Friday, July 29, 2011

ராஜபக்‌ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவி

இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தவேண்டும் என ஐ.நா அவையை வலியுறுத்தி மாபெரும் கையொப்ப இயக்கம் ஒன்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கொண்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசின் கோரிக்கையை ஏற்று பத்து லட்சம் கையொப்பங்களைச் சேகரித்துத் தருவதென விடுதலைச் சிறுத்தைகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.அதன் ஒரு அங்கமாகக் கடந்த 26.07.2011 அன்று எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் புதுச்சேரியில் கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டது. காமராசர் சிலை அருகில் பிலால் உணவகம் எதிரில் நடைபெற்ற அந்த இயக்கத்தில் இரண்டுமணி நேரத்தில் சுமார் ஆயிரம் பேரிடம் கையொப்பம் பெறப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்தோடு வந்து கையொப்பமிட்டனர். பெண்கள் அதிக அளவில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment