உயிர் கிழிய கிழிய
உலகம்பார்க்கும்
வீறிட்டழுது
தன் விடியலை
வெளிச்சப்படுத்தும்
உச்சிமுகந்து உசுப்பி
புகையளித்து
புனர்சென்மம் தர
பெருமிதமாகும்
தொட்டு எடுப்பார்க்கெல்லாம்
தும்பையாய் சிரிக்கும்
அதட்டுவோர் குரல்கண்டு
அகல காதுகளை
அவர்திசை தள்ளும்
அறுபட்ட கொடிமறந்து
மாறுபட்டமடிகிடந்து
மகிழும்
தலைமுறை
கடந்த பின்னும்
இன்னும்
எவருக்கும்
பிடிபடுவதில்லை
பிறப்பின் பொருள்
No comments:
Post a Comment