உச்சிதனை முகர்ந்தால்....
கடந்த நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ஈழமக்களின் அவலங்கள் குறுந்தகடுகளாக வந்தபோது அதை கண்டு அழுததாக புழுகிய கருணாநிதியே அது தமிழக மக்களிடையே கொண்டுசெல்லபடக்கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் தடைவிதித்தும்,தகட்டை கையில் வைத்திருப்பவர்களை கைது செய்தும், கூடுதலாக ஓட்டுக்கு முதல்நாள் தமிழகம் முழுதும் மின் தடை ஏற்படுத்தியும் சாதனை செய்து தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டார்.
ஊர் வாயை மூடலாம் உண்மையின் வாயை மூட முடியாது அல்லவா. இதோ உண்மை திரைப்படமாக வந்துவிட்டது. எந்தவொரு பரப்புரை நெடியும் இல்லாமல் எங்கள் இனம் பாதிக்கபட்டதற்கு உன் பதில் என்ன? என்று செருப்பாலடித்தார்ப்போல் பதிவாகியிருக்கிறது.
எதை ஒட்டுமொத்த ஓட்டுப்பொருக்கி அரசியல்வாதிகளும் மறைத்தார்களோ அது இன்று வெட்ட வெளிச்சமாக வெளிவந்திருக்கிறது. இதை ஒரு மிகமுக்கியமான கருவியாக நாம் ஏந்தி உலகெங்கும் கொண்டுசெல்லவேண்டியது தமிழராகிய அனைவரது கடமையாகும்.
இதோ நான் தொடங்கிவிட்டேன் நீங்கள் தொடருங்கள் தோழர்களே....
இந்த சுட்டியிலிருது தொடங்குங்கள் பரப்புரையை...
நன்றி: தமிழர் பறை: காணொளி : உச்சிதனை முகர்ந்தால் திரைப்பட வெளியீடு முழு நிகழ்வு
thamizharparai.blogspot.com
http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fthamizharparai.blogspot.in%2F2012%2F02%2Fblog-post_11.html&h=lAQFRPgxuAQETXh3XjHySpfchUwF7cWsXLKJ01koSQVE7SQ
No comments:
Post a Comment