Wednesday, February 13, 2013

ரிஸானா நபீக்: காட்டுமிராண்டிகால ஷரியத்தின் கொடூரம்...

ஒருநாள் பேஸ்புக்கில் உலாவிக்கொண்டிருத்ந்தபோது TNTJTTj வகையராக்கள் ரிஸானா நபீக் என்ற சிறுமிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதைக்குறித்து “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்(நிச்சயமாக நாம் அல்லாவுக்காகவே இருக்கிறோம். நிச்சயமாக அவனிடமே திரும்ப வேண்டியவர்களாக இருக்கிறோம்) என்ற வாசகத்தை முன்னிருத்தி குற்றம் செய்திருந்தாலும் இந்த தண்டனை மிக அதிகமானதே; ஒரு வேளை குற்றம் செய்யாது இத்தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அப் பெண்ணிற்குசொர்க்கம் கிடைக்கும். அதற்கு பிரார்திப்போம் என்ற செய்திகள் உலாவந்தன. ஆனால் அவர்களது அவுலியா இந்த தண்டனையை வரவேற்றும் மனுஷ்யபுத்திரனனை கேவலமாக விமர்சித்தும் தமது இணையதளத்தில் கட்டுரையை எழுதியதும் சொந்த புத்தி எல்லாம் அவுலியாவுக்கு அடகு போய் தண்டனையை ஆதரித்தும் மனுஷ்யபுத்திரனனை கடுமையாக திட்டவும் தொடங்கிவிட்டனர். இந்த செய்திக் குறித்து விபரம் ஏதும் தெரியாத நிலையில் இருந்தபோது நக்கீரனில் வந்துள்ள மனுஷ்யபுத்திரனின் கட்டுரையை சுட்டிக்காட்டி தொலைபேசியில் ஒரு தோழர் விபரம் கூறினார். 

அதனைப் படித்த பிறகு மேலும் செய்திகளை அறிந்துகொள்ள இணைய இணைப்பில் அமர்ந்தேன். அப்பொழுது இசுலாமியர்கள் நிறைய உள்ள ஒரு பிரபலமான ஊரில் இருந்தேன். அந்த புரோஸிங் சென்டரும் ஒரு இசுலாமியருடையது. யுடியூப்பில் ரிஸானா நபீக் தலை வெட்டப்படும் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது என் இதயம் கனக்க, வயிற்றுக்குள் ஒருவர் கையைவிட்டு பிசைவதுபோன்று திணறல் ஏற்பட்டது. அநாகரீக காலத்திலிருந்து இந்த இசுலாமியர்கள் மாறவே மாட்டார்களா என்ற கேள்விக்குறியுடன் என்னை இயல்பு நிலைக்கு திருப்ப சற்று எழுந்து நகர்ந்து நின்றேன்.


அருகில் அதனை பார்த்துக்கொண்டிருந்த தாடியும் மீசையும் மழித்து சிவந்த நிறத்திலிருந்த இசுலாமிய இளைஞர் ஒருவர் “இவனுக காட்டுப் பு.... மவனுக என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டார். இன்னொரு இளைஞர் எதற்கு இந்த தண்டனை என்ற விபரம் அறியாது “இப்படி எல்லாம் தண்டனை கொடுத்தாலும் தப்பு பண்றவன் தப்பு பண்ணிக்கொண்டுதானே இருக்கான் என்றார். தண்டனை பற்றி சிறு விபரம் கூறியதும் மௌனமாகிவிட்டார். மற்றொரு இளைஞர் “என்னங்க ரொம்ப கொடுமையாக இருக்கிறது என்றார்.
      ஒரு 55 வயது முதியவர் ஒருவர் “சௌதியைப் பொருத்தவரை வேலை செய்யப்போகிறவர்கள் அனைவரையும் அடிமைகள் போல்தான் நடத்துகிறார்கள். நாம் என்ன சொன்னாலும் அங்கே எடுபடாது. சௌதி என்ன சொல்கிறானோ அதைத்தான் கேட்பார்கள்மலேசியாவிலும் அப்படித்தான்;  மலேசிய முதலாளி என்ன சொல்கிறானோ அதைத்தான் கேட்பார்கள். ஆனால் பங்களாதேசத்தவர்கள் கூறினால் எடுபடும் என்று கூறினார். இவர்களில் முதலாம் நபர் தவிர பிறருக்கு என்னைப்பற்றி நன்கு தெரியும் என்பதால் மேற்கொண்டு கருத்துக்கூறாமல் பேச்சு திசை திரும்பிவிட்டது.

      ரிஸானா நபீக் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் நாள் சௌதியிலுள்ள Naif Jiziyan kalaf Al- otaibi  என்பவர் வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். பாத்திரம் பண்டங்கள் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, குழந்தையைப் பராமரிப்பது அவளுக்கு இடப்பட்ட வேலைகள். 2005 மே மாதம் 25 ஆம் நாள் அதாவது ஒருமாத்தில் தனது முதலாளியின் 4 மாதக் குழந்தையைக் கொன்றுவிட்டார் என்று சிறையிலடைக்கப்பட்டார்.

