Saturday, February 23, 2019

நூறு அடிமைகளின் உதவியோடு நான்கு திருடர்கள்

ஒரு ஊரில் நூறு அடிமைகளின் உதவியோடு நான்கு திருடர்கள் சேர்ந்து திருடிப் பிழைத்து வந்தனர். பெரிய திருடன் சபலப் பேர்வழி.. இரண்டாமவன் பரவாயில்லை அவனுக்கு பெண் பித்து மட்டும்தான். இவர்கள் அளவுக்கு மூன்றாமவன் மோசமில்லை அவன் ப்ளேபாய் மட்டும்தான். நான்காமவனுக்கு பெண்களோடு தனியறையில் உலகவிசயங்கள் பேசிக்கழிப்பது பிடிக்கும். அவ்வளவுதான்.
இந்த நான்குபேரும் ஊரையும் மார்கத்தையும் காக்கவந்த ரட்சகர்களென்று அந்த நூறு அடிமைகளும் நம்பினர். இவர்களைப் பற்றி யாராவது கேள்வி கேட்டால், கேட்பவர் வீட்டுப் பெண்களுக்கு வேசிப்பட்டம் சூட்டி மகிழும் பரந்த உள்ளம் கொண்டவர்கள் அவர்கள். இப்படியாக இவர்களின் தொடர் பிரச்சாரத்தால் ஊருக்குள் நிறையப் பெண்கள் வேசிப்பட்டத்தோடு திரிந்துகொண்டு இருந்தனர்.
ஆச்சா...!!
ஒருநாள் பங்கு பிரிப்பதில் அவர்களுக்குள் தகராறு. முதலாமவன் நான்காமவன் மீது புகார் தெரிவித்தான். இரண்டாமவனும் மூன்றாமவனும் ஆதாரம் கொடுத்தனர். அந்த நூறு பேரும் "ஆமா ஆமா ஆமோய்.." என்று கோரஸ் பாடினார்கள்.
'அந்நியப் பெண்களோடு தனியறையில் இருந்து உலக விசயம் பேசிய குற்றத்துக்காக உன்னை ஊரை விட்டு விலக்குகிறோம்..' திருச்சபை தீர்ப்பு சொன்னது.
இன்னொருநாள் ஊரில் ஒரு பெரிய குடும்பத்தில் கணவன் மனைவிக்கு பிரச்சனை. பஞ்சாயத்து முதலாமவனிடம் வருகிறது. 'இப்படிப்பட்ட ஒரு கணவனோடு சேர்ந்து வாழ முடியாது நீங்கள் பிரிந்து விடுங்கள்' திருச்சபை தீர்ப்பு சொல்கிறது. இரண்டாவது மூன்றாவது நபர்கள் ஆதாரம் உள்ளது என்றார்கள். அடிமைகள் நூறு பேரும் "ஆமா ஆமா ஆமோய்..." கோரஸ் பாடுகிறார்கள்.
பிரிந்து வந்த பெண்ணோடு ராடு வியாபாரம் செய்துவந்த முதலாமவன் ஆர்வக்கோளாரில் வீடியோ காலிங் செய்துவிட கால் ரெக்கார்டாகி பஞ்சாயத்தாகி லட்சங்களில் பைசலாகி.... ஒரு வழியாய் முடிந்த கதை குறித்து கேள்வியெழுப்பிய எல்லார் பொண்டாட்டிகளும் வேசிகளாக்கப் பட்டனர். ஆனாலும் கேள்விகள் ஓயவில்லை.
தலைவர் ஆபீஸ் பாத்ரூமின் ரெண்டாவது கதவில் காவல்காத்தபடி இரண்டாமவனும் மூன்றாமவமும் ஆதாரம் இல்லையென்றனர். 'எங்கள் தலைவர் தங்கம் போன்றவர்.. அவர்மீது அவதூறு செய்பவர்களின் மனைவிகள் வேசிகள்..!!' திருச்சபை தீர்ப்பு சொல்லியது. அடிமைகள் நூறு பேரும் "ஆமா ஆமா ஆமோய்..." கோரஸ் பாடினர்.
ஒரு சுபயோக சுப தினத்தில், ஒரு கோயமுத்தூர் குசும்பனிடம் ஆதாரம் சிக்கிக்கொள்ள முதலாமவன் ராடு எலிப்பொரியில் மாட்டிக்கொண்டு சின்னாப்பின்னமாய் நசுங்கிப் போனது.
நசுங்கிய ராடோடு ஓடிய கிழட்டு பெருச்சாளி திரும்பி வராது.. இனி இந்த தொழிலும் நூறு அடிமைகளும் நமக்குத்தான் எனச் சப்புக்கொட்டிய இரண்டாமவனும் மூன்றாவனும் முதலாமவனை முத்தலாக் செய்து திருச்சபை தீர்ப்பு சொன்னது. நூறுபேர்க் கூட்டம் "ஆமா ஆமா ஆமோய்..." என்றது.
முதலாமவன் தோண்டிவைத்த குழியில் இரண்டாவது மூன்றாமவனும் விழுந்துவிட இவன் மீது அவனும், அவன்மீது இவனும் மாற்றி மாற்றிச் சேரள்ளிப் பூசிக்கொண்டனர். வேடிக்கை பார்த்தபடி அடிமைக்கூட்டம் "ஆமா ஆமா ஆமோய்...!" என்று கத்திக்கொண்டிருந்தது.
"நான்குபேரும் திருடர்கள்.. இனி திருச்சபைக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை..! இனி இந்தத் திருச்சபையின் திருட்டையெல்லாம் புதிய நிர்வாகிகள் கவனித்துக் கொள்வார்கள்.." புதிய திருடர்களின் அறிக்கையையைப் பார்த்து "ஆமா ஆமா ஆமோய்..." எனப்பாடி மகிழ்ந்தது கூட்டம்.
முன்னாள் திருடர்களில் சிலர் வீடியோ வெளியிட்டனர்.
"நாங்கள் செய்தது தவறுதான்.. அல்லாவின் பெயரால் எங்களை மன்னியுங்கள்.."
கண்ணீர் வடித்தபடி அந்த அடிமைகள் கூட்டம், "ஆமா ஆமா ஆமோய்...!!" என்று அழுதுகொண்டிருக்கிறது.
🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦
நன்றி:
Samsu Deen Heera

No comments:

Post a Comment