Saturday, February 09, 2019

காதலர் தினமும் நமது ஆதரவும்

*காதலர் தினமும் நமது ஆதரவும்*

நாம் ஏன் காதலர் தினத்தினை ஆதரிக்கவேண்டும் என யாராவது கேட்டால் உடனடியாக ஒரு பதில் என்னவெனில் *மதவாதிகளும், மிதவாதிகளும் எதிர்க்கின்றார்கள் எனவே நாம் ஆதரிக்கிறோம்* என்றுவிடலாம். ஆனால் நமக்கு பிடிக்காத ஒருவர் அல்லது ஒரு கூட்டம் ஒருவிடயத்தை எதிர்க்கிறது என்பதாலேயே நாம் அவற்றை ஆதரிப்பது அறிவுடைமையாகாது. ஆதாரிப்பதிலோ, எதிர்ப்பதிலோ சமுதாய மக்களுக்கு அதிலிருக்கும்  நுணுக்கமான அரசியலை எடுத்துச் சொல்வது நமது கடமையாகும்.

காதலர் தினம் என்பது இந்தியாவை பொருத்தமட்டில் பெரும்பாலும் எதிர்மறை சேர்க்கையாளர்களை (ஆண்+பெண்) கொண்டே கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் காதல் என்பது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது காதல் என்கிற ஒரு உணர்வு இல்லாத உயிரினமே இப்புவியில் இல்லை எனலாம். ஆனால் தற்போதைய சூழலில் *“காதலர் தினம்”* என கடைபிடிக்கப்படுவது ஆண், பெண் என்கிற எதிர்மறை சேர்க்கையாளர்கள் பழகும் விதத்திலானது மட்டுமல்ல. இது *ஓரினச்சேர்கையாளர்களுக்கென்றே* தொடக்கத்தில் உருவாக்கப்பட்டது.

சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் வாலண்டைன் என்கிற ஐய்ரோப்பிய சிறை அதிகாரி ஒருவர் சிறையில் கைதிகளுக்கிடையில் ரகசியமாக பழக்கத்தில் இருந்த ஓரினச்சேர்க்கையை வெளிப்படையாக நடத்திக்கொள்ள அனுமதியளித்தார். இதனால் சிறைக்குள் நடக்கும் வன்முறை செயல்கள் கட்டுக்குள் வந்ததாக பதிவு செய்தார். இதை தொடர்ந்து ஓரினச்சேர்க்கையில் மகிழ்ந்த கைதிகள் ஒன்றுக்கூடி சிறையதிகாரிக்கு ஒரு விருந்து உபரிசரிப்பு அளித்தனர். அன்று முதல் அவர் பெயரில் அந்த நாள் *“வாலண்டைன் தினமாக”* சிறைவாசிகளால் கொண்டாப்பட்டது. அதுவே தற்போது காதலர் தினமாக கடைபிடிக்க வைக்கப்பட்டு உலக வியாபார சந்தையாளர்களால் பெரிதாகப்பட்டு இன்று (பிப்ரவரி 14ந் தேதி) *காதலர் தினம் என்கிற பொதுப்படையான பெயரில் ஓரினச்சேர்க்கையாளர்களாலும், எதிர்மறை சேர்க்கையாளர்களாலும்* கொண்டாடப்பட்டு வருகிறது.

காதலர் தினத்தினை நாம் ஆதரிப்பது முழுக்க முழுக்க சாதியொழிப்பு, ஆண் பெண் விடுதலை என்பதனை முன்வைத்தே. தற்போதைய சூழலில் தமிழகத்தில் தொடர்ந்து வரும் *“ஆணவபடுகொலைகள்”* சாதி தவிர்த்து காதலிக்கும் இளவயதினரை குறிவைத்தே நடத்தப்படுகிறது. சாதி மதயொழிப்பின் அடிப்படையில் நாம் இப்படிபட்ட காதலர்களை ஆதரிப்பதன் மூலம் சமத்துவம் ஓங்குவதுடன் எதிர்காலத்தில் சாதி, மதம் என்கிற ஆணவம் அழிந்து இந்திய துணைக்கண்டத்தில் மக்கள் அனைவரும் மனித இனமென்ற ஒரே இனமாக வாழவேண்டும் என்பதே நமது அவா.

*காதலை எதிர்ப்பவர்களின் அச்சமே மதம், சாதி, இவற்றின் சடங்குகள் என்கிற பெயரில் ஆண், பெண் அடிமைகளை உருவாக்கி வைத்திருக்கும் கட்டுக்கதைகளும், சாதி, மத உணர்வும் உடையும் என்பதும், இவற்றின் பெயரால் தாங்கள் அடைந்துவரும் அரசியல், பொருளாதார இலாபங்கள் பாதிக்கப்படும் என்பதேயாகும்*

அடுத்து இதில் ஓரினச்சேர்க்கையினை நாம் ஆதரிப்பதும் இதே சாதி, மத எதிர்ப்பின் அடிப்படையில் தான் எனலாம். ஓரினச் சேர்க்கையாளர்களால் முதன்முதலில் *மக்கள் தொகை கட்டுக்குள் வரும்*, *குடும்பம் என்கிற* லொவ்கீக வாழ்க்கை முறை அழிக்கப்பட்டு இதன் மூலமாக ஆண், பெண் மீதான *”குடும்பம் சுமத்தல்”* , குடும்பத்திற்கான தன் வாழ்நாள் தியாகம் செய்தல், தனக்கான வாழ்க்கையில் எந்த ஒரு நலனும் பேணாதிருத்தல் என்கிற வாழ்க்கை சுமை குறைக்கப்பட்டு இதன் காரணங்களால் எழும் *“ஒருதலை சுமை”* குறைக்கப்பட்டு ஆண், பெண் அனைவரும் சமமாகவும், தங்களுக்கு தேவையானவற்றை தாங்களே ஏற்படுத்திக்கொண்டு மகிழ்வாக வாழவும் வகைசெய்கிறது. மேலும் ஓரினச்சேர்க்கையால் பால்வினை நோய்களும் கட்டுக்குள் வரலாம்.

எங்கெல்லாம் சாதி, மத அடிப்படையில் சமத்துவம் பாதிக்கபடுகிறதோ அங்கெல்லாம் புகுந்து கிளர்ச்சி செய்து மக்களை சாதி, மத போதனையிலிருந்து வெளிக்கொண்டுவருவதும் இதன் மூலம் சமூக வாழ்க்கை முறையில் பற்பல மாற்றங்களை கொண்டுவந்து அனைத்து சமூக மக்களும் சமநிலை கண்டு தங்களுக்கென இயற்கையால் வழங்கப்பட்டிருக்கும் *ஒற்றை வாழ்க்கையினை* பெரும் மகிழ்வோடும், சகோதரத்துவத்துடனும் வாழவேண்டும் என்பதற்காகவே காதலர் தினத்தினையும் அதுனுடன் இயற்கையாக பிண்ணிபினைந்திருக்கும் ஓரின மற்றும் எதிரின சேர்க்கையாளர்களையும் ஆதரிக்க மக்களாகிய நம் அனைவருக்கும் பெரும் கடமையுண்டு.

No comments:

Post a Comment