      குழந்தையின் தாய் வெளிச்சென்றிருக்கும்போது குழந்தைக்கு ரிஸானா நபீக் புட்டிலிருந்து பால் புகட்டியுள்ளார். அப்படி பால் கொடுத்துக் கொண்டிருக்கும்போது மூக்கு வழியாக பால் வந்ததாகவும், அதனை துடைத்துவிட்டும் தொண்டையை தடவி விட்டுவிட்டும் குழந்தையை தொட்டியில் படுக்கவைத்ததாகவும் ரிஸானா நபீக் கூறுகிறார். ஆனால் முதலாளியம்மாள், குழந்தையை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டதாக கூறி ரிஸானாவை தனது செருப்பால் கன்னங்களில் மாற்றி மாற்றி அடித்துள்ளார். அதனால் ரிஸானாவின் கன்னத்தில் காயங்களும் மூக்கில் இரத்தமும் வடிந்துள்ளது. அதே நிலையில் சௌதி போலீசில் புகார் செய்ய ரிஸானா நபீக் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்திலும் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார். போலீஸ் ரிஸானாவை மிரட்டி ‘கழுத்தை நெறித்து கொன்றதாக வாக்கு மூலம் பெற்று வழக்குத் தொடர்ந்தது.

      ஜூன் 16, 2007 அன்று தவாமி நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அப்துல்லா அல் ரோஸ்மி, சரியத் சட்டப்படி ரிஸானாவுக்கு மரண தண்டனை வழங்கி மேல் முறையீடு செய்துகொள்ளவும் அனுமதி அளித்தார். முறையான மொழிபெயர்பு வசதியும், வழக்காட வழக்கறிஞர் வசதியும் ரிஸானா நபீக்குக்கு வழங்கப்படவில்லை என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளதும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.

      சர்வதேச தொழிலாளர் சங்கம் (ILO) ரிஸானா நபீக்காக சௌதி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. எப்படியும் தண்டனை உறுதி என்னும் நிலையை உணர்ந்த அவர்கள், குற்றம் சாட்டப்பட்டபோதுரிஸானாவின் உண்மையான வயது பதினேழுதான் என்பதை ரிஸானா நபீக்கின் பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ் ஆகியவற்றைக் ஆதாரமாகக்கொண்டு சர்வதேச குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். வேலை கிடைக்கவேண்டும் என்பதால் வயதை கூடுதலாகச் சொல்லி ஏஜென்ட் மூலம் கடவுட் சீட்டு பெற்றுள்ளதாகவும் வாதாடினர். உச்சநீதிமன்றமோ கடவுட்சீட்டிலுள்ள வயதையே ஏற்றுக்கொள்ளமுடியும் என்று அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டது.

      சரியத் சட்டத்திற்கு வயது ஒரு பொருட்டல்ல. அது குழந்தையாக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் நிலை ஒன்றுதான். அதுபோக ஒரு பெண்ணிற்கு முதல் மாதவிடாய் வந்துவிட்டாலே அவள் முழு முதிற்சியடைந்த பெண்தான் என்பதே அவர்களின் நிலைப்பாடு. அதுபோல ஒரு பையனுக்கு விந்து என்று ஒன்று வெளிவந்துவிட்டாலே அவன் முதிற்சியடைந்த ஆண் என்பதும் அவர்களின் நிலைப்பாடு. 

ரிஸானா நபீக் மீது சுமத்துப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் சில கேள்விகள்:

1. பிறந்து 4 மாதமேயான பச்சிளங்குழந்தையை ஒரு சிறுமியிடம் பராமரிக்க கொடுத்துவிட்டு தாய் வெளியில் சென்றது என்னவகை நியாயம் என்று தெரியவில்லை. அது முதல் தவறு. அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அந்த அம்மாவே பொறுப்பேற்க வேண்டும்.

2. வேலைக்கு சேர்ந்து ஒரு மாதமே ஆன நிலையில் குழந்தையை கொல்லும் அளவுக்கு ஒரு சிறுமியின் மனதில் குரோதம் ஏற்பட எவ்வித காரணமும் இல்லை. தனியாக நாடுகடந்து நாடு சென்று வாழும் ஒரு ஏழைச் சிறுமிக்கு ஒரு குறுகிய காலத்தில் மனக்குரோதம் ஏற்படும் என்று சொல்வோமானல் அவரைப்போல ஒரு அறிவிலி எவரும் இல்லை. இம் மரணம் ஒரு விபத்தாகவே கருதவேண்டும். ஆனால் நீதிமன்றம் அதனை பரிசீலிக்கவே இல்லை.

