அந்த கழுதைக் கூட
சபித்திருக்கக்கூடும்
உன் அழுக்கை
சுமந்து செல்கையில்
எருக்கம்பால் தொட்டு
அடையாளம்
எழுதுகையிலும்
வெள்ளாவி பானையில்
வரிந்து வரிந்து
சுற்றுகையிலும்
வெந்துப்போன கைகள் கண்டு
வெருப்பு வந்ததில்லை
அவர்களுக்கு
மேல் கீழ் மூச்சுவாங்கி
அடித்து பிழிந்து முருக்கி தேய்த்து
முதுகில் சுமந்து தருகையில்
கூலியை குறைப்பதற்காக
சொல்லுகிறாய்
வேட்டி ஓரத்தில்
கறையிருப்பதாக
அறிந்திருக்கவில்லை தான்
அது அவர்களின்
குருதிதான் யென்பதை
அறிந்தால்…
No comments:
Post a Comment