Saturday, June 30, 2007

பெரியாரும் பெருமானாரும்

அப்படியொன்றும்
பெரிய இடைவெளியில்லை
அவருக்கும்
இவருக்கும்

அவர் இனத்தலைவர்
இவர் இனமானத் தலைவர்

இருவரும் போராளிகளே
பெண்விடுதலைக்கும்
மண்விடுதலைக்கும்

பெரியவர் தொடங்கியதை
பெரியார் தொடர்ந்தார்

இருவருக்கும்
பிடித்தது கருப்பு
வெளிச்சத்தின்
திமிர் அடக்க

வினாக்களற்ற விடைகள்
நிறைய அவரிடம்

விடைகளற்ற வினாக்கள்
நிறைய இவரிடம்.

இவருக்கும் அவருக்கும்
வாரிசுகளாக மக்களே
இருந்தனர்

இருவரும்
உயர்குடியில் பிறந்தவர்கள்தான்

தாழ்குடிகளுக்காக
தங்களை இழந்தவர்கள்

அவருக்காவது
இறைவன் துணை
இவருக்கு
அறிவே துணை

1 comment:

  1. Anonymous8:48 AM

    Mr,kavimathi please dont compare anybody with "MOHAMED", your writing well, i like words. please controle ur emotion please.

    ReplyDelete