3. ஒருவேளை அச்சிறுமி கொலை செய்திருந்தால் இயல்பாக குழந்தையை தொட்டியிலிட்டுவிட்டு மூக்கில் பால் வடிந்ததாகவெல்லாம் முதலாளியம்மாளிடம் கூறியிருக்க மாட்டாள். பயந்துபோய் என்ன நடக்குமோ என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்திருக்கவேண்டும். அப்படி ஏதும் அறியாததுபோல் கூற வேண்டுமானால் கொலைசெய்து அனுபவப்பட்டிருக்க வேண்டும். வயிற்றுப் பிழைப்புக்காக பெற்றோர்களைப் பிரிந்து வெளிநாடு சென்றுள்ள ஒரு சிறுமியிடம் கொலை செய்த அனுபவங்கள் உள்ளதுபோல் போலிசும் அநீதிமன்றமும் நடந்துகொண்டது மனித இனத்திற்கே ஒரு அவமானம்.

4. கழுத்தை நெறித்து குற்றம் சாட்டியுள்ளனர். அப்படி கழுத்தை நெறித்து கொலை செய்திருந்தால் குரல்வலை உடைந்திருக்கும். பிரேத பரிசோதனையில் உண்மை தெளிவாக தெரிந்திருக்கும். ஆனால் சௌதி போலீசும் அநீதிமன்றமும் இந்த நவீனக்காலத்திலும் பிரேதப் பரிசோதனை செய்து உண்மையை அறிய அக்கரை காட்டவில்லை. இது ரிஸானா நபீக்கு அவர்களால் மறுக்கப்பட்ட நீதியையே காட்டுகிறது.

5. கொலைக்கு சாட்சிகள் எதுவும் இல்லை. குழந்தையின் பெற்றோர்கள் தவிர பிற சாட்சிகள் கிடையாது. அப்படி இருக்கும்போது பிரேத பரிசோதனை செய்யாமல், ரிஸானா நபீக்கிற்காக வாதாட வழக்கறிஞர்களுக்கு அநீதி மன்றம் ஏற்பாடும் செய்யாமல் பெற்றோர்களின் குற்றச்சாட்டை மட்டுமே கொண்டு மரண தண்டனை வழங்கியது கொடுமையிலும் கொடுமை.

6. கொலைக்கான காரணம் எதுவும் எவரும் கூறவில்லை. கொலைக்கான காரணம் என்று ஒன்று இருந்தே தீரவேண்டும். அதன் தன்மையைப் பொறுத்தே தண்டனைகள் அமைய வேண்டும்.  எடுத்துக்காட்டாக் ஒருவர் தொடர்ந்து ஒருவரால் துன்பப் படுத்தப் படுவதால் கெலை செய்தார் என்று எடுத்துக்கொண்டால் கொலை செய்தவருக்கு மரணதண்டனை வழங்குவது நியாயமாகாது.

சூழ்நிலையும் மறுக்கப்பட்ட அறிவியல் ஆய்வும் குற்றமற்றவள் என்பதை உணர்த்தும்பொழுதுகுறைந்தபட்ச சிறு தண்டனையை (அதுவே தவறு என்ற போதிலும்) வழங்கப்பட்டிருக்க வேண்டும்அதுவே மனசாட்சியும் அறிவும் உடையவர்களின் செயலாகும். ஆனால் கொடுமையான தலையை வெட்டி எரியும்தண்டனை ஏன்?

ஒரு சௌதியின் நலனுக்காக சரியத் சட்ட முகமூடி அவர்களுக்கு முக்கியம்இப்படி தண்டனைகள்வழங்குவதன் மூலம் பிற  தொழிலாளர்களையும் மிரட்டிவைக்கலாம் அல்லவாகடுமையான தண்டனைகள் வழங்கினால்தான் குற்றம் செய்பவர்கள் பயப்படுவார்கள் என்று ஊளையிடுபவர்கள் இங்கே சற்று யோசியுங்கள்.

