Friday, March 10, 2006

வாழ்க்கையாதெனில்

மேலெழுந்து வரணுமென்ற
சுயநலவிரும்பிகளல்ல
கடும் வெயில்; புயல்காற்று
வெள்ளப்பெருக்கிலும்
வாழ்வியல் மாற்றங்களை
உணர்ந்துக்கொள்ளுகையில்
ஒருவருக்கொருவர்
பிண்ணி பிணைத்து
சாயவிடாமல் சந்ததிகளை
சமன்படுத்தும்

எத்தனை ஆண்டுகள்
அடிமைபடினும்
பூமியின் அடியிலேயே
புதைந்துதான் போகும்
தனக்கென்ற வாழ்க்கை
வேர்களுக்கு

No comments:

Post a Comment