடையே
வாழ்க்கை
குறிக்கப்படுகிறது
எத்தனைமுறை
ஏமாற்றப்பட்டும்
ஓட்டுக்குறி
ஒழுங்கமைவதேயில்லை
குறிவித்தியாசப்படுகிறது
இனத்திற்கினம்
நீளமாக; ஆழமாக
எல்லாகுறிகளும்
அடுத்தவர்
விடுதலைக்கே ஊறுவிலைவிப்பதால்
நிரைவேராமல்தான்
போய்விடுகின்றன
பாசிசப் பொய்க்குறிகள்
குறிக்கோலுடன்
அனுகுவர்
பலரின் குறிகள்
பக்தர்களையே
பதம் பார்க்கும்
குறிவைத்து தாக்கப்படும்
சமூகங்களோ இன்னும்
தங்கள் குறிகளை
தயாரிக்கவேயில்லை
குறிகளுக்கும்
இலக்குகளுக்குமிடையே
வாழ்க்கை
குறிக்கப்படுகிறது
எத்தனைமுறை
ஏமாற்றப்பட்டும்
ஓட்டுக்குறி
ஒழுங்கமைவதேயில்லை
குறிவித்தியாசப்படுகிறது
இனத்திற்கினம்
நீளமாக; ஆழமாக
எல்லாகுறிகளும்
அடுத்தவர்
விடுதலைக்கே ஊறுவிலைவிப்பதால்
நிரைவேராமல்தான்
போய்விடுகின்றன
பாசிசப் பொய்க்குறிகள்
Labels:
கவிதைகள்
அறிவு சீவிகள்
கத்திகள் நிறைய
தீட்டப்படுகின்றன
கத்தி...கத்தி
நிரையப்பேர் சொல்லியும்
கேளாமல்
கத்திகள் நிறைய
தீட்டப்படுகிறன
சிலர் புத்திகளை
மழுங்கவிட்டு விட்டு
கத்திகளை
தீட்டிக்கொண்டிருக்கின்றனர்
எந்த கத்திகளுக்கும்
தெரிவதில்லை
தீட்டும் வேளையில்
தேய்ந்துபோவது
தீட்டப்படுகின்றன
கத்தி...கத்தி
நிரையப்பேர் சொல்லியும்
கேளாமல்
கத்திகள் நிறைய
தீட்டப்படுகிறன
சிலர் புத்திகளை
மழுங்கவிட்டு விட்டு
கத்திகளை
தீட்டிக்கொண்டிருக்கின்றனர்
எந்த கத்திகளுக்கும்
தெரிவதில்லை
தீட்டும் வேளையில்
தேய்ந்துபோவது
Labels:
கவிதைகள்
காலம்
களப்பணியில்
சாகவேண்டுமென் சகலமும்
தூசுகளுக்கள்ள
துவக்கிற்கஞ்சாதவை
எமது கவிகள்
பூஞ்சையடைந்ததல்ல
எம் புணர்சென்மம்
வன்மம் வாங்கி வாங்கி
இருத்தலில் கிடையாதெங்கள்
வலி
மறுத்த பொழுதினும்
மாசற்றவீரம்
எமது வீரம்
எமக்கு
மறுபிறவியென்பதே
மண்ணறையில்தான்
தொடங்கும்
பெருத்த விலையில்
பொருமி விடியுமெங்கள்
காலம்
சாகவேண்டுமென் சகலமும்
தூசுகளுக்கள்ள
துவக்கிற்கஞ்சாதவை
எமது கவிகள்
பூஞ்சையடைந்ததல்ல
எம் புணர்சென்மம்
வன்மம் வாங்கி வாங்கி
இருத்தலில் கிடையாதெங்கள்
வலி
மறுத்த பொழுதினும்
மாசற்றவீரம்
எமது வீரம்
எமக்கு
மறுபிறவியென்பதே
மண்ணறையில்தான்
தொடங்கும்
பெருத்த விலையில்
பொருமி விடியுமெங்கள்
காலம்
Labels:
கவிதைகள்
Friday, March 10, 2006
வாழ்க்கையாதெனில்
மேலெழுந்து வரணுமென்ற
சுயநலவிரும்பிகளல்ல
கடும் வெயில்; புயல்காற்று
வெள்ளப்பெருக்கிலும்
வாழ்வியல் மாற்றங்களை
உணர்ந்துக்கொள்ளுகையில்
ஒருவருக்கொருவர்
பிண்ணி பிணைத்து
சாயவிடாமல் சந்ததிகளை
சமன்படுத்தும்
எத்தனை ஆண்டுகள்
அடிமைபடினும்
பூமியின் அடியிலேயே
புதைந்துதான் போகும்
தனக்கென்ற வாழ்க்கை
வேர்களுக்கு
சுயநலவிரும்பிகளல்ல
கடும் வெயில்; புயல்காற்று
வெள்ளப்பெருக்கிலும்
வாழ்வியல் மாற்றங்களை
உணர்ந்துக்கொள்ளுகையில்
ஒருவருக்கொருவர்
பிண்ணி பிணைத்து
சாயவிடாமல் சந்ததிகளை
சமன்படுத்தும்
எத்தனை ஆண்டுகள்
அடிமைபடினும்
பூமியின் அடியிலேயே
புதைந்துதான் போகும்
தனக்கென்ற வாழ்க்கை
வேர்களுக்கு
Labels:
கவிதைகள்
குசாலம் விசாரிப்பு பற்றி
ஒரு சொல்லிலிருந்து
புறபட்டுவிட்ட
வார்த்தைகள்
பறந்து பறந்து
பிரபஞ்சத்தின் புரவாசலில்
அமர்கிறது
கோணல்மாணலென
கிளம்பிய
அண்டவெளி காற்று
உள்ளிழுத்த மூச்சால்
உயிர்சுரக்கிறது
என்பதுப்போல்
எனக்குத்தெரியாமல்
என் குறித்தான
புரப்பேச்சுகள்
நிறைய குப்பைகளாய்
குவிந்துக்கிடக்கின்றன
இன்றுமென்
தலைகாணுகையில் மட்டும்
குசாலம் விசாரிப்புகள்
வெட்கங்கெட்டு தொடர்கின்றன
புறபட்டுவிட்ட
வார்த்தைகள்
பறந்து பறந்து
பிரபஞ்சத்தின் புரவாசலில்
அமர்கிறது
கோணல்மாணலென
கிளம்பிய
அண்டவெளி காற்று
உள்ளிழுத்த மூச்சால்
உயிர்சுரக்கிறது
என்பதுப்போல்
எனக்குத்தெரியாமல்
என் குறித்தான
புரப்பேச்சுகள்
நிறைய குப்பைகளாய்
குவிந்துக்கிடக்கின்றன
இன்றுமென்
தலைகாணுகையில் மட்டும்
குசாலம் விசாரிப்புகள்
வெட்கங்கெட்டு தொடர்கின்றன
Labels:
கவிதைகள்
யாரும் பார்க்காதது
யாரும்
பார்க்காதவேலையில்
மீன்கள் நீந்துவதை
நிறுத்தியிருக்கக்கூடும்
யாரும்
பார்க்காத வேலையில்
இரண்டு நிலாக்கள்
பாதிசூரியன்
பிளந்தவானமென்று
எத்தனையோ மாற்றங்கள்
இப்பிரபஞ்சத்தில்
நிகழ்ந்துக்கொண்டிருக்கிறதென்பதை
யாரும்
பார்க்காதவேலையில்
பார்த்தவர்கள் சொன்னாலும்
பார்க்காதவர்கள்
ஏற்றுக்கொள்வதேயில்லை
யாரும்
பார்க்காதவற்றை
கூட்டம்கூட்டி பார்க்கவைக்கவும்
அவசியமில்லை
பார்க்காதவேலையில்
மீன்கள் நீந்துவதை
நிறுத்தியிருக்கக்கூடும்
யாரும்
பார்க்காத வேலையில்
இரண்டு நிலாக்கள்
பாதிசூரியன்
பிளந்தவானமென்று
எத்தனையோ மாற்றங்கள்
இப்பிரபஞ்சத்தில்
நிகழ்ந்துக்கொண்டிருக்கிறதென்பதை
யாரும்
பார்க்காதவேலையில்
பார்த்தவர்கள் சொன்னாலும்
பார்க்காதவர்கள்
ஏற்றுக்கொள்வதேயில்லை
யாரும்
பார்க்காதவற்றை
கூட்டம்கூட்டி பார்க்கவைக்கவும்
அவசியமில்லை
Labels:
கவிதைகள்
முரண்பாடு
விலா எலும்பிலிருந்து
படைக்கப்பட்டவளென்று
சொல்லிச் சொல்லியே
விலாஎலும்புகளை
நசுக்கிக்கொண்டலைகிறது
காலம்
தசைகிழித்து
விலா எலும்புகள்
வெளிப்பட தொடங்குகையில்
சட்டம்கூறி
நசுக்கவும் தயங்கியதேயில்லையது
முரண்பாடான வரலாற்றில்
எப்போதும்
