ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்!
நடுவண் அரசே! மாநில அரசுகளே! சோனியா, மன்மோகன் சிங், சிதம்பரம் கும்பலே!
பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து, வாழ்விடங்களை விட்டு அகற்றாதே!
பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளிகளின் நலனுக்காக சொந்த நாட்டு மக்களின் மீது போரைத் திணிக்காதே! மக்களின் வாழ்வைச் சூறைபாடும் முன்னூற்றுக்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நீக்கிடு!
மைய இந்தியப் பழங்குடி மக்கள் பகுதியில் குவித்துள்ள நடுவண் அரசு, மாநிலப் படைகளைத் திரும்பப் பெறு! அங்கு நடைபெறும் பாசிச இராணுவக் காட்டாட்சியை அகற்றிடு! மக்களுக்கு சனநாயக உரிமைகளை வழங்கிடு!
பழங்குடிகள், தலித்துக்கள் மற்றும் உழைக்கும் மக்களைக் கொன்றொழிக்கும் சல்வாஜூடும், சாந்தி சேனா, ஹர்மத்வாஹினி, இரண்வீர் சேனா, சன்லைட் சேனா, பூமிகார் சேனா போன்ற சட்டமுரணான கொலைப் படைகளைத் தடைசெய்! கோப்ரா, சேண்ரா, வேட்டை நாய்கள் போன்ற கொலைக்கார அரசுப் படைகளைக் கலைத்திடு!
போர் நடைபெறும் பகுதிகளை பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சனநாயக சக்திகள் நேரில் பார்வையிடுவதைத் தடுக்காதே!
நாட்டுப் பற்றாளர்களே!
பச்சை வேட்டை நடவடிக்கை என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான போரல்ல! மக்களுக்கு எதிரான போர்! வளர்ச்சிக்கான போரல்ல! ஏகாதிபத்திய கொள்கைக்கான போர்!
உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு
தொடர்புக்கு : 96298 68871, 94447 11353
No comments:
Post a Comment