அக்குழந்தை 4,5 வயது சிறு குழந்தை என்றும்  அவ்வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் அக்குழந்தையுடன் வீட்டு வேலைக்கார சிறுமி விளையாடிக் கொண்டிருக்கும்போது கால் தவறி அல்லது வேலைக்காரப் பெண் கால் தடுக்கி குழந்தை கீழே விழுந்து மண்டை உடைந்து இறந்துவிடுவதாக வைத்துக் கொள்ளவோம்அப்பொழுதும் குழந்தையின் பெற்றோர்கள் வேலைக்காரப் பெண் கொலை செய்துவிட்டாள் என்று குற்றம் சுமத்த முடியும்இங்கேயும் சாட்சிகள் இல்லைஅப்படியானால் குற்றம் சுமத்தப்பட்ட வேலைக்காரப் பெண் தான் செய்யவில்லை என்று சொல்லுவதை ஏற்று கொலைக்கான காரணச் சூழ்நிலைகள்பிரேதபரிசோதனைகள் செய்தும் அக்கம் பக்கத்தில் விசாரித்தும் தீர்ப்பு செய்யவேண்டுமா அல்லது பெற்றோர்கள்களின் குற்றச்சாட்டைக்கொண்டே தீர்ப்புச் சொல்வதாஒரு வேளை கொலையை நிருபிக்கவோ மறுக்கவோ முடியாத நிலை ஏற்படுமானால் குற்றம் சுமத்தப்பட்டவரை விடுதலை செய்வதே நியாயம்இங்கே குற்றம்சாட்டப்பட்ட வேலைக்காரப் பெண்ணின் வாக்கு மூலத்தை சௌதியின் அடியாள் பிஜே சொல்வதுபோல் ஏற்றகக் கூடாது என்றால் அது நீதியாமனசாட்சியற்ற மதவெறியா?
ரிசானாவிற்கு வழங்கப்பட்ட தண்டனைக்கான சரியத் சட்டம் பின்வருமாறு:

குரான் 2: 178 இறைநம்பிக்கையாளர்களேகொலை செய்யப்பட்டவர்கள் விஷயத்தில் பழிவாங்குதல் உங்கள்மீது விதியாக்கப்பட்டுள்ளதுசுதந்திரமானவனுக்குப் பதிலாக சுதந்திரமானவனும்அடிமைக்குப் பதிலாக அடிமையும்பெண்ணுக்குப் பதிலாக பெண்ணும் (பழிவாங்கப்படும்எனினும்(கொலைசெய்யப்பட்டஅவனுடைய சகோதர ர் மூலம் (கொலை செய்தஇவனுக்கு ஏதேனும் மன்னிப்பளிக்கப்பட்டால் அப்போது (கொலையாளிநல்ல வழக்கமுறையைப் பின்பற்றி (அதற்கான ஈட்டுத்தொகை முதியவற்றைநன்றியறிதலுடன் (கொலை செய்யப்பட்ட)  அவ(னுடைய பாத்தியஸதரி)ன் பால் நிறைவேற்றுதல் வேண்டும்இது உங்களுடைய இறைவனிடமிருந்து (உங்களுக்கு கிடைத்து)ள்ள சலுகையும் கிருபையைமாகும்ஆகவே இதற்குப் பிறகு எவரேனும் வரம்புமீறினால் அப்பொழுது அவருக்கு நோவினை அளிக்கும் வேதனை உண்டு.

குரான் 2:179 நல்லறிவாளர்களேகொலைக்குப் பழிதீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டுநீங்கள் உங்களை காத்துக்கொள்ளலாம்.

குரான் 5:45 மேலும் அ(வ்வேதத்)தில் நிச்சயமாக உயிருக்குப் பகரமாக உயிரையும்கண்ணுக்குப் பகரமாக கண்ணையும்மூக்குக்குப் பகரமாக மூக்கையும்காதுக்குப் பகரமாக காதையும்பல்லுக்குப்பகரமாக பல்லையும் (பழிக்கப் பழிவாங்க வேண்டுமென்றும்காயங்களுக்குப் பழிக்குப்பழி உண்டு என்றும் அவர்கள் மீது நாம் விதித்திருந்தோம்எனினும் எவரேனும் இதனை தர்ம மாக விட்டுவிட்டால் அது அவரு(டைய பாவத்துக்குபகரமாகிவிடுர்எவர் அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அத்தகையோர் அவர்கள்தாம் அநியாயக்கார ர்கள்.
(குர்ஆன் வசனங்களுக்கிடையில் வரும் அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்களையும் தொடரந்தார்போல் சேர்த்தே படியுங்கள்.)

            இச்சட்டம் ஒரு ஆடவனை நோக்கி கூறுகிறதுசுதந்திரமான உன்னை ஒருவன் கொன்றுவிட்டால் கொலைகாரனை உன் உறவினர்கள் கொலை செய்யலாம்உன்னுடைய அடிமையை ஒருவன்(சுதந்திரமானவன்கொலை செய்துவிட்டால் அவனுடைய அடிமையை நீ கொலை செய்துக் கொள்ளலாம்.உன் (சுதந்திரமானவன்வீட்டுப் பெண்ணை ஒருவன் கொலை செய்துவிட்டால் கொலை செய்தவனுடைய வீட்டுப் பெண்ணை நீ கொலை செய்யலாம் என்று கூறுகிறதுபாதிக்கப்பட்டவன் (சுதந்திரமானவன்)விரும்பினால் இழப்பீடுகள் (இரத்தப பணம்பெற்றுக்கொண்டு கொலை செய்தவனை மன்னிக்கலாம்.மன்னிக்க விருப்பம் இல்லை என்றால் பழிக்குப்பழியே விதியாகிவிடும்.

            சுதந்திரமானவாக உள்ள ஒருவன் அதாவது அடிமையாக இல்லாத எஜமான் இன்னொரு சுதந்திரமானவனின் சொத்துக்களான அவன் வீட்டுப்பெண்களையோ அல்லது அடிமைகளையோ கொன்றுவிடுவதனால் ஏற்படும் இழப்பிற்குஇழப்பை ஏற்படுத்தியவனின் வீட்டுப் பெண்களையோ அடிமைகளையோ இழந்தவன் கொலை செய்து இழப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பது மட்டுமே இச்சட்டத்தின் குறிக்கோள். கொலை செய்தவனை கொல் என்று இச்சட்டம் கூறவில்லை
மனித உயிர்களின் மதிப்பை வெளிப்படுத்துவதான மனிதாபிமானச் சட்டம் அல்ல இதுஅதனாலேயே இழப்பை இரத்தப்பணம் என்கிறதுபெண்கள்கூட ஒரு சொத்து என்பதையும் கூடுதலாக இச்சட்டம் நமக்கு புரியவைக்கிறது.

            இச்சட்டம் சரிதானா என்று சிந்தித்துப்பாருங்கள்கொலை செய்தவன் ஒரு சுதந்திரமானவனாக அதாவது இன்றையக் காலத்தில் முதலாளியாக இருந்தால் அவன் ரிசானா போன்று வேலைக்கு வந்த ஒருவரை கொலை செய்தால் அவன் வீட்டிற்கு வேலைக்கு வந்துள்ள இன்னொரு பெண்ணை கொலை செய்துக்கொள்ளச் சொல்லுகிறதுஎஜமானர்களுக்கு சேவை செய்யும் சட்டம்இது ஒரு சீரிய சட்டம் என்றும்,காலத்திற்கும்
பொருத்தமான சட்டம் என்றும் உதார் விடுகிறார்கள்.

            கூடுதலாக குர்ஆனுக்கு விரிவுரை எழுதியவர்களில் அதி சிறந்தவர் என்று போற்றப்படும் இப்னு கஸிர் என்பவரின் விளக்கத்தையும் படித்துக்கொள்ளுங்கள்.

The Command and the Wisdom behind the Law of Equality
Allah says;
O you who believe! Al-Qisas (the Law of equality) is prescribed for you in case of murder: the free for the
free, the slave for the slave, and the female for the female. Allah states: O believers! The Law of equality has been ordained on you (for cases of murder), the free for the free, the slave for the slave and the female for the female. Therefore, do not transgress the set limits, as others before you transgressed them, and thus changed what Allah has ordained for them.
The reason behind this statement is that (the Jewish tribe of) Banu An-Nadir invaded Qurayzah (another Jewish tribe) during the time of Jahiliyyah (before Islam) and defeated them. Hence, (they made it a law that) when a person from Nadir kills a person from Quraizah, he is not killed in retaliation, but only pays a hundred Wasq of dates. However, when a person from Quraizah kills a Nadir man, he would be killed for him. If Nadir wanted (to forfeit the execution of the murderer and instead require him) to pay a ransom, the Quraizah man pays two hundred Wasq of dates (double the amount Nadir pays in Diyah (blood money)). So Allah commanded that justice be observed regarding the penal code, and that the path of the misguided and mischievous persons be avoided, who in disbelief and transgression, defy and alter what Allah has commanded them. Allah said:
Al-Qisas (the Law of equality in punishment) is prescribed for you in case of murder: the free for the free, the slave for the slave, and the female for the female. Allah's statement:  (the free for the free, the slave for the slave, and the female for the female) was abrogated by the statement life for life (5:45).
However, the majority of scholars agree that the Muslim is not killed for a disbeliever whom he kills. Al-Bukhari reported that Ali narrated that Allah's
Messenger said:
The Muslim is not killed for the disbeliever (whom he kills). No opinion that opposes this ruling could stand correct, nor is there an authentic Hadith to contradict it. However, Abu Hanifah thought that the Muslim could be killed for a disbeliever, following the general meaning of the Ayah (5:45) in Surah Al-Ma'idah.
The Four Imams (Abu Hanifah, Malik, Shafii and Ahmad) and the majority of scholars stated that; the group is killed for one person whom they murder. Umar said, about a boy who was killed by seven men, "If all the residents of San`a' (capital of Yemen today) collaborated on killing him, I would kill them all.'' No opposing opinion was known by the Companions during that time which constitutes a near Ijma (consensus).
There is an opinion attributed to Imam Ahmad that;
a group of people is not killed for one person whom they kill, and that only one person is killed for one person. Ibn Al-Mundhir also attributed this opinion to Mu`adh, Ibn Az-Zubayr, Abdul-Malik bin Marwan, Az-Zuhri, Ibn Sirin and Habib bin Abu Thabit.
Allah's statement:
But if the killer is forgiven by the brother (or the relatives) of the killed (against blood money), then it should be sought in a good manner, and paid to him respectfully. refers to accepting blood money (by the relatives of the victim in return for pardoning the killer) in cases of intentional murder. This opinion is attributed to Abu Al-Aliyah, Abu Sha`tha', Mujahid, Sa`id bin Jubayr, Ata Al- Hasan, Qatadah and Muqatil bin Hayyan. Ad-Dahhak said that Ibn Abbas said: (But if the killer is forgiven by the brother (or the relatives) of the killed (against blood money), means, "the killer is pardoned by his brother (i.e., the relative of the victim) and accepting the Diyah after capital punishment becomes due (against the killer), this is the `Afw (pardon mentioned in the Ayah).''
Allah's statement:
...then it should be sought in a good manner, means, when the relative agrees to take the blood money, he should collect his rightful dues with kindness: and paid to him respectfully. means, the killer should accept the terms of settlement without causing further harm or resisting the payment.
Allah's statement:
This is an alleviation and a mercy from your Lord. means the legislation that allows you to accept the blood money for intentional murder is an alleviation and a mercy from your Lord. It lightens what was required from those who were before you, either applying capital punishment or forgiving. Sa`id bin Mansur reported that Ibn Abbas said, "The Children of Israel were required to apply the Law of equality in murder cases and were not allowed to offer pardons (in return for blood money).
Allah said to this Ummah (the Muslim nation):
The Law of equality in punishment is prescribed for you in case of murder: the free for the free, the servant for the servant, and the female for the female. But if the killer is forgiven by the brother (or the relatives) of the killed (against blood money). Hence, `pardoning' or `forgiving' means accepting blood money in intentional murder cases.'' Ibn Hibban also recorded this in his Sahih.
Qatadah said:  (This is an alleviation from your Lord), Allah had mercy on this Ummah by giving them the Diyah which was not allowed for any nation before it. The People of the Torah (Jews) were allowed to either apply the penal code (for murder, i.e., execution) or to pardon the killer, but they were not allowed to take blood money.
The People of the Injil (the Gospel – the Christians) were required to pardon (the killer, but no Diyah was legislated).
This Ummah (Muslims) is allowed to apply the penal code (execution) or to pardon and accept the blood money.'' Similar was reported from Sa`id bin Jubayr, Muqatil bin Hayyan and Ar-Rabi bin Anas.
Allah's statement:
So after this whoever transgresses the limits, he shall have a painful torment. means, those who kill in retaliation after taking the Diyah or accepting it, they will suffer a painful and severe torment from Allah. The same was reported from Ibn Abbas, Mujahid, Ata Ikrimah, Al-Hasan, Qatadah, Ar-Rabi bin Anas, As-Suddi and Muqatil bin Hayyan. The Benefits and Wisdom of the Law of Equality
Allah's statement:
And there is life for you in Al-Qisas, legislating the Law of equality, i.e., killing the murderer, carries great benefits for you. This way, the sanctity of life will be preserved because the killer will refrain from killing, as he will be certain that if he kills, he would be killed. Hence life will be preserved.
In previous Books, there is a statement that killing stops further killing! This meaning came in much clearer and eloquent terms in the Qur'an: (And there is (a saving of) life for you in Al-Qisas (the Law of equality in punishment).
Abu Al-Aliyah said,
"Allah made the Law of equality a `life'. Hence, how many a man who thought about killing, but
this Law prevented him from killing for fear that he will be killed in turn.'' Similar statements were reported from Mujahid, Sa`id bin Jubayr, Abu Malik, Al-Hasan, Qatadah, Ar-Rabi bin Anas and Muqatil bin Hayyan.
Allah's statement:
O men of understanding, that you may acquire Taqwa. means, `O you who have sound minds, comprehension and understanding! Perhaps by this you will be compelled to refrain from transgressing the prohibitions of Allah and what He considers sinful.' Taqwa (mentioned in the Ayah) is a word that means doing all acts of obedience and refraining from all prohibitions.

      ஒரு முஸ்லீம் அல்லாதவர் கொலை செய்யப்பட்டால் அதற்காக ஒரு முஸ்லீமைக் கொல்லக்கூடாதுஎன்று இசுலாமிய பெருமக்கள் கருதுவதாகவும் இப்னு கஸிர் கூறுவதையும் கவனியுங்கள்.
இச்சட்டப்படி...

1. சாட்சிகள் தேவையில்லை.

2. கொலைக்கான காரணம் தேவையில்லை. சாட்சியும்காரணமும் தேவை என்று குர்ஆன் எங்கும் கூறவில்லைமுதலாளி முறையிட்டாலே போதும்.

