Thursday, November 17, 2005

விதியென்பது

ஒரு மதுக்கோப்பையில்
வானத்தை வார்த்து
ஊற்றிவிடுவதுப்போல்

ஒரு அண்டத்தையே
கண்மயிரில்
கட்டியிழுப்பதுபோல்

தன் வலிமையின்
உச்சநிலைக்குள்ளாக
தள்ளப்பட்டு
எச்செயலையும்
நிகழ்த்திக் காட்டிவிட்டு

அமைதியாகவே
இருந்துவிடுகிறது விதி

1 comment:

  1. விதியின் வலிமையில்
    என்றைக்கு ஐயா நம்பிக்கை வைக்க
    ஆரம்பித்தீர்?

    என்ன ஒரு மூடத்தனம்?

    அதுவும் கவிமதியிடமிருந்து?

    ReplyDelete