Saturday, April 28, 2007

எங்கள் பெரியார்


மூடிமறைத்து பேச
அறியார்
மூட பழக்கம் எதுவும்
தெரியார்

நூலார் திமிர் அறுத்த
வாளார்
நூற்றாண்டு கடந்து வாழும்
வரலாறார்

நரியார் தோலுரித்த
புலியார்
நால்வகை வர்ணம் கலைத்த
கரியார்

எளிதாய் கடந்து செல்லும்
வழியார்
ஏதிலியார்க்கு வெளிச்சம் தந்த
விழியார்

தெளியார் அறிவு நெய்த
தறியார்
தெளிந்தோருக்கு தெளிவான
குறியார்

உலக தமிழருக்கு
உரியார்
உணர்ந்தால் விளங்கும்
மொழியார்

மநூ வேதம் கொளுத்திய
திரியார்
மாதருக்கு தெளிவான
ஒலியார்

தேடி படிக்க சிறந்த
நெறியார் - தூய
தாடி முளைத்த
தந்தை பெரியார்.

1 comment:

  1. அன்பு கவிமதியே!
    வாழ்த்துக்கள். தங்களின் பெரியார் பற்றிய கவிதைகள்
    அற்புதம். அபாரம். வாழ்க வளமுடன்.
    என்றும் பாசத்துடன் - இனியவன் ஹாஜி முஹம்மது.

    ReplyDelete