Thursday, November 18, 2010

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் கைது!

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதனையும் கடிப்பது என்பார்கள். தேசிய பாதுகாப்பு சட்டம் என்பதே சிறுபான்மையினரையும், தமிழ்சிந்தனையாளர்களையும் கைது செய்வதற்கே என்றாகிவிட்டது. தோழர்.சிமானை தொடர்ந்து இப்போது நம் புதுவைத்தோழர்கள். வெறும் சடங்கு என்கிற ரீதியில் சடங்கள் கையாளப்படுவது தெளிவாக தெரிகிறது. முதலில் சாதாரணமாக கைது செய்பவர்கள் தமிழ்நாட்டு மேலிடத்திற்கு தெரியப்படுத்தி அவர் சொல்லுகிறபடி போலி ஆவணங்களையும், ஆதாரங்களையும் சேர்த்துக்கொண்டு தேசியப்பாதுகாப்பில் கைது செய்கிறார்கள். நான் கேட்கிறேன் இந்த தேசத்திற்கு யாரால் கேடோ அவர்களைதானே தேசியப்பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும். அண்ணன் லோகு அய்யப்பன் மற்றும் தோழர்கள் எல்லாம் இந்த நாட்டுக்கு 17 ஆயிரம் கோடி நட்டம் செய்தவரா?.

இவர்களோடு ஒத்துப்போனால் பாதுகாப்பு எதிர்த்தால் தேசிய பாதுகாப்பு. உண்மையில் தேசியப்பாதுகாப்பில் கைது செய்யப்படவேண்டியவர்கள் கருணாநிதி குடும்பத்தார் தான்.

லோகு அய்யப்பனும் தோழர்களும் செய்த தவறாக அரசு எந்திரம் முன்வைப்பது "புதுச்சேரியில் இருந்து வெளிநாட்டுக்கு ஈழ அகதிகளை அழைத்து சென்றது" எனில் எந்த வெளிநாடு? இவர்களின் கூற்றுப்படி அகதிகள் நிரந்தமாக தமிழ்நாட்டில் இருக்கும் முகாம்களிலேயே இருக்கவேண்டுமா?

ரங்கூனிலிருந்து அகதியாக வந்தவர்கள் தொடங்கி இன்னும் பல பகுதியிலிருந்து வந்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் ஒன்றெர கலந்து அகதி என்ற சுவடே தெரியாமல் நிம்மதியாக வாழ்ந்துக்கொண்டிருக்க. ஈழத்திலிருந்து வந்த தமிழர்கள் மட்டும் 30,35 ஆண்டுகளாக முகாம்களிலேயே வைக்கப்பட்டிருக்கிறார்களே அவர்களை எப்போது விடுவிப்பார்கள்?

நாம் முள்ளிவாய்க்கால் முகாமில் இருப்பவர்களை பற்றி மட்டுமே பேசிக்கொண்டு நம் வீட்டிற்கு அருகில் இருக்கும் தமிழ்நாட்டு முகாம்களை கண்டுக்கொள்வதேயில்லை, சிங்களவன் தமிழனை அழித்தால்தான் போராடனுமோ? தமிழை அழிக்கும் தமிழனுக்கு எதிராக போராட வேண்டாமோ. இதைதான் லோகு அய்யப்பனும் தோழர்களும் செய்திருக்கிறார்கள். தமிழனிடமிருந்து தமிழனை காப்பாற்றி இருக்கிறார்கள்.

"என் எதிர்வீட்டுக்காரனை கைது செய்தான் பேசாமல் இருந்தேன்" என்கிற ஜெர்மானிய பழமொழிப்போல் ஓ... எருமைமாட்டு தமிழர்களே எம் தோழர்கள் கைதாவது உங்கள் உரிமைகளுக்காகதான் என்பதை புரியாமல் புரிந்தும் கண்டுக்கொள்ளாமல் இருப்பீர்கள் ஆனால், இலவச தொலைக்காட்சிகளை கொடுத்து உங்களை "காயடித்து" வைத்திருப்பதை உணராமல் இருப்பிர்களானால். நாளை இதே அரசு உங்களை நடு வீதியில் வைத்து நாயை சுடுவதுப்போல் (உம்:மணிப்பூர்) சுடும் என்பதை பதிவு செய்து. கைதாகிய தோழர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.

1 comment:

  1. Anonymous1:50 AM

    அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாகவே இவர்கள்மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலின்போது புதுச்சேரியில் லோகு.அய்யப்பனும், காரைக்காலில் தவமணியும் வெளியில் நடமாடக்கூடாது என்பதற்காகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கான எதிர்விளைவை வரும சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் அனுபவிப்பார்கள்.

    ReplyDelete