Wednesday, June 14, 2006

குருட்டு நம்பிக்கை

நவீனங்களுக்குள்
புகுந்துக்கொள்கிரது உலகம்.
எவர் தன்னைப்பற்றி
எது சொல்லினும்
கவலைகொள்ளாதது

ஒரு போர்வக்குள்ளாக
அடங்கிவிட்டு
இன்னும் இரவு
இருட்டென்றே எண்ணியுறங்கும்
மனிதரைப்போல்

பிரபஞ்சங்களனைத்தும்
தனக்குள்ளாகவே
நிகழ்கிறதென்ற
குருட்டு நம்பிக்கையின்

நவீனங்களுக்குள்ளேயே
புகுந்துக்கொள்கிறது
உலகம்.

No comments:

Post a Comment