Saturday, November 05, 2005

ஒரு பேச்சுக்கு சொல்வதெனில்...

நடிகைகள்
பற்றியெனும்போது
நாறத்தான் செய்கின்றன
நாற்சந்தி
கழிவுகளாகிவிட்ட
செய்திகள்

அந்தகாலத்து நடிகைகளில்
எம்மினத்திற்கு
அம்மாவாய்
தங்கையாய்
தாரமாய்
ஒப்பீடுகாட்ட
ஒன்றிரண்டாவது
இருந்ததுண்மை

நாகரீகமென்ற பெயரில்
எலும்புகளற்று உழன்றுவிடும்
நாவுகளால்

இக்கால
அரிதார கழிவுகளை
எம்பெண்களுடன்
ஒப்பிடுவதற்குபதில்
வருத்தம்தான்
மிஞ்சுகிறது மனதில்

3 comments:

  1. கவிமதி
    உங்கல் கவிஅதியின் கருத்தோடு எனக்கு உடன்பாடில்லாவிட்டாலும்...தயவு செய்து இதை அழித்துவிட்டு, (அனானி..க்காக) மறு பதிப்பிடுங்களேன்.

    ச்சே...இவர்கள் எல்லாம் என்ன மனிதர்களோ..

    ReplyDelete
  2. அற்பர்களுக்காக சிந்தனை தளத்தை மாற்றி அமைக்க வேண்டிய அவசியமில்லை நண்பரே...

    இந்த வீணர்கள் எதை எழுதினாலும் அதில் ஆபாசத்தைத் தான் காண்பார்கள்.

    என்றாலும், நண்பர் தருமியின் வேண்டுகோளுக்கிணங்கத் தான் நீங்கள் மாற்றிக் கொண்டீர்கள் என்றால், பிறரை மதிக்கும் போக்கு கொண்ட உங்கள் நல்ல மனதிற்கு நன்றி - பாராட்டுகள்- வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. அன்பின் கவிமதி,

    உங்களின் ஆழ்மன கோபத்தை கவிதையில் வெளிப் படுத்தி இருக்கிறீர்கள். நாகரீகம் என்ற பெயரில் மேநாட்டு கலாசாரத்தினை நம் தாய்த்திருநாட்டில் பழக்கச் சொல்வதை நானே முன்னின்று இணையங்களில் கண்டித்து வருகிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete