Thursday, November 24, 2005

பெத்த கடன்

எந்தபுள்ளைக
ஆண்டவன பாத்துச்சி
அப்பனாத்தாள தவிர

அள்ளி அள்ளி
கொடுத்ததுக்கே
ஆயுசுபூரா
கடனாளியாயிட்டோம்

களச்சிபோயிவர
ஆத்தாவுக்கு காலமுக்கவும்
ஒழச்சிவர அப்பனுக்கு
ஒடலமுக்கவும்
முடியல

புலம்பெயர்ந்தப்பவே
புடிச்சிபோச்சி
இந்த தரித்திரம்

அடுத்த சென்மத்திலாவது
ஆடு,மாடுகளா பொறந்து
அசந்து தூங்கறவுக கூட
அசப்போட்டுகிட்டே பேசணும்

6 comments:

  1. அன்பின் அசன்,

    அருமை அருமை. அப்படித்தான் நாங்களும் நினைத்தோம். ஆனால் விதி வலியது.

    ReplyDelete
  2. நன்றிகள்
    அன்பின் மூர்த்தி

    நான் கவிமதியாகி வெகுநாட்களாகிவிட்டது மறந்துவிட்டீர்களா

    இனி கவிமதி என்ற பெயரையே பயன் படுத்தவும்

    ReplyDelete
  3. அருமையான வரிகள்
    ஆழ் மனதை தாக்கியது

    ReplyDelete
  4. கவிமதி.......

    அருமையாக வடித்திருக்கிறீர்கள்

    வாழ்த்துகள்

    -அஜீவன்

    ReplyDelete
  5. கவிமதி

    அருமையாக வடித்திருக்கிறீர்கள்
    வாழ்த்துகள்

    ReplyDelete
  6. கவிமதி

    அருமையாக வடித்திருக்கிறீர்கள்

    வாழ்த்துகள்

    ReplyDelete