Wednesday, June 14, 2006

தெளிவான பேச்சு

ஒரு வீடுநிறைந்த
ஒலி கூட்டங்களில்
ஆத்திகம்; நாத்திகம்
போதனைகள்; வேதனைகளென
இசங்களின் சண்டைகளாய்
தெளிவாகக் கேட்கிறதெனக்கு
பேச்சுகள்

எந்த இசத்துக்குள்ளும்
என்னை அடைய விடாமல்
அடைகாக்கிறதொரு
கருத்த முட்டை

தரையில் நசுங்கிய
மழை அட்டை கழிவுகளாய்
நாற்றமடித்து
காற்றை குழப்புகின்றன
வேதாதங்கள்

இடையில்
எனக்கு மட்டும்
கேட்கிறதொரு தெளிவான பேச்சு

1 comment:

  1. வாங்க வாங்க கவிமதியாரே!

    அனைவரும் நலம் தானே!

    ReplyDelete