3. இச்சட்டத்திற்கு வயது வேறுபாடு கிடையாது.
            முகம்மதின் காலத்திற்கு ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஹமுராபி காலத்துச் சட்டம் இந்த பழிக்குப்பழி என்றச் சட்டம்யூதர்களும் இதனையே தங்களின் சட்டமாக நடைமுறைப்படுத்தியுள்ளனர்.இந்தச் சட்டம் ஒரு எஜமானனின் இழப்பை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளதுஇச்சட்டப்படி ரிசானா நபீக் தண்டிக்கப்பட்டுள்ளார்கொலைக்கான காரணம்சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஆராயப்படவில்லைசாட்சிகள் இல்லைசாட்சிகள் இல்லாத நிலையில் பயன்படுத்தக்கூடிய அறிவியல் ஆய்வுகள்தடவியல் மற்றும் பிரேத பரிசோதனைகள் நடத்தப்படவில்லைஎஜமானியம்மாளின் முறையீடை மட்டுமே எடுத்துக்கொண்டு சரியத் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கிறோம் என்று தலையை சீவித்தள்ள உத்திரவிட்ட இந்த நீதிபதிகள் நீதிபதிகளா?மதவெறியர்களா?


சமீபத்தில் நடந்த இன்னொரு நிகழ்வை எடுத்துக்கொள்வோம். முஸ்லீம் நாடான ரியாத்திலுள்ள ஃபையான் காம்தி என்ற மதகுரு தனது பெண் குழந்தை "லாமியா காம்தியைகற்பழித்து கொலை செய்துள்ளான். மருத்துவ அறிக்கை அந்த பெண்னின் எல்லா உறுப்புகளிலும்சித்திரவதை நிகழ்த்த பட்டுள்ளதும் அவளின்முதுகெலும்பு உடைக்கபட்டதாகவும், மலவாயும் சிதைக்கப்பட்டு தீயினால் சுடப்பட்டுள்ளதாகவும்சொல்கிறது.

கற்பழிப்புகளிலிருந்து உலகப் பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால் புர்கா அணியவேண்டும் என்று கூப்பாடுபோடும் மதவெறியர்களே. பெற்ற தந்தையே தன் குழந்தையை கற்பழிக்கும்போது புர்கா எவ்வாறு தடுக்கும்? அந்த குழத்தைக்கும் புர்கா போடவேண்டுமோ? அல்லது தந்தைக்கு முன்பாகவும் ஒரு மகளும் வரக்கூடாது என்று சட்டம் போடனுமோ? இசுலாமிய அறிவிலிகளே யோசிங்கள். இந்த காமக்கொடூரனுக்கு சரியத் சட்டப்படி இரத்தப்பணம் பெற்றுக்கொண்டு விடுதலை அளித்துள்ளது அநீதிமன்றம். இதற்கு இன்னொரு காரணமும் சொல்லி நியாப்படுத்துகறார்கள். அதாவது இந்தக் கொலைக்கு காரணம் ஏதும் இல்லையாம். ரிசானாவுக்கு “காரணம்” ஆராயப்பட மறுத்தவர்கள் முல்லாவுக்கு “காரணம் இல்லை” என்று சப்பை கட்டு கட்டுகிறார்கள்.

1. சரியத்சட்டப்படி குழந்தைகள் தந்தைக்கு உடமையானவர்கள். அப்படியானால் இரத்தப்பணம் கற்பழித்த அந்த காமுகனுக்குத்தான் அதாவது தனக்குத்தானே கொடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் குழந்தையின் அம்மாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் சரியத்து எங்கே போனது?

2. இந்த காமக்கொடூரனுக்கு இரத்தப்பணம் பெற்றுக்கொண்டு விடுதலை செய்வதேன்? குழந்தையின் அம்மா மன்னித்ததால் இரத்தப்பணம் கொடுக்கப்பட்டது என்று அறிவுகெட்டத்தனமாக உளரவேண்டாம். காரணம் குழந்தைக்கு பாத்தியப்பட்டவன் அந்த தகப்பனே. அது மட்டுமில்லாது தனது கணவன் என்ற நிலையில் அந்த அம்மா அவனுக்கு மன்னிப்பு வழங்குவது இயல்பானது. இதை அனுமதித்தால் இரத்தப்பணம் கொடுக்கக் கூடிய பணக்காரன் எவனும் தனது மகள்களை கற்பழிக்கலாம் என்பதை சரியத் சட்டம் கூறுகிறது என்று பொருளாகும். சௌதிகாரனுக்கென்றால் சரியத் பல்டி அடிக்குமோ?

      கடுமையாக தண்டித்தால்தான் குற்றங்கள் நடக்காது என்று ரிசானாவின் படுகொலைக்குகூக்குரலிட்ட பிஜே வகையரா மதவெறியர்களே, இதற்கு மௌனம் காப்பது ஏன்?

