Saturday, October 20, 2007

பிறவிப்பயன்

ஒழுக்கமா திண்ணுப்புட்டு
உபாதைன்னு
ஊர்பாதையில கழிக்கிற
கழிவுதாங்க நாங்க

எழுத்தாளர்களுக்கு இருப்பதுப்போல
எங்களுக்கும் நிறையவுண்டு
இணை, துணை, புனை பெயர்கள்

மனுச பயக
உதாசினப்படுத்தின எங்கள
தள்ளாடியபடி
தலையில் சுமக்குறாங்க
சில கடவுள்கள்

அரசு தொட்டில்கூட இல்லாத
அனாதைங்களனாலும்
பெருமைதாங்க எங்களுக்கு

வெட்டித்தனமா
மதங்கள் பேசும்
மனுசங்களா இல்லாம

மலமா இருந்தாலும்
மத்தவங்களுக்கு
உதவுறமேன்னு

No comments:

Post a Comment