Saturday, October 20, 2007

செருப்புகளும் மதங்களும்

விற்பனை சந்தையில்
நிறைய
குவிந்து கிடக்கின்றன
செருப்புகள் போல்
மதங்களும்

தங்களுக்குள்
விவாதித்து விவாதித்து
தாங்களாகவே
அடித்துக் கொள்வதிலும்
சளைத்தவையில்லை
ஒன்றையொன்று

அளவுகளிலும்
அழகுகளிலும் தான்
வெவ்வேறாக
இருக்கின்றன

சில அறுந்தும்
சில தேய்ந்தும்
செருப்புகளை போலவே

பல வேளைகளில்
செருப்புகள்
உயர்வானவைதான்

மனிதயினத்தை
காவுகள் கேட்கும்
மதங்களைவிடவும்

1 comment:

  1. அன்பு கவிமதி அவர்களுக்கு மேற்க்கத்திய நாடுகளின்
    அனைத்தையும் காப்பியடிக்கும் அனைவரும் அவர்களுக்கு பிறந்தவர்கள்
    என்ற உங்களின் வார்த்தை பிரயோகம் செருப்பால் அடித்தது போல் இருக்கிறது.
    உலகில் மனித இனத்தை கீழாக அழித்தவர்கள் அமெரிக்கர்களும்,ஐரோப்பியர்களும் அவர்களோடு இப்போது நன்றி கெட்ட
    யூதர்களும்,ராஜபக்சேவும் இதை உணர்த்தும் உங்கள் கவிதை அருமை.

    ReplyDelete