Friday, February 10, 2012
மும்முனை போராட்டம்
முல்லை பெரியாறு
அன்று பெரியார் புரட்சி
"வைக்கம்" விடுதலைக்கு
இன்று பெரியாறு புரட்சி
"தமிழகம்" தன்னுரிமைக்கு
"தீ" பிடித்தால்
தண்ணீர் ஊற்றி அணைப்போம்
இங்கு
அணையால் "தீ"
புரட்சி "தீ"
வாருங்கள்
எரி நெய் ஊற்றி
வளர்போம்.
-------------------------------------------------
கூடங்குளம்
அணுக்கழிவுகள்
ஆபத்து இல்லையாம்
அறிவில் சிறந்த!!!
மனிதக்கழிவுகள்
மனம் மாறி பேசுகின்றன.
புகுஷிமா
போன இடம் தெரியவில்லை
நாகாசாகி என்ற
நரகம் போதவில்லையாம்
கல்பாக்கமோ
கண் அருகின் கல்லறை
போபாலோ
புதிய தலைமுறையினையும் விடவில்லை.
உலக கழிவுகளையும்
உலோக கழிவுகளையும்
தமிழன் தலையில்தான்
கொட்டனுமாம்
அணுக்கழிவின்
ஆபத்து குறைவுதான்
இந்த "அறிவு" கழிவுகளைவிட.
---------------------------------------------
இருட்டடிப்பு
இந்தையாவுக்கு
"தமிழகம் சேரி" என்றால்
எழுதிடுவோம்
புதிய வரலாறு.
இந்தியா ஒளிர்கிறதாம்
தமிழகத்தை எரியவிட்டு
தண்டோரா போடுகிறான்
டெல்லிக்காரன்.
அடே
பறையடித்தே
பழக்கப்பட்டவர்கள் நாங்கள்
உன் முடிவுக்கு
முரசு அடிக்கவைத்துவிடாதே.
இந்தியாவுக்கு
தமிழகம் சேரி என்றால்
நாம் சேர்ந்தே அடிப்போம்
ஆரியத்திற்கும் அதிகாரத்திற்கும்
ஆப்பு.
Labels:
கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment