வணக்கம் தமிழக நண்பர்களே !
நீங்கள் ஜாதி மறுப்பில் வாழ்க்கைத் துணைவர் தேடுபவரா ?
உங்கள் உறவினர்கள், நண்பர்களில் யாரேனும் அப்படி இருக்கிறார்களா ?
ஜாதி மறுப்புத் திருமணம் செய்யத் தயக்கம், தடை ஏதும் இருக்கிறதா ?
எதிர்காலத்தில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் எண்ணம் இருக்கிறதா ?
அதேபோன்று, ஜாதகம் உங்களை அவமதிக்கிறதா ?
துணைவரை இழந்தோ, பிரிந்தோ மறுமணத்திற்குத் தயாராக இருக்கிறீர்களா ?
மாற்றுத் திறனாளிகளுக்குத் துணைத் தேடுகிறீர்களா?
இந்தக் கேள்விகளுக்கும்,
இதுபோன்ற கேள்விகளுக்கும்
விடை பெறத் தயாராகுங்கள் !
ஆம் தோழர்களே !
எதிர்வரும் திசம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை,
திருச்சியில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்கான
சந்திப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சென்ற மாதம் சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
திருமணப் பதிவு செய்தவர்கள் 300 பேர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்!
வாழ்வைச் செழுமைப்படுத்துங்கள் !!
நன்றி !
வி.சி.வில்வம்
No comments:
Post a Comment