Friday, March 10, 2006

முரண்பாடு

விலா எலும்பிலிருந்து
படைக்கப்பட்டவளென்று
சொல்லிச் சொல்லியே
விலாஎலும்புகளை
நசுக்கிக்கொண்டலைகிறது
காலம்

தசைகிழித்து
விலா எலும்புகள்
வெளிப்பட தொடங்குகையில்
சட்டம்கூறி
நசுக்கவும் தயங்கியதேயில்லையது

முரண்பாடான வரலாற்றில்
எப்போதும்
யாரும்
விலா எழும்பிலிருந்து
தோன்றியதாக
தெரியவேயில்லை

1 comment:

  1. கவிமதி அவர்களுக்கு

    பெண்கள் தங்களின் உரிமைகளை எடுத்துரைக்கும்பொழுது அவர்களைச் சமூகம் அடக்கியே வைக்கிறது என்பதை சொல்ல வருவதாக நினைக்கின்றேன்.


    //முரண்பாடான வரலாற்றில்
    எப்போதும்
    யாரும்
    விலா எழும்பிலிருந்து
    தோன்றியதாக
    தெரியவேயில்லை//

    இதற்கு என்ன அர்த்தம் என தெரிந்து கொள்ளலாமோ..?




    அன்புடன்

    ரசிகவ் ஞானியார்

    ReplyDelete