Thursday, July 14, 2005

சித்திரை


களப்பணியில்
சாகவேண்டுமென்
சகலமும்

தூசுகளுக்கல்ல
துவக்கிற்கஞ்சாதவை
எமது கவிகள்

பூஞ்சையடைந்ததல்ல
எம்
புனர்சென்மம்
வன்மம்
வாங்கி வாங்கி
இருத்தலில்
கிடையாதெங்கள்
வலி

மறுத்தபொழுதினும்
மாசற்ற வீரம்
எமதுவீரம்

எமக்கு
மறுபிறவியென்பதே
மண்ணறையில்
தொடங்கும்

பெருத்த விலையில்
பொருமி
விடியுமெங்கள்
காலம்.

(வார்ப்பு மின்னிதழில் வெளியிடப்பட்ட முதல் கவிதை)

No comments:

Post a Comment