Friday, June 20, 2008

விடுதலை பிறந்தது

கோடியில் புரலும் அரசியல், ஆன்மீக நயவஞ்சகர்களுக்கு
மத்தியில் கோடிக்கணக்கான எம் மக்களின் ஒற்றைக்குரல்
அண்ணன் தொல்.திருமாவளவன்.

தொன்மத் தமிழின் தூய்மை அரசியல் வாழ்வில் இருபத்தைந்தாவது ஆண்டுகளை கடந்து எம் தமிழுக்காக, எம் தமிழினத்திற்க்காக, எம் மண்ணுக்காக, எம் உரிமைக்காக போராடிவரும் சூழலில் நாமும் அவருடன் கைக்கோர்த்து பார்ப்பனிய இந்துத்துவாவிற்கு எதிராகவும், இந்திய அரசியல், மதசார்பின்மை என்கிற அயோக்கியத்தனங்களுக்கு எதிராகவும் களமிறங்கி போராட கடமைப்பட்டிருக்கிறோம் என்பதனை நினைவுக்கூர்ந்து.அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களை வாழ்த்தி எம் இனத்தின் ஒட்டு மொத்த வாழ்த்தாக இப்பாடலையும் சமர்ப்பிக்கிறேன்.
--------------------------------------------------------
விடுதலை பிறந்ததடா

செம்மொழியாய் இனித்திடவும்
சிதைப்போரை அழித்திடவும்
எம் மொழியும் கானாத
எழுச்சிதனை
அடைந்திடவும்

பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா

சிந்தைனையின் ஒளியாகி
சிறுத்தைகளின் தாயாகி
வஞ்சனைகள் செய்வோரை
வகுத்தெடுக்கும்
வாளாக

பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா

அடிமையல்ல நாங்கள் யார்க்கும்
என்றும் ஆளுகின்ற வர்க்கமென
களம் அமைத்து போராடி
நிறம் அழித்து நிமிர்ந்து நிற்க

பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா

காவிரிகள் காய்ந்து கிடக்க
கர்நாடகம் தர மறுக்க
வற்றாத வான்மழையாய்

பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா

புனித புத்தன் தொடரினிலே
புரட்சி சிறுத்தை அம்பேத்கர்
பெரியாரின் பெரும் நிழலாய்

பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா

வருமா வருமா விடுதலையென்று
வாய் பிளந்து நிற்கையிலே
‘’திருமா’’ உருவில் திரும்பவந்து

பிறந்ததடா
எம் தமிழ் பிறந்ததடா

1 comment:

  1. மேல் ஜாதி பெண்களை தலித் ஆண்களை விட்டு திட்டமிட்டு காதலிக்க வைத்து பின் பேரம் பேசி பணம் பறிக்கும் மாபியா கும்பல் தலைவன் திருமாவளவன்.

    ReplyDelete