Wednesday, June 14, 2006

நிதர்சனம்

வாடகை வீட்டில்
வசிப்பவர்கள் எனினும்
நிறைய சேர்த்து விடுகிறோம்
சொந்தங்களென

அடிக்கடி
முகவரி மாறுவது பற்றிய
வருத்தங்களும் கூடுதலே

கைக்கெட்டியது போக
நிறைய திரும்பியிருக்கக் கூடும்
மடல்கள் பரிசுகளென்று
திரும்ப பெருகிறவர்கள்
திட்டுவதும் கூட

எப்போதேனும் சந்திக்கையில்
புதிய முகவரி பற்றி
கேட்கக் கூடும்.

எழுதிக்கொடுக்கையில்
துவண்டுதான் போகிறது மனம்
எத்தனை நாளைக்கிது
நிரந்தரமென்று?

(''தை'' கவிதை காலாண்டு முதல் இதழில் வெளியாகி பாராட்டுப்பெற்ற கவிதை)

No comments:

Post a Comment