            ஆனால் பல நாடுகளும்நாட்டின் மக்களும்மனித உரிமை அமைப்புகளும்தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் போன்ற சில காட்டுமிராண்டி அமைப்புகள் தவிர பிற இசுலாமியர்களும் வருடங்களாக போராடியும்,வேண்டிக்கொண்டபோதும் மயிரளவுக்குக்கூட செவி சாய்க்காமல் ரிசானாவின்  தலை சீவப்பட்டுவிட்டது.சௌதி சிறைச்சாலைகளில் இன்னும் 'புத்தர் சிலையை வைத்திருந்தார்பைபிள் வைத்திருந்தார்மந்திரம்ஓதி மணிக்கட்டில் கட்டும் கயிறு கட்டியிருந்தார்என்றெல்லாம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மரதண்டனை வழங்கப்பட்டு தலைசீவப்பட  காத்திருக்கிறார்களர்சௌதிதுபாய் போன்ற நாடுகளில் தொழிலாளர்களாகசென்றுள்ளவர்கள் தங்கள் தங்குமிடங்களில் தங்கள் தெய்வங்களை வணங்குவதைக்க தடுக்கும் அரசின் நடவடிக்கை குறித்து "அங்கேயும் போய் அநாச்சாரங்களை புகுத்த நினைத்தால் அரசாங்கம் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கையா பார்க்கும்என்று இசுலாமியர்கள் தங்கள் மதவெறியைக் கக்குகின்றனர்.ஆனால் பிற நாடுகளில் தங்களுக்கு மதவழிபாட்டு உரிமை வேண்டும் என்று கேட்கின்றனர்ஜனநாயகம் பேசுகின்றனர்.

            ரிசானாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்ட தினத்தன்று சந்தித்த மௌலவி ஏ.ஜே.எம்.மக்கதூம் ரிசானாவின் பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் சிலவரிகள் பின்வருமாறு:

            'இறுதி ஆசை மற்றும் மரணசாசனம் ஏதும் உண்டா என்று கேட்டேன்அதற்கு அவர் "ஊருக்கு நான் எப்பொழுது செல்வதுஎன்று கேட்டார்என்றும், "என்னை மன்னித்து விட்டுவிடச் சொல்லுங்கள் நானா"என்று கெஞ்சிய குரலில் அவர் கூறியது எனது உள்ளத்தை உருக்கிவிட்டதுஎன்றும் எழுதியுள்ளார்இந்த இரண்டு வரிகளை என்னால் தட்டச்சு செய்ய முடியாமல் பல மணிநேரம் கழிந்தது

                        போதுமான மொழிபெயர்ப்பு வசதியைக்கூட இந்த மிருகங்கள் ஏற்படுத்தித் தராததால்கடைசி நிமிடங்கள் வரை தான் குற்றம் செய்யவில்லை என்பதால் மன்னிப்பு கிடைத்துவிடும் என்று அல்லாவின் கருணைமீது நம்பிக்கையுடன் வருட காலங்களை சிறையில் கழித்திருக்கிறாள் இந்தச் சிறுமி.ஒவ்வொருநாளும் எப்படி கழிந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்களஇந்த 7 வருட சிறைதண்டனையே இதற்கு அதிகம்ஆனால் மரணதண்டனை…….

            எனது காதில் "ஊருக்கு நான் எப்பொழுது செல்வதுஎன்ற ரிசானா நபீக்கின் குரல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
உங்கள் காதுகளில் அது கேட்கிறதாகேட்டால் இந்த காட்டுமிராண்டிகால சரியத் சட்டத்தையும், மதத்தையும் தூக்கி எரியுங்கள். மனிதர்களாக வாழுங்கள்.
ஒன்றை மறந்துவிடாதீர்கள்ரிசானா நபீக்கின் சீவப்பட்ட தலை புதைக்கப்படவில்லைவிதைக்கப்பட்டுள்ளது.ஒருநாள் அரபு தேசங்களின் தொழிலாளர்கள் இதற்கு பழிவாங்குவார்கள்.


4 comments:

  1. Anonymous9:15 AM

    Everything is very open with a really clear explanation
    of the issues. It was truly informative. Your website is very helpful.

    Thanks for sharing!

    Also visit my website - razr

    ReplyDelete
  2. Anonymous9:27 AM

    Thank you for sharing your info. I truly appreciate
    your efforts and I am waiting for your further write ups thanks once again.


    My web page ... protektor za ekran

    ReplyDelete
  3. Anonymous2:26 AM

    ஏண்டா மானங்கெட்ட கவிமதியே! நீ இந்த கட்டுரையை ஆதரிக்கிறாயா?

    ReplyDelete
    Replies
    1. Anonymous10:19 AM

      ஏண்டா அரபிக்கு பொறந்த Anonymousசே கவிமதி ஆதரிப்பதால்தானே இதை வெளியிட்டிருக்கிறார். இதுகூட தெரியாதா .....மவனா இருக்கியே.

      Delete