Thursday, March 08, 2007

நிரந்தரமென்று

நிரந்தமற்று
கழிந்துக்கொண்டிருக்கிறது
காலம்

நிரந்தரமற்றவையிலிருந்தே
தம்மை சரிசெய்து
உயிர்த்தெழுகின்றது
நிரந்தரமற்ற வாழ்க்கை

எதுவும் நிரந்தரமில்லை
என்பதாக பொரிருமி
தள்ளினும்

பலவகையில்
எதையேனும்
நிரந்தரமாக்கி கொள்ளவே

பேராசையோடு அலைகிறது
நிரந்தரமற்ற
மனிதயினம்

No comments:

Post a Comment