Friday, March 07, 2014

துரோகிகளை துரத்த வாருங்கள் விடுதலைச் சிறுத்தைகளே

நடந்துவிட்ட துரோகம் என்பது கட்சிக்கோ, எங்களுக்கோ அல்லது திருமா அண்ணனுக்கோ ஒரு திடீர் திருப்பமல்ல.

எங்கள் தலைவருக்கு வெளியில் இருக்கும் துரோகங்களைவிட உள்ளே ஆட்கொண்டிருக்கும் துரோகங்களே அதிகமதிகம். இவை அத்தனை துரோகங்களையும் நெஞ்சில் வாங்கி கட்சியையும், எங்களையும் ஒன்றி பிணைந்திருப்பவர் அவர்.

ஒரு உண்மை தொண்டன் தீக்குளிக்கவும், தோழர்கள் துரோகிகளின் கொடும்பாவிகளை எரிக்கவும் செய்கிறார்கள் என்றால் எங்கள் முதுகில் குத்தப்பட்டதை உணர்ந்தவர்களின் ஆவேசம் அது.

தலைவர் மீதுகொண்ட எல்லையற்ற அன்பாலும், தோழர்களின் சீறிய உழைப்பாளும் தலைவர் அவர்களை தனித்து பெருவாரி வாக்கு வேறுபாட்டில் வெற்றிபெறவைத்து துரோகிகளின் முகத்தில் கரிபூச வைப்பதில்தான் நமது எதிர்கால வரலாறு எழுதப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

தனித்து திரண்டு தமிழகம் மிரள நாங்கள் வளர எங்களை தூண்டிய கருணாநிதி கும்பலே உங்கள் கட்சிக்கு ஆயுள் இருந்தால் பார்...எங்களின் மூச்சுகளில் வாழும் எம்மின எழுச்சியினை..

உன் பாணியிலேயே சொல்லுகிறேன்..
இன்றைய திரழ்ச்சி... நாளைய எழுச்சி...

No comments:

Post a Comment