Sunday, March 23, 2014

நிரந்தர அடிமைகள்

அடேய் பேரினவாத கட்சிகளா
ஏதாவதொரு பொய்யை பிரித்துவிட்டு
எங்கள் ஓட்டுகளை வாங்கியபின்
திரும்பி பார்ப்பதில்லை என
"சத்தியபிரமாணம்" எடுத்துவிட்டு
பிறகு
கோடிகளில்
உங்கள் குடலை நிரப்புங்கள்

ஒரு சிறு வேண்டுகோள்
குறைந்த அளவு எங்களை
பட்டினியில் சாக விடாமல்
பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு ஓட்டு போடவாவது
நாங்கள் உயிரோடிருக்க
வேண்டுமல்லவா.

No comments:

Post a Comment