Sunday, March 04, 2018

தீர்ப்பும் சடங்கும்

காலங்கடந்த தீர்ப்பு மட்டுமல்ல நீதிக்கு எதிராக வழங்கப்படும் தீர்ப்பும் ஒரு வகை கொலைக்கு சமமாததே.இதை ஏதோ தீடீரென்று எடுத்த முடிவாக நீங்கள் கருத்தத்தேவையில்லை கடந்த 15 ஆண்டுகாளின் தொடர் தேடுதலின் காரணமான இது நிகழ்ந்திருக்கலாம். கடவுளை நான் விரட்ட அவன் எனக்கு போக்கு காட்டி ஓட இப்படியாக எங்கள் இருவருக்கிடையில் நடதுக்கொண்டிந்த கண்னாம்பூச்சி இன்று முடிகிறது என நினைக்கிறேன்.

இருப்பதை நோக்கி ஓடினால்  ஒருவேலை பயன் கிடைக்கலாம் இல்லாததை நோக்கி ஓடுவதில் பயன் ஏதுமில்லை என்பது இருட்டில் ஓடிக்கொண்டிருந்த எனக்கு தெளிவாக தெரிந்துவிட்டது. இசுலாம் என்கிற கோட்பாடு என்னுள் திணிக்கபட்ட தினத்திலிருந்து செரிக்கமாட்டாமல் குழம்பிக்கொண்டே இருந்தது உண்மை. ஏனெனில் என்னுள் திணிக்கபட்ட இசுலாம் நபிகள் நாயகம் அவர்கள் முன்வைத்த இசுலாம் இல்லை என்பது மட்டுமல்ல அவர்களின்  இசுலாம் இப்பூவுலகில் எங்கும் இல்லை என்பது இபோது தெளிவாகிவிட்டது. அப்படியெனில் தற்போது உலகில் கடைபிடிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இசுலாம் ஆம் அது வெறும் சடங்குகளாகவே கடைபிடிக்கபடுவதால் இந்நிலை சரியானதே.

கடந்த காலங்களில் இசுலமிய மதகுருமார்களின் சித்து விளையாட்டில் சிக்கி தவிக்கும் இசுலாத்தை பலமுரை காப்பாற்ற நினைத்து தோற்றவர்களின் பட்டியலில் என் பெயரும் எழுதிக்கொள்ள்ட்டும். 15 ஆண்டுகளாக தொடந்த கடவுள் வேட்டை சகிப்புத் தன்மை அரவே இல்லாத மார்க்கம் என்ற பெயரில் சட்டத்தை தங்களுக்கு சாதகமாக வளைத்தெடுக்கும் சமூக விரோதிகளின் சடங்கு நிரைவேற்றல்காலால் நிறைவடைகிறது.

ஆம் இங்கே கடவுள் தலையை வெட்டி அவனுக்கே படைக்கும் சடங்கே இசுலாம் என்று போலியாக வழிக்காட்டப்படுகிறது. இங்கே இந்த புள்ளியில் தான் என்கக்குள் தெளிவான கோடுகளை வரைகின்றது ஆம் ரிசானவின் தலை கீழே விழுந்த நொடியில் என் பகுத்தறிவு தலைநிமிர்கிறது. ஓஒரே நேரத்தைல் ஒரே இடத்தில் நீதியின் தலையை வெட்டிவிட்டு அநீதிக்கு தலைவைக்கும் இச்செயலை எப்படி உண்மை இசுலாம் ஏற்கும்....ஏற்கிறது எனில் அது எப்படி உண்மை இசுலாமாக இருக்க முடியும்?

No comments:

Post a Comment