யாரும்
விலா எழும்பிலிருந்து
தோன்றியதாக
தெரியவேயில்லை
படைக்கப்பட்டவளென்று
சொல்லிச் சொல்லியே
விலாஎலும்புகளை
நசுக்கிக்கொண்டலைகிறது
காலம்
தசைகிழித்து
விலா எலும்புகள்
வெளிப்பட தொடங்குகையில்
சட்டம்கூறி
நசுக்கவும் தயங்கியதேயில்லையது
முரண்பாடான வரலாற்றில்
எப்போதும்
யாரும்
விலா எழும்பிலிருந்து
தோன்றியதாக
தெரியவேயில்லை
Labels:
கவிதைகள்
பாய்கள்
பாய்களுக்கென்று
பல வரலாறுகளுண்டு
யோனியிலிருந்து
குருதியாகவும்
குறியிலிருந்து
மதியாகவும்
பிறப்பு; இறப்பிற்கொப்பான
அத்தனை
படிவங்களையும்
உள்வாங்கிக்கொள்ளும்
பாய்களின்
வரலாறுகளேனோ
பரண்மீதே கழிகின்றன
பல வரலாறுகளுண்டு
யோனியிலிருந்து
குருதியாகவும்
குறியிலிருந்து
மதியாகவும்
பிறப்பு; இறப்பிற்கொப்பான
அத்தனை
படிவங்களையும்
உள்வாங்கிக்கொள்ளும்
பாய்களின்
வரலாறுகளேனோ
பரண்மீதே கழிகின்றன
Labels:
கவிதைகள்
எதுமே இல்லாத ஒன்றில்
வெற்றுத்தாளில்
எதுவுமில்லையென
வீணாய் விவாதிக்கிறது
உலகம்
பாறையில் ஒழிந்திருக்கும்
சிற்பங்களென
வண்ணங்கள் குழைந்த
ஓவியங்களென
பரிணமித்த எழுத்துருக்களென
எல்லைகளற்ற பிம்பங்கள்
படிந்துக்கிடக்குமதில்
அவசியமற்றவைகளை
விலக்க விலக்க
முடிவற்று விரிகிறதொரு
வானம்
எதுவுமில்லையென
வீணாய் விவாதிக்கிறது
உலகம்
பாறையில் ஒழிந்திருக்கும்
சிற்பங்களென
வண்ணங்கள் குழைந்த
ஓவியங்களென
பரிணமித்த எழுத்துருக்களென
எல்லைகளற்ற பிம்பங்கள்
படிந்துக்கிடக்குமதில்
அவசியமற்றவைகளை
விலக்க விலக்க
முடிவற்று விரிகிறதொரு
வானம்
Labels:
கவிதைகள்
நிகழாதிருப்பின்
எப்போதும் நிகழ்ந்து
விடலாம் என்கிறதான
சம்பவங்கள் குறித்த
சர்ச்சைகள்
நிகழ்ந்து விட்ட சம்பவத்திற்கு
முன்போ பின்போ
எதிர்கொள்வதற்குண்டான
சாத்திய கூறுகள்
தசைகளிழ்ந்த
உயிர்களாய்
எப்போதும்
நிகழ்ந்துவிடக்கூடுமென்று
எதிர்நோக்கப்பட்ட
சம்பவத்தின்
மிச்சங்கள்
எப்போதும் நிகழ்வதேயில்லை
நிகழக்கூடுமென்று
நினைத்ததுப்போல்
விடலாம் என்கிறதான
சம்பவங்கள் குறித்த
சர்ச்சைகள்
நிகழ்ந்து விட்ட சம்பவத்திற்கு
முன்போ பின்போ
எதிர்கொள்வதற்குண்டான
சாத்திய கூறுகள்
தசைகளிழ்ந்த
உயிர்களாய்
எப்போதும்
நிகழ்ந்துவிடக்கூடுமென்று
எதிர்நோக்கப்பட்ட
சம்பவத்தின்
மிச்சங்கள்
எப்போதும் நிகழ்வதேயில்லை
நிகழக்கூடுமென்று
நினைத்ததுப்போல்
Labels:
கவிதைகள்
என் புதிய அய்க்கூ நூல்
பதிப்புரை
ஜப்பான் வடிவத்தின் இறக்குமதி எனப் பேசப்பட்டாலும், எவரும் எதிர்பாராத வேகத்தில் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன அய்க்கூ நூல்கள்.
அற்புதமான கிராமிய சூழலை அப்படியே படம்பிடித்து தமிழுலகுக்கு காட்டிட பொருத்தமானதாக இவ்வடிவமிருப்பதால்... இயற்கையின் இனிய அரவணைப்பில் வளர்ந்த தமிழ்க்கவிஞர்களால் அய்க்கூ வடிவம் கூடுதலாய் பயன்படுத்தப்படுவது ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இந்த அடிப்படையில் இலக்கியவுலகுக்கு வருபவர்தான் கவிமதி. அசன்பசர் என்று ஏற்கனவே இரு தொகுப்புகளின் மூலம் அறிமுகமான இவர், கவிமதியாகி கவிதைப்பயணத்தை தொடர்கிறார். தமிழின் முதல் அய்க்கூ நூலுக்கு சொந்தக்காரரான இலட்சியக்கவி அறிவுமதியின் அன்பை குடித்து இலக்கிய தாகத்தை தீர்த்துக்கொள்கிற இவர், சிறப்பான பல நல்ல நூல்களை தமிழுலகுக்கு கொடுத்து இலக்கிய உலகில் தனி இடத்தைப் பிடிப்பார் என்கிற நம்பிக்கையை தும்பிக்காரன் தருகிறது.
தமிழ்அலையின் முதல் வெளியீடாக கவிஞர் கவிமதியின் தும்பிக்காரன் வெளிவருவது மகிழ்வுக்குறியது. வாசகத் தோழர்கள் புதிய படைப்பாளிகளை ஆதரித்து ஊக்கப்படுத்த வேண்டும். இதன் மூலமே தமிழர் வாழ்க்கைமுறை வரலாறாக மாற்றம் பெற வைக்கமுடியும்.
தமிழ்அலை
உளுந்தூர் பேட்டை.
தொடர்பு முகவரி:
சி.சுந்தரபாண்டியன்
கோனான்குப்பம்-606 104
திருமுதுகுன்றம் வட்டம்
கடலூர் மாவட்டம்.
ஜப்பான் வடிவத்தின் இறக்குமதி எனப் பேசப்பட்டாலும், எவரும் எதிர்பாராத வேகத்தில் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன அய்க்கூ நூல்கள்.
அற்புதமான கிராமிய சூழலை அப்படியே படம்பிடித்து தமிழுலகுக்கு காட்டிட பொருத்தமானதாக இவ்வடிவமிருப்பதால்... இயற்கையின் இனிய அரவணைப்பில் வளர்ந்த தமிழ்க்கவிஞர்களால் அய்க்கூ வடிவம் கூடுதலாய் பயன்படுத்தப்படுவது ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இந்த அடிப்படையில் இலக்கியவுலகுக்கு வருபவர்தான் கவிமதி. அசன்பசர் என்று ஏற்கனவே இரு தொகுப்புகளின் மூலம் அறிமுகமான இவர், கவிமதியாகி கவிதைப்பயணத்தை தொடர்கிறார். தமிழின் முதல் அய்க்கூ நூலுக்கு சொந்தக்காரரான இலட்சியக்கவி அறிவுமதியின் அன்பை குடித்து இலக்கிய தாகத்தை தீர்த்துக்கொள்கிற இவர், சிறப்பான பல நல்ல நூல்களை தமிழுலகுக்கு கொடுத்து இலக்கிய உலகில் தனி இடத்தைப் பிடிப்பார் என்கிற நம்பிக்கையை தும்பிக்காரன் தருகிறது.
தமிழ்அலையின் முதல் வெளியீடாக கவிஞர் கவிமதியின் தும்பிக்காரன் வெளிவருவது மகிழ்வுக்குறியது. வாசகத் தோழர்கள் புதிய படைப்பாளிகளை ஆதரித்து ஊக்கப்படுத்த வேண்டும். இதன் மூலமே தமிழர் வாழ்க்கைமுறை வரலாறாக மாற்றம் பெற வைக்கமுடியும்.
தமிழ்அலை
உளுந்தூர் பேட்டை.
தொடர்பு முகவரி:
சி.சுந்தரபாண்டியன்
கோனான்குப்பம்-606 104
திருமுதுகுன்றம் வட்டம்
கடலூர் மாவட்டம்.
Labels:
அய்க்கூ நூல்
Subscribe to:
Posts (Atom)




