Wednesday, June 14, 2006

பேரினவாதத்தின் முகங்கள்

பேரினவாததிற்கென முகங்களுண்டு
தாக்கப்படுவோரின்
குரல்வளைக் குருதியில்
மிளிருமது.

பேரினவாதத்திற்கென
பேச்சுமுண்டு
அறுக்கப்படுவோரின்
அலறில் எதிரொலிக்குமது.

பேரினவாததிற்கென
கைகளுமுண்டு
கொடூரங்கள் நிகழ்த்துகையில்
வாளேந்தி வருமது

இப்படி
பேரினவாதத்தின் முகங்கள்
நீழுகின்றன
அடக்கு முறையின்
உருவங்களாக

No comments:

Post a Comment