Wednesday, June 14, 2006

காலம்

களப்பணியில்
சாகவேண்டுமென் சகலமும்
தூசுகளுக்கள்ள
துவக்கிற்கஞ்சாதவை
எமது கவிகள்

பூஞ்சையடைந்ததல்ல
எம் புணர்சென்மம்
வன்மம் வாங்கி வாங்கி
இருத்தலில் கிடையாதெங்கள்
வலி

மறுத்த பொழுதினும்
மாசற்றவீரம்
எமது வீரம்

எமக்கு
மறுபிறவியென்பதே
மண்ணறையில்தான்
தொடங்கும்

பெருத்த விலையில்
பொருமி விடியுமெங்கள்
காலம்

No comments:

Post a Comment