Thursday, March 08, 2007

நன்றி கெட்டத் தனம்

அந்த கழுதைக் கூட
சபித்திருக்கக்கூடும்
உன் அழுக்கை
சுமந்து செல்கையில்

எருக்கம்பால் தொட்டு
அடையாளம்
எழுதுகையிலும்

வெள்ளாவி பானையில்
வரிந்து வரிந்து
சுற்றுகையிலும்

வெந்துப்போன கைகள் கண்டு
வெருப்பு வந்ததில்லை
அவர்களுக்கு

மேல் கீழ் மூச்சுவாங்கி
அடித்து பிழிந்து முருக்கி தேய்த்து
முதுகில் சுமந்து தருகையில்

கூலியை குறைப்பதற்காக
சொல்லுகிறாய்
வேட்டி ஓரத்தில்
கறையிருப்பதாக

அறிந்திருக்கவில்லை தான்
அது அவர்களின்
குருதிதான் யென்பதை

அறிந்தால்…

No comments:

Post a Comment