Saturday, February 23, 2019

01.எச்சரிக்கை நிருவாகம் பொருப்பல்ல...


1.இங்கே நான் எழுதும் கட்டுரைகள் எதிர்காலத்தில் மதங்கள் எனும் கற்பிதங்கள் எனும் நூல் வடிவம் பெற இருப்பதால் மக்களை மூடநம்பிக்கையிலிருந்து வெளிக்கொணர வேண்டி இக்கட்டுரைகளை முழுமையாகவோ, பத்தியாகவோ, வார்த்தையாகவோ பயன்படுத்துவார் கட்டாயம் இந்நூலின் பெயரையும், என் பெயரையும் (கவிமதி) குறிப்பிட வேண்டுகிறேன்.

2. இக்கட்டுரைகளில் இடம்பெறும் கருத்துகள் சடங்குகள் பெயரில் மக்களை ஏமாற்றும் எல்லா மதங்களுக்கும் பொருந்தும் (ஒரு சில வேறுபடலாம்). எனவே அப்பாடா என்னை சொல்லவில்லை என யாரும் வருத்தபட வேண்டாம். இவற்றை வாசிக்கும் போது உங்களுக்கு கோபம் வந்து நரம்பு புடைத்தால் அறிந்துக் கொள்ளுங்கள் நீங்களும் உங்கள் மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றுகிறீர்கள் மற்றும் ஏமாறுகிறீர்கள் என்று.

3. இக்கட்டுரைகளை வாசித்து தங்களுக்குள் தர்க்கரீதியான விவாதங்கள் நடத்தி அறிவுபூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் சிந்தித்து நீங்கள் உங்கள் மதங்களை துறந்து மனிதனாக எல்லோரையும் அரவணைத்து வாழ வேண்டும் என்பதே என் விருப்பமே தவிர யாருடனும் விதண்டாவதம் நடத்துவதோ, உங்கள் நம்பிக்கையை உடைப்பதோ, யாரையும் திருத்துவதோ என் நோக்கம் அல்ல.

இக்கட்டுரைகளை வாசிப்பதால் நிகழும் உங்களின் மன மாற்றத்திற்கு நிருவாகம் பொருப்பல்ல என்பதனையும் பேரன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றிகள்
கவிமதி

No comments:

